Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

Thursday, August 16, 2012

இந்த இந்தி காரங்களே இப்படிதான்ப்பா..


இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். இப்படி ஒரு காலத்தில் கோஷம் போட்டவன் தான் நான். ஆனால், அதை படிக்காததால் இழந்தது நிறைய என்பதை காலம் தான் எனக்கு உணர்த்தியது. ஆமா, தெரியாமதான் கேக்குறேன்? ஹிந்தி படிச்சா நாம என்ன கெட்டா போய்டுவோம்?

சரி, முதலில் இந்தி பேசும் மக்கள் வாழும் ஊர்களில் உள்ள நல்ல விசயங்களை பார்ப்போம். மும்பைக்கு நீங்கள் போய் இருந்தீர்களானால் நிச்சயம் இதை விரும்பி இருப்பீர்கள். அது அங்குள்ள (பெரும்பாலான) ஆட்டோ காரர்களின் நேர்மை. நமக்கு இந்தியே தெரியாது என அவருக்கு தெரிந்தாலும், ஒழுங்கான மீட்டர் போட்டு, நேர் வழியில் சென்று மீட்டர் பார்த்து காசு வாங்குவது. ஒரு மொழி தெரியாத ஊருக்கு போகும் போது இதை விட comfort என்னங்க வேணும். ஒரு ருபாய் சில்லறை நமக்கு திரும்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட பாக்கெட்டை துலாவுவார்கள்.

அடுத்ததாக மும்பை அதன் சுற்றுள்ள நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு தன்மை. பெரும்பாலான குடியிருப்புகளில் வேலைக்கு சேரும் பணிப்பெண்ணாக இருக்கட்டும், செக்கூரிட்டியாக இருக்கட்டும், எல்லோரும் காவல்துறை வெரிபிகேஷன் செய்யப்பட்டு அவர்களை பற்றிய முழு வரலாற்றையும் சரிபார்த்த பிறகுதான் வேலைக்கு சேர்க்கிறார்கள். பல இடங்களில் வீட்டு சாவியை செக்கூரிடியிடம் கொடுத்து விட்டு போவதை பார்த்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் அவர்களிடம் சாவியை வாங்கி வேலை முடித்து மீண்டும் சாவியை செக்கூரிட்டியிடம் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.  

Exceptions are everywhere. இருந்தாலும் நான் பார்த்தவற்றை தான் இங்கு பகிர்கிறேன்.

அது போல் சமீபத்தில் பார்த்த சில பொதுவான விஷயங்கள். அநேகமாக எல்லா மோட்டார் சைக்கிளிலும் மழை காலத்தில் முன்புறம் உள்ள ஹெட் லைட் மற்றும் இன்டிகேடர்களை மழையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதை சுற்றி ஒரு கவர் போட்டுள்ளார்கள்.

அலுவலகம் செல்லும் பெரும்பாலானோர் backpack என்று சொல்லக்கூடிய பாக்கை எடுத்து செல்கிறார்கள். இதில் என்ன புதுமை என்கிறீர்களா? நாம் எல்லாம் backpack பின் புறம் தான் மாட்டிக்கொள்வோம். இங்கு பெரும்பாலானோர் அதை முன் பக்கம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலும் டூ வீலரில் செல்பவர்கள் முன் பக்கம் தான் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் இரு பயன்கள். ஒன்று, முன் பக்கம் மாடிக்கொள்வதால் உங்களுக்கு தெரியாமல் யாரும் பாக்கில் உள்ளதை எடுத்து விட முடியாது. இன்னொன்று வண்டியில் உங்களுடன் வேறு யாரும் உட்கார்ந்து கொண்டு வந்தால் உங்கள் பாக் முன் பக்கம் இருப்பதால் அவர்களால் வசதியாக உட்கார முடிகிறது.

வட நாட்டில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாவிட்டாலும் மும்பை போன்ற இடங்களில் pure vegetarian ஹோட்டல்கள் பார்ப்பது அரிது. அதை விட முக்கியம் பெரும்பாலான ஹோட்டல்கள் பார்களுடன் அமைத்திருப்பது. Family restaurant & Bar என்று இருந்தால் அங்கு குடும்ப சகிதம் போய் வெறுமனே சாப்பிடலாம்/சரக்கு அடித்துக்கொண்டும் சாப்பிடலாம். வெறும் Family restaurant என்றால் அங்கு சரக்கு அடிக்கும் வசதி கிடையாது. அதை விட இங்கு குடும்பத்துடன் சாப்பிட ஹோட்டலுக்கு வரும்போது ஆண்கள் (சில சமயம் வீட்டுப்பெண்களும்) பீர்/ஹாட் அடிப்பார்கள். குழந்தைகள் அவர்கள் கூடவே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அல்லது அங்கேயே விளையாண்டுக் கொண்டிருப்பார்கள்.










share on:facebook

Thursday, March 22, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.


'Genocide' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தேடினால் ஆப்பரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அரசு தான் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆப்ரிக்க நாட்டவர்களை போல் காட்டு வாசிகள் இல்லை. படிப்பு, வியாபாரம், அரசியல் என்று பல துறைகளிலும் இலங்கையில் கோலோச்சினார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாக கடைசியில் முடிந்தது.

ஆரம்பம் முதல் இலங்கை தமிழர் பிரச்னை இந்த அளவிற்கு வளர காரணம்  தமிழக அரசியல் வாதிகளும் இந்திய அரசாங்கமும் தான் என்பது விபரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். தமிழக அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரச்சனையை ஊதி பெருக்கினார்கள் என்றால் இந்திய அரசு முற்றிலும் சுயநல போக்குடன் இந்தியாவின் பூலோக நலனுக்காக ஒரு இனத்திற்கு எதிராக ஆரம்பம் முதல் செயல் பட்டது.

இப்போது இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் உள்ள ஆங்கில நாளிதழ்கள் நடந்து கொள்கின்றன. அதற்க்கு காரணம் சுயநலமும், வியாபார நோக்கமுமும் தான்.

ஒரு காலத்தில் 'தி ஹிந்து' நாளிதழும், அதன் ஆசிரியர் திரு. ராமும் எல்லோராலும் மதிக்கப் பட்டவர்கள். குறிப்பாக திரு. ராம் அவர்கள் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும், பொது நல வாதியாகவும் அடிக்கடி காட்டிக் கொள்வார். ஆனால், ஊர் உலகத்தை பற்றி எல்லாம் எழுதும் அவர் மீதே நில மோசடி வழக்கு உள்ளது. இலங்கையில் நடந்த போரை பற்றி எல்லோரும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் பக்கம் பக்கமாக தனது நாளிதழில், புகைப் படத்துடன் இலங்கை அரசு எவ்வாறு தமிழ் அகதிகளை சிறப்பாக 'கேம்ப்' புகளில் கவனித்துக் கொள்கிறது என்று ஊருக்கு ஒப்பாரி வைத்தார். முள் வேலிக்குள், டெண்டிர்க்குள் அப்பாவி மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஒரு பாராட்டுப் பத்திரம்.


இலங்கை அரசின் விருந்தினராகவே கவனிக்கப் பட்ட திரு. ராமிற்கு இலங்கை அரசை பற்றி புகழ்ந்து எழுதுவதும், அதன் அதிபர் ராஜபக்சேவை நேர்காணல் செய்வதுமையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு இலங்கை அரசு கொடுத்த விருதும், அவரின் பத்திரிக்கையை இலங்கையில் அச்சடித்து விநியோகம் செய்ய அனுமதி அளித்ததும் தான் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் போக்குக்கு அதரவாக நடக்க ஆரம்பித்தார். கேரள மீனவர் ஒருவர் சுடப்பட்டு இறந்தார் என்பதற்காக இத்தாலிய கப்பலை கையகப் படுத்தி கப்பல் ஊழியர்களை கைது செய்து இரு நாட்டு உறவு பாழாய் போகும் அளவிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்க்கு காரணம், இந்த ஆங்கில பத்திரிக்கைகளின் ஊளை தான். ஆனால், தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.


தி.ஹிந்துவிற்கு அடுத்த படியாக, தற்போது இலங்கை தமிழர் நலனுக்கு எதிராக நரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அடுத்த பத்திரிகை ...அது பற்றி அடுத்த பதிவில்...

இலங்கை பிரச்னை பற்றிய வேறு சில பதிவுகள்...

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


share on:facebook

Wednesday, March 14, 2012

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?



லேசான மனம் படைத்தவர்கள் இதை தயவு செய்து பார்க்க வேண்டாம்...


share on:facebook

Wednesday, March 7, 2012

சூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா?


சமீபத்தில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா! இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க முடியும் என்று தான் முதலில் எண்ணத் தோன்றுகிறது.

சூர்யா சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவர் என்னதான் எனர்ஜட்டிக்க்காக பேசுவது போல் 'நடித்தாலும்' அது எடு படவே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கோன் பனேகா க்ரோர் பதியை நினைவு படுத்தும் நிகழ்சிகளை மாற்றி மாற்றி பெயரிட்டு எடுத்துக் கொண்டு இருப்பார்களோ. சுயமாக சிந்திங்கப்பா!

ஒவ்வொரு கேள்வியை கேட்டு முடித்த பின் அதற்க்கு சரியான (இதற்க்கு ஹார்வர்ட் போய் படித்திருந்தால் தான் பதில் சொல்ல முடியும்) பதிலை சொன்ன பிறகு கை தட்டுகிறார்கள் பாருங்கள். ஐயோ தாங்க முடியல. எப்படி? எப்படி சூர்யாவும், கலந்து கொண்டவரும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும் தங்களை மறந்து கை தட்டுகிறார்கள்.

கேள்வி இது தான்: ஒருவர் செய்வதை பார்த்து அதே போல் இன்னொருவர் செய்வதற்கு என்ன வென்று சொல்வார்கள்?

A. பேய் அடிச்சான் காப்பி.

B. பிசாசு அடிச்சான் காப்பி.

C. கொசு அடிச்சான் காப்பி.

D. ஈ அடிச்சான் காப்பி.

ஐயா, வேற கேள்வியே உங்களுக்கு கிடைக்கலியா? இல்ல நீங்க ஈ அடிச்சான் காப்பி செய்வதை எல்லோருக்கும் சொல்கிறீர்களா?

இதற்க்கு எல்லோரும் கை வேறு தட்டுகிறார்கள். சூர்யாவின் மேலும் அவரின் தந்தை நடிகர் சிவ குமாரின் மேலும் தனிப்பட்ட மதிப்பு எனக்கு உண்டு. இருவரும் உழைப்பால் தங்கள் சொந்த திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், இங்கு சூர்யா சொல்வதென்ன? ஒரு போட்டியாளரை பார்த்து அவர் கேட்கும் கேள்வி.

சூர்யா: உங்களின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு?
போட்டியாளர்: சுமார் பதினைந்தாயிரம்.
சூர்யா: ஒரு மாதம் நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை ஒரு பத்து நிமிடத்தில் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக போகிறீர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்.

நம்ம கேள்வி: அப்ப ஒரு மாசம் அவர் கஷ்ட பட்டு உழைத்து சம்பாதிப்பதை நீங்கள் ஏளனம் செய்கிறீர்களா? வர எல்லோருக்கும் நீங்க அவங்க அவங்க ஒரு மாச சம்பளத்தை கொடுக்க தயாரா?

அடுத்த கேள்வி: "புரட்சித் தலைவர்" என யாரை அழைப்பார்கள்?

நல்ல வேலை, நிலவுக்கு போன ஆம் ஸ்ட்ராங், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சேகுவாரா என கஷ்டப் படுத்தாமல் அதில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரையும் சேர்த்தீர்கள்.

சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா? பண்ணி கறியா அல்லது மாட்டுக் கறியா என கேட்காமல் போனார்கள். சொல்ல முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் இந்த கேள்வியை எதிர் பார்க்கலாம். நாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே! சிக்கன் பிரியாணியில் இருப்பது "சிக்கன்" தான். இது தெரிய வில்லை என்றால், அப்புறம் நீங்கள் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டி இருக்கும்.

போட்டியாளர்களின் வீடு, குடும்பம் என அனைத்தையும் காண்பிக்கிறார்கள். அதே போல் போட்டியை நடத்துபவர்களின் குடும்பம், வீடு அனைத்தையும் காண்பித்தால் நல்லது. அப்போது தெரியும் நமக்கு. ஒரு லட்சம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு எத்தனை கோடிகளில் அவர்கள் புரள்கிறார்கள் என்று.

மணி சார், ஜீனியஸ் சார் என்று உயிரற்ற பொருட்களுக்கெல்லாம் ஒரு பெயர். சரியான காமெடி. சூர்யா பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மடிக் கணணி கூட ஒரு பொம்மை கணணியாக இருக்கக் கூடும். பின்னால் இருந்து கொண்டு யாரோ டிஸ்ப்ளேவில் விடைகளையும் அடுத்த கேள்வியையும் நமக்கு கலர் புல்லாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் ஒரு கேள்வி கேட்டார்கள் பாருங்கள். நிச்சயம் இந்த கேள்வியை 'காப்டன்' அவர்களை மனதில் வைத்து தான் சூர்யா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். கேள்வி இது தான்.

திருநெல்வேலி எதற்கு பெயர் போனது?

A. இட்லிக்கா?

B. சட்னிக்கா?

C. சாம்பாருக்கா?

D. அல்வாவுக்கா?

ஆமா, அப்புறம். நம்ம காப்டன் ஒரு முறை பேட்டியின் போது உணர்ச்சி வசப்பட்டு சொன்னது (அவர் எப்போது தான் உணர்ச்சி வச பட வில்லை). திருநெல்வேலிக்கே அல்வாவா? DMDK கே சவாலா? என்று. அதை மனதில் வைத்து தான் இந்த கேள்வியை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


நல்லவேளை. திருநெல்வேலி என்றதும் நினைவுக்கு அருவாளா? ஜாதி சண்டையா? முரட்டு மீசையா? இல்ல ஒஸ்தி சிம்புவின் திருநெல்வேலி தமிழா? என்று கேட்கவில்லை.


போங்கப்பா. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. ஏதாவது நாலு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு அறிவு சார்ந்த "குவிஸ்" போட்டிகளை நடத்துங்கள். நல்ல பரிசுகளை பெரிய அறிவு ஜீவிகளை வைத்து கொடுங்கள். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பார்க்கும். அவர்களின் பெற்றோர்கள் சேர்த்து தான். அப்ப போட்டுக்குங்க. உங்க கிரைண்டர் மிக்சி விளம்பரங்களை.

குழந்தைகள், கல்வி பற்றிய மேலும் சில பதிவுகள் ...

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா? 

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...

share on:facebook

Thursday, March 1, 2012

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்

எத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousewife.com பற்றி கேள்விப் பட்டேன். இந்தியா பற்றி ஒரு வெளி நாட்டவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் எழுதும் பதிவுகள் எத்தனை பேருக்கு பிடிக்கிறது அல்லது படிக்க சுவாரசியமாக இருக்கிறது என எனக்கு தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியா விலிருந்து  சமூக சேவை செய்ய கொல்கட்டா சென்று அங்கு ஒரு நைட் கிளப்பில் DJ வாக இருந்த இந்தியரை திருமணம் செய்து கொண்டபின் மும்பையிலேயே குடும்பமாக செட்டில் ஆகி விட்ட "ஷறேல்' தன்னுடைய  whiteindianhousewife.com மூலம் இந்தியாவை பற்றி அவர் எழுதும் பதிவுகளும் (ஆங்கிலத்தில் தான்), அவர் எழுதிய புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவரின் பதிவுகளில் ஒன்று இரண்டு சாம்பிளுக்காக (தமிழாக்க சுருக்கம் கீழே) ...

5 Things About India that Attract Me

என்னுடைய தற்போதைய வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு இந்தியா சென்றதை பார்த்து சிலர் நான் பைத்தியம் என்று கூட நினைப்பார்கள். ஆனால், என் கணவரை காதலிக்க தொடங்கும் முன்னே நான் இந்தியாவை காதலிக்க தொடங்கி விட்டேன் என்று கூறும் அவர், தான் முதன் முறை 2000 ஆம் ஆண்டு இந்தியா சென்ற போது இந்தியாவின் பரந்த, ஆழமான  முழு  வாழ்க்கை முறையை பார்த்து மனதை பறி கொடுத்து விட்டதாக எழுதி  இருக்கிறார்.

இந்தியாவை அவருக்கு பிடித்ததற்கான ஐந்து காரணங்கள் கீழே...

1. India is Untamed - எங்கு பார்த்தாலும் எப்போதும் ஏதாவது ஒன்று புதுசாக இருந்து கொண்டே இருக்கும். அதனால் வாழ்க்கை போரடிக்காது. மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டே இருக்கும்.

2. Incense - இந்திய ஊது பத்திகள் மற்றும் நறு மணங்கள் தன்னை எப்போதும்  புத்துணர்ச்சியுடன் வைத்த்திருப்பதாகவும், காலை, மாலை மற்றும் இரவு  நேரங்களில்  அதை ஏற்றி வைத்து நறு மணத்தை அனுபவிப்பது இன்னமும்  அவருக்கு புது குதூகலத்தை குடுப்பதாக கூறுகிறார்.

3. Mystery - இந்தியா பழமையான நாடு. அங்கு கண்டு பிடிக்கவும் தெரிந்து கொள்ளவும் நிறைய உள்ளது. அதன் வரலாறு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவை எல்லாம் இந்தியா அவ்வப்போது சிறிது சிறிதாக தான் வெளி படுத்தும். அதனால் இந்தியா பற்றி நான் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை இந்தியாவில் இருக்க தூன்றுகிறது.

4. Spirituality - நான் ஒரு மதவாதி இல்லை. ஆனால், ஒரு நம்பிக்கைவாதி. என்னுடைய பெற்றோர் எனக்கு எந்த மதத்தையும் சொல்லி தரவில்லை. ஆனால், இந்தியா வந்த பிறகு இந்தியர்களின் கடவுள் மீதான நெருக்கத்தை  கண்டு வியந்தேன். கடவுள் எங்கும்  இருக்கிறார் என்பதற்கு இந்தியா தான் சிறந்த எடுத்துக் காட்டு. அதிலும் ஹிந்து மதத்தில் கடவுளை காண பல  வழிகள் உள்ளது. அது மனதுக்கும் உடம்பிற்கும் ஏற்றதான ஒரு மதம் என்று கூறுகிறார். இந்தியா தான் தனக்கு வாழ்க்கை என்றால் என்ன? மரணம்  என்றால் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள உதவியதாக  குறிப்பிடுகிறார்.

5. Clothes - நான் இந்திய உடைகளை மிகவும் விரும்புவேன். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, ஆபரணங்கள் மற்றும் உடை அலங்காரங்கள்  எனக்குள் ஒரு பெரிய மாற்றத்திற்கு உருவாக்கியது என்கிறார்.

Should I Move To India? என்ற பதிவில் இந்தியா செல்லலாமா என்ற அவருடைய வாசகர்களின் கேள்விகளுக்கு அவருடைய அனுபவத்தின் பேரில் பதில் அளித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா செல்வதற்கும் அங்கேயே சென்று வாழ்வதற்கும் நிறைய வித்தாயசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மைதானே.

இந்தியா ஏன் செல்ல வேண்டும் என அவர் சொல்லும் காரணங்கள்...

# ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க...
# புதிய அனுபவங்களை அனுபவிக்க...
# ஏனென்றால் உங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்து இருக்கிறது...

இந்தியா ஏன் செல்ல வேண்டாம் என அவர் சொல்லும் காரணங்கள்...

# உங்களுடைய தற்போதைய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக ....
# உங்களுடைய தற்போதைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக...
இன்னும் நிறைய இருக்கிறது அவருடைய வலை தளத்தில்...பிடித்தால் படித்துப் பாருங்கள்.
 
பி. கு. படத்தில் இருப்பது 'ஷறேல்'  அல்ல. 

அமெரிக்கா பற்றி எனக்கு பிடித்த சில பதிவுகள்.

அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

share on:facebook

Friday, February 24, 2012

வங்கி கொள்ளையர்களும், என்கவுண்டர் ஓட்டைகளும்...

சமீபத்தில் நடை பெற்ற வங்கி கொள்ளையர் என்கவுண்டர் பற்றி பலர் எழுதி விட்டார்கள். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரி கொள்ளையர்களை இப்படி தான் போட்டு தள்ள வேண்டும் என்று சாதாரணமாக கூற முடியவில்லை. ஏனென்றால், இந்த என்கவுண்டரால் மக்களுக்கு பெரிய அளவு ஒன்றும் பயனில்லை என்பதே என் கருத்து. சரி இப்போது என்கவுண்டர் ஓட்டைகளை பார்ப்போம்.

கொள்ளையர் தங்கி இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்த பிறகு ஓரிரு நாள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக கண்காணித்து சரியான நேரத்தில் மடக்கிப் பிடித்திருந்தால், அது சாமர்த்தியம். எல்லோராலும் பாராட்டப் பட்டிருக்கும். அட, அட்லீஸ்ட் ஒருவரையாவது வளைத்து பிடித்திருந்தால் பாராட்டி இருக்கலாம். எல்லோரையும் ஒரே இரவில், ஒரு மணி நேரத்தில் போட்டுத் தள்ளுவதில் என்ன பெரிய சாமர்த்தியம் இருக்கிறது?

மேலும், கொள்ளையர்கள் அனைவரும் வட நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். அதாவது, போலீசார் வெளியிலிருந்து என்ன கத்தி இருந்தாலும் மொழி புரியாமல் பயத்தில் உள்ளேயே அவர்கள் இருந்திருக்கலாம் அல்லவா? மேலும் அவர்கள் வீட்டின் உள்ளே தானே இருந்தார்கள். சுற்றி வளைத்து சற்று நேரம் எடுத்து அவர்களிடம் பேசி வெளியே கொண்டு வந்திருந்தால் அவர்களை பற்றியும் அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை பற்றியும் இன்னும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

இதோ பத்திரிக்கைகளில் எழுப்பப்பட்ட சில கேள்விகள்...

# கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், வெளி கதவு உடைக்கப் பட்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்கிறார்கள்..

# ஜன்னலுக்கு பின்புறம் உள்ள சுவரில் இரண்டே இடத்தில் மட்டும் துப்பாக்கி  குண்டுகள் துளைத்த தடயங்கள் உள்ளன. அதுவும் ஒரே உயரத்தில். ஜன்னல்  கிரிலில் துப்பாக்கி குண்டு பட்டதற்கான எந்த தடயமும் இல்லை. அதாவது,  மிக சிறந்த/தேர்ந்த துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்கள் கூட அப்படி  குறி  தவறாமல், ஒரே அளவோடு சுட முடியாது. போலீசார் மற்றும்  கொள்ளையர்கள் அந்த அளவு துப்பாக்கி சுடும் அனுபவம் உள்ளவர்களா?

# ஜன்னல் கிரிலுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த டி.வி. ஒரு சேதமும் இல்லாமல் இருக்கிறது. இத்தனை துப்பாக்கி குண்டுகளுக்கு இடையில்.

# தரை முழுதும் ரத்தக் கரைகள் இருந்தும், சுவற்றிலோ வேறு எங்குமோ ரத்தக் கரைகளை காண முடியவில்லை. அப்படி என்றால் ஒரே இடத்தில் எல்லோரும் சுட்டுக் கொல்லப் பட்டு இருக்கிறார்கள்.

வங்கியில் கொள்ளை அடிக்கப் பட்ட பணத்தை கை பற்றி இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். அதற்குள் எப்படி அந்த பணம் வங்கியில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதான் என்று முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ வழக்கம் போல இந்த என்கவுன்டரிலும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை.

சிலர் சொல்கிறார்கள். நீங்கள் பதிக்கப் பட்டிருந்தால் தான் உங்களுக்கு தெரியும் என்று. அதை தான் நானும் கேட்கிறேன். ஒரு வேலை இவர்களில் ஒருவர் நிரபராதியாக இருப்பின் அவ்வாறு பாதிக்கப் பட்டவர் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் என்பது தான் என் கேள்வி?

கெட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும். தீயவர்கள் ஒழிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், அப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாது. தீயவர்களுடன் தொடர்பில் உள்ள மற்றவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். அது தான் என் கருத்து. அதற்க்கு இந்த என்கவுண்டர்கள் பலனளிக்காது.

என்கவுண்டர் பற்றி விசாரிக்கும் நீதிபதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...


share on:facebook

Sunday, February 12, 2012

தமிழ், தமிழர் பெருமை சாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரி.


தாய் மொழி தமிழில் பேசுவதையே இழுக்காக நினைக்கும் நம்மில், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து, இன்று ஓர் உயர் பதவியில் இருந்து கொண்டு முடிந்தவரை கொஞ்சும் தமிழில் இவர் பேசுவதை நிச்சயம் நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.  

அது மட்டுமில்லாமல், தமிழக மாணவர்கள் நலனில் இவர் காட்டும் அக்கறையும், அவர்கள் அமெரிக்கா சென்று எளிதாக உயர் கல்வி கற்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், மிகவும் பாராட்டத்தக்கவை.   





நன்றி: தினமலர்.com

share on:facebook

Tuesday, January 24, 2012

போலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதராபாத் போலீஸ் அதிரடி.

என்ன மக்களே. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போறேன். நம்ம ஊரு விஷயம் இல்லனாலும் பக்கத்து மாநிலத்து விஷயம். நம்ம ஊருக்கும் வரதுக்கு ரொம்ப நாள் ஆகாது. சேதி இது தான்.

ஏதோ ஒரு சினிமாவுல விவேக் கோயில் குருக்களா இருப்பாரு. டூ வீலர்ல போகும் போது ட்ராபிக் போலீஸ் ஒருத்தர் அவர நிறுத்தி லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என ஒவ்வொன்றாக கேட்க அவரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டுவார். எல்லாம் இருந்தும் போலீஸ் அவரை  விடாமல், உனக்கு எட்டு போட தெரியுமா? என கேட்டு எட்டு போட  சொல்லுவார். நகைச்சுவைக்கா இதை காட்டினாலும் பல இடங்களில் போலீஸ் அந்த அளவிற்கு டூ வீலர் டிரைவர்களுக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து தான் வருகிறார்கள்.

இந்த கொடுமைக்கெல்லாம் விடிவாக ஹைதிராபாத் காவல் துறை ஒரு புதிய முறையை கொண்டு வந்து உள்ளது. அதாவது "நோ அப்ஜக்சன்  சர்டிபிகடே" போல் டூ வீலர்களில் ஒட்டிக்கொள்ளும் மாதிரி ஒரு சிறப்பு ஸ்டிக்கரை  அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்டிக்கரை வண்டியில் கண்ணில் படும் படி ஒட்டிவிட்டால் போதும். அனாவசியமாக லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என டிராபிக் போலீஸ் உங்களை தடுத்து  நிறுத்தாது. 

அதே நேரம், ஸ்டிக்கர் இருக்கும் காரணத்தால் அதிக வேகம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது போன்ற மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக அவைகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்டிக்கர்கள்  வழங்கும் முன் சம்பந்தப்பட்ட டூ வீலர்காரர்களிடம் எல்லா ஆவணங்களையும்  பெற்று சரி பார்த்த பிறகு தான் காவல் துறை இச் ஸ்டிக்கர்களை வழங்க உள்ளது. மேலும் டூ வீலர்காரர்களுக்கு வாகன பாதுகாப்பு பற்றி சிறப்பு  பயிற்சியும் வழங்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.  

இதெல்லாம் சந்தோசமான விஷயம் தான். ஆனால், முக்கியமான ஒன்றை  நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஸ்டிக்கர் முறையை முதன்  முதலாக  அமுல் படுத்த போவது ஹைதராபத்தில் உள்ள மிக பெரிய IT  பார்க்குகள்  நிறைந்துள்ள ஹய் டெக் சிட்டியில் தான். தினமும் IT   கம்பனிகளுக்கு செல்லும் டூ வீலர் காரர்கள் வாகன  சோதனையில்  சிக்குவதால் அவர்கள் வேலைக்கு செல்வது தாமதமாவதால் அதை  தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ம், ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? IT காரர்கள் சொன்னால் எல்லாம் நடக்கிறது.

share on:facebook

Thursday, December 15, 2011

உலகின் மிக பெரிய ஜனாதிபதி மாளிகை - ஒரு விசிட்.


உலகில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்  உள்ளனர். உலக வங்கியின் அறிக்கை படி 40 % மேற்பட்ட இந்தியர்கள்  வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். ஆனால் உலகிலேயே மிக பெரிய  ஜனாதிபதி மாளிகை இந்தியாவில் தான் இருக்கிறது.

நாலு அடுக்குகளை கொண்ட நம் இந்திய ஜனாதிபதி மாளிகையின் மொத்த  பரப்பளவு சுமார் 200, 000 சதுர அடி. இதில் மொத்தம் 340 அறைகள்  உள்ளன.  1911 ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னன் V இந்தியாவின் தலை நகரம்   கொல்கட்டாவிலிருந்து டெல்லிக்கு மாறுகிறது என்று அறிவித்ததை  தொடர்ந்து  இங்கிலாந்து வைஸ்ராய்கள்   தங்குவதற்காக கட்டப்பட்ட  மாளிகைதான் இன்றுள்ள ஜனாதிபதி மாளிகை. இதில்  குடியேறிய முதல்  வைஸ்ராய் லார்ட் இர்வின்.

இந்திய, முஹலாய, ஐரோப்பிய கட்டட கலைகளை கலந்து கட்டப்பட்ட இந்த  மாளிகையின் நடுவில் அமைந்துள்ள தாமிரத்தால் ஆன "டோம்" போன்ற   நடு பகுதி இம்மாளிகையின் உயரத்தை விட இரு மடங்கு உயரம் கொண்டது.  இம்மாளிகைக்குள் பொது மக்கள் போய் சுற்றி பார்க்க அனுமதி உண்டு. இங்குள்ள மார்பில் கூடத்தில் அக்காலத்திய ராஜ, ராணி, வைஸ்ராய் என  முக்கியஸ்தர்களின் முழு உருவ ஓவியங்கள் மற்றும் சிலைகள்  நிறைந்திருக்கும்.

இதற்க்கு கீழ் அமைந்துள்ள சமையல் அறை அருங்காட்சியத்தில் முன்னாள்  வைஸ்ராய்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் உபயோகித்த சமையல் அறை பாத்திரங்கள் மற்றும்  உபகரணங்களை காணலாம்.

இதை அடுத்து பரிசுப் பொருள் அருங்காசியகமும் மக்கள் மனதை கவரும் ஒரு அறையாகும். ஆம், இங்குதான் இந்திய ஜனாதிபதிகள் பெற்ற ஒவ்வொரு பரிசுப் பொருளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.  ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்ட அனைத்துப் பரிசுப் பொருட்களும் இந்த அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. ஒரு முறை நீங்கள் பார்த்த பரிசுப்  பொருட்கள்  அடுத்த முறை நீங்கள் போகும் போது பார்க்க இயலாது. ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருட்கள் மாறிக்கொண்டே இருக்கும்.  அப்படியானால் மொத்தம் எவ்வளவு பரிசுகள் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

மாளிகையின் நடு கோபுரத்திற்கு கீழே தர்பார் ஹால் அமைந்துள்ளது. இங்கு தான் அந்நாளில் இங்கிலாந்து வைஸ்ராய்களும், வைஸ் ரீன்களும்  அமரும் சிம்மாசனங்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது இங்குதான் நம்  ஜனாதிபதியின் சிம்மாசனம் உள்ளது. பெரும்பாலான அரசு பூர்வ விழாக்கள்,  தேசிய விருதுகள் வழங்கும் விழாக்கள் இங்கு தான் நடை பெறுகின்றன.  

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகல் கார்டன்ஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள  இத்தோட்டத்தில் அழகிய தண்ணீர் ஊற்றுக்கள் மற்றும் அபூர்வ  வண்ண  மலர்கள் எங்கும் நிறைந்திருக்கும். இந்த தோட்டத்தில் தான் குடியரசு  நாள்  மற்றும் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் எல்லோருக்கும்  விருந்து  கொடுப்பார்.

ஜனாதிபதி மாளிகையின் கடைசி சுற்றில் ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. குழந்தைகள் குடியரசு தலைவருக்கு அளித்த அனைத்து பரிசு பொருட்களும் இங்கு கட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும். அதே போல் இங்கு உள்ள எடை அளவுகோளில் நாம் சந்திரன் மற்றும் மற்ற கோளங்களில் வாழ்ந்தால் நம்முடைய உடல் எடை எவ்வளவு இருக்கும் என்பதை காட்டும்.

என்ன இப்போதே ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க வேண்டும் போல் உள்ளதா? நீங்களும் போய் சுற்றி பார்க்கலாம். மாளிகையின் சில பகுதிகள் வார நாட்களில் செவ்வாய் வெள்ளி தவிர வருடம் முழுதும் திறந்திருக்கும். ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்க்க அனுமதி கோரி நீங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Military Secretary to the President, Rashtrapati Bhavan, New Delhi
அல்லது  மின்னஞ்சல் முகவரி: dmsp@rb.nic.in

சுற்றி பார்க்க விரும்பும் அனைவரும் தங்களின் முழு விபரத்தையும் மற்றும் சுற்றி பார்க்க விரும்பும் தேதியையும் குறிப்பிட வேண்டும். 

இந்த பதிவு எழுதி முடிக்கும் வரை ஜனாதிபதி என்று வரும் இடங்களில் எல்லாம் டாக்டர் அப்துல் கலாம் தான் என் கண் முன் வந்தார். ஜனாதிபதி  என்றால் அவர் தான் என்ற இமேஜை நமக்கு எல்லாம் ஏற்படுத்தி  விட்டார்.   

share on:facebook