Friday, November 18, 2011

ஜெ...கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்


ஆட்சிக்கு வந்து முழுதாக ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் தமிழக முதல்வர் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்துமே மக்கள் விரோத  அல்லது மக்களை வருத்தப்பட வைக்கும் விசயங்களே.

எடுத்தவுடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் காட்டிய தயக்கமும்  அதனால் பள்ளி சென்றும் குழந்தைகள் படிக்க முடியாத சூழ்நிலையால்  படித்தவர் முதல் பாமரர் வரை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் மீது எரிச்சல் ஏற்பட்டது.

பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போவதாக அறிவித்தது. எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். வேலை இல்லாத ..... எதையோ எடுத்து .....தானாம் என்று. அது போல் தான் இருக்கு இந்த அரசும். பணியாற்ற வேண்டிய பணிகள் பல இருந்தும் ஒன்றுக்கும்  உதவாத இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது.

அடுத்து சமீபத்தில், முந்தய அரசு நியமித்த ஒரே காரணத்திற்க்காக பதிமூன்றாயிரத்திர்க்கும் மேற்பட்ட கிராம நல பணியாளர்களை  மூன்றாவது முறையாக வீட்டுக்கு அனுப்பியது எல்லோரையும் பரிதாப பட வைத்தது. என்ன தான் அவர்களால் அரசுக்கு எந்த பலனும் இல்லை என்றாலும் திடீரென்று அரசு பணியில் உள்ள ஒருவரை வீட்டுக்கு அனுப்பினால் அதை நம்பி வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வாழ்வில் மண் அள்ளி போடுவதற்கு சமம்.

தற்போது எல்லாவற்றுக்கும் சிகரமாக மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை தாறு மாறாக ஏற்றி இருப்பது மீண்டும் அவருடைய ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆன மாதிரியே தெரிகிறது. என்ன? இந்த தடவை ஆரம்பத்திலே கவுன்ட் டவுன் ஆரம்பித்து விட்டது.

ஊருக்கு போகும் போது எழுவது ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்  திரும்பும் போது நூற்றி இருபது ரூபாய் பஸ்சுக்கு கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் கஷ்டமாக தெரியாது. இன்றும் நம் ஊரில் காசை எண்ணி எண்ணி செலவு செய்பவர்களும் பயணத்துக்கான டிக்கெட் காசை தவிர டீ குடிக்க கூட காசில்லாமல் பயணம் செய்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களை பற்றி எல்லாம் இந்த அரசு நினைத்து பார்க்க வேண்டாமா?

அடுத்து பால் விலையை லிட்டருக்கு ஆறு ருபாய் உயர்த்தியது. இதனால்  பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை எளியவர்களே. பால் விலை உயர்வினால் இயல்பாகவே கடைகளில் டீ, காப்பி விலைகள் உயர்த்தப்படும். அது மட்டுமில்லாமல் ஏழை நடுத்தர பணக்காரர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு விலை ஏற்றம் இது.

மின் கட்டணமும் வேறு உயர்த்த போகிறார்களாம். அதற்கு சொன்ன காரணம் தான் சிரிப்பை வரவழைத்தது. பிரதமர் மண்மோகன் சிங் நான் சொல்வாதை கேக்க மாட்டார் என அன்னை சோனியா சொன்னால் அதை  உங்களால் நம்ப முடியுமா? அது போல் தான் முதல்வர் கூறியிருப்பது.  மின்சார வாரியம்  தனியே இயங்கும் ஒரு வாரியம். அது மின்சார  கட்டணத்தை உயர்த்தினால்  அதை என்னால் (தமிழக அரசால்) தடுக்க  முடியாது என கூறுவது. 

Sky rocketing price hike என்று சொல்லக்கூடிய இந்த வரலாறு காணாத விலை ஏற்றம். அதுவும் இரவோடு இரவாக மூன்று அத்தியாவிச பொருட்களின் மீது. இதனால் மக்கள் எவ்வளவு கஷ்ட படுவார்கள் என முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டுமானால்...

அடுத்த ஒரு மாதத்திற்கு அவருக்கு வரும் சம்பளத்தை மட்டுமே வைத்து (அது ஒரு லட்சமாக இருந்தால் கூட) அவருடைய எல்லா செலவுகளையும் அதை வைத்தே அவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு பால் வாங்குவதிலிருந்து, அவர் தினமும்! தலைமைச்செயலகம்  செல்ல தன்  காருக்கு  பெட்ரோல் போடுவது வரை. ஒரு மாதம் கழித்து சொல்லட்டும்.  அவரால் அவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்தை  ஓட்ட முடிந்ததா என்று.

எப்படியோ நான்கரை வருடம் கழித்து இவர்களை வீட்டுக்கு அனுப்ப எதிர் கட்சியினர் பெரிதாக ஒன்றும்  கஷ்ட பட வேண்டியது இல்லை.  ஆல்ரெடி கவுன்ட் டவுன் ஸ்டார்டட்.    

share on:facebook

3 comments:

Unknown said...

உண்மைதான்,வயிற்றெரிச்சலான விடயம்.

ரைட்டர் நட்சத்திரா said...

கஷ்ட காலம் தமிழனுக்கு... நல்ல விவாதம் நண்பரே

ஆதி மனிதன் said...

நன்றி செழியன்.

Post a Comment