Sunday, December 30, 2012

2013 முக்கிய நிகழ்வுகள் - மாயாண்(டி) காலண்டர் என்ன சொல்கிறது?


சென்ற வாரம் கண்டெடுக்கப்பட்ட மாயன் காலத்து கல்வெட்டுகளில் இருந்து தமிழ் நாட்டை பற்றி அதிலும் குறிப்பாக 2013 தமிழ் நாட்டில் நடக்க கூடிய முக்கிய 10 நிகழ்வுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதாம். இதோ அவைதான் இது...

1. 2013 முதல் தமிழகத்தில் கரண்ட் கட் இருக்கவே இருக்காது (இப்பவே கண்ணா கட்டுதா? மேலும் படிச்சுட்டு சொல்லுங்க).

2. என் வழி தனி வழி என மீண்டும் கூறியுள்ள சூப்பர் ஸ்டார், 2013 இல் நிச்சயம் புது கட்சி ஆரம்பிப்பார்.

3. தமிழகத்தின் உடன் பிறவா சகோதிரிகள் மீண்டும் 2013 இல் பிரிய போகிறார்கள்.

4. சென்னையை பிடிக்காமல் எல்லா கொசுக்களும் வேறு கண்டத்திற்கு செல்ல முடிவெடுக்குமாம்.

5. தமிழகம் கேட்ட போதெல்லாம் தண்ணீர் திறந்து விட தயார் என கர்நாடகம் அறிவிக்கும்.

6. 2013 முதல் வாயே மூடாமல் நம் பிரதமர் பேசிக் கொண்டிருப்பாராம்.

7. தமிழ் சானல்களில் இனி அழுகை சீரியலே கிடையாது என அனைத்து டி.வி. தயாரிப்பாளர்களும் அறிக்கை விடுவார்கள்.

8. தமிழகத்தின் உடன் பிறந்த சகோதரர்கள் 2013 முதல் இரட்டை குழல் துப்பாக்கியாக சேர்ந்து செயல் பட போவதாக அறிவிப்பார்கள்.

9. பதிவர்கள் எல்லோரும் 'ஹிட்' கவுண்டர்களை எடுத்து விடுவார்களாம்.

10. இது எல்லாவற்றுக்கும் மேலாக இதற்க்கு முன்னரே டிசம்பர் 30 ஆம் நாள் உலகம் அழியுமாம்.

ஹி, ஹி, ஹி...இத நீங்க நம்பலைல. அப்ப மேலே உள்ள எதையும் நம்பாதீங்க. நல்ல விசயங்கள என்னைக்கு இருந்தாலும் பின்பற்றுங்க, பின்பற்ற உறுதி எடுத்துக்குங்க. அப்புறம் பாருங்க. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் புது வருட பிறப்பு தான்.

டிஸ்கி: இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை.



share on:facebook

Friday, December 28, 2012

சிறகொடிந்த பறவை இறந்து போனது.

டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கல்லூரி மாணவி இன்று அதிகாலை சிகிர்ச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் காலமானார். இதையொட்டி டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (இதற்காக தானே அப்பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினீர்கள்?).

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு மேல் சிகிர்சைக்கு அனுப்பியது மறுத்து ரீதியாக மேற்கொள்ளபட்ட  முடிவு அல்ல எனவும் அது அரசியல் முடிவு எனவும் தெரிய வருகிறது. இதிலயுமா உங்க பாலிடிக்ஸ்?

அம்மாணவி ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் வேண்டுவோம்.

share on:facebook

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - முழு வீடியோ மற்றும் மோகன் பேச்சு


நீயா நானா - கார்பரேட் வாழ்க்கை எப்பிசோடில் 'வீடு திரும்பல்' மோகனின் முக்கிய கருத்து இது தான்...

IT யில் அடிமை போல் வேலை வாங்குவது, தேவையல்லாது ஒருவரை பற்றி எஸ்கலேட் செய்வது என்பதெல்லாம் அவரவர் மேலாளரின் தனிப்பட்ட attitude மற்றும் behavior பிராபளம். நீங்கள் உங்கள் குறைகளை வெளியே சொல்லாவிட்டால் யாருக்கும் அது தெரிய போவதில்லை. இதை பற்றி உங்கள் H. R. மேலாளர் அல்லது அதற்கும் மேல் H. R. - V. P யிடம் கூட நீங்கள் கம்ப்ளைன்ட் பண்ணலாம் என்று தனது கருத்தை தெரிவித்தார். வக்கீல் அல்லவா?

IT  மட்டுமல்ல. எந்த துறையாக இருந்தாலும் அதை தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம். 'The choice is yours'. உங்களுக்கென்று ஒரு passion இருக்கலாம். ஆனால் அதை வைத்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாத போது வேறொரு துறையை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கூட உங்களால் அதை விட்டு வெளியே வர முடியவில்லையா? நீங்கள் விருப்பப்பட்டதை அடைய பிற வழிகள் உண்டு. அதில் ஏதாவது ஒன்றில் ஈடுபடுங்கள் என்று அவர் 'பிளாக்' எழுத வந்த காரணத்தை சொன்னார்.

எனக்கென்னமோ அவர் சொல்வது சரியாக தான் படுகிறது.

முழு வீடியோவை இங்கே காணலாம். மோகனின் முக்கிய கருத்துக்கள் 55 மற்றும் 1.05 நிமிடங்களில்...அவர் குழுவில் சிறப்பு பரிசை தட்டி சென்றவரும் அவரே.

ட்ரீட் எப்ப மோகன்(இதுவும் கார்பரேட் கல்ச்சர் தான். ஒத்துக்கொள்கிறேன்)?



சம்மந்தப்பட்ட பதிவுகள்...

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - 'வீடு திரும்பல்' மோகன் சொல்வது சரியா?

share on:facebook

Thursday, December 27, 2012

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - 'வீடு திரும்பல்' மோகன் சொல்வது சரியா?


தனக்கு ஒரு முத்தம் கூட தன் கணவரிடம் இருந்து கிடைக்கவில்லை என நிகழ்ச்சியில் ஒரு சகோதிரி கூறினார். வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். ஒரு வேலை இருவரும் வேலைக்கு செல்லாமல் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் இம்மாதிரி பிரச்சனைகள் பெருமளவு குறைந்து விடும். அது அவர்கள் சொந்த விருப்பம்.

ஆனால் நான் சொல்ல வருவது வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் போது ஆரம்ப காலங்களில் சில கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அது பொருளாதாரம் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. வாழ்வில் சிலவற்றை நாம் இழக்க நேரிடும். எவ்வளவு இழக்கலாம். எவ்வளவு காலம் இழந்து வாழலாம் என்பது அவரவர் சூழ்நிலை மன நிலைக்கு ஏற்றது.

நான் IT யில் வேலைக்கு  சேர்ந்த புதிதில் மற்ற எல்லோரையும் விட எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. அப்போது என் சிரியவளுக்கு 1 1/2 வயது. ஆறு மாதம் கழித்து நான் திரும்பி வரும் போது என்னை அவள் 'அப்பா' என்றே அழைக்கவில்லை. கதவுக்கு இடுக்கில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பாள். யாரென்று கேட்டால் 'மாமா' என்பாள். மற்றபடி என் போட்டோவை காண்பித்தால் 'அப்பா' என்பாள். வீட்டில் உள்ளவர்கள் நான் இல்லாத போது அடிக்கடி என் போட்டோவை காண்பித்ததால் வந்த வினை. அந்த நேரங்களில் எனக்கு மனதுக்கு சற்று கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும் இது சிறிது காலம் கழித்து சரியாகி விடும் என்று. இன்று அவளுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது என்றால் அதற்க்கு நான் கொடுத்த அந்த சிறிய விலை தான்.

வேலை கஷ்டம் வேலை கஷ்டம் என புலம்புகிறார்கள். எனக்கு தெரிந்து எந்த பிராஜக்டிலும் வருஷம் 365 நாளும் கஷ்டம் இருக்க போவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் வேலை பார்க்கும் போக்குவரத்து காவலரை விட விடுமுறையே இல்லாமல் பணியாற்றும் போலீஸ், ராணுவத்தினரை விட நாம் அப்படி என்ன கஷ்ட படுகிறோம் என எனக்கு தெரியவில்லை. வேலை பளு வரும் போகும். அதற்க்கு தானே நமக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?

அதே போல் எதை தான் சொல்லி IT மக்களை மட்டம் தட்டுவது என்றில்லை. சாட்டில் பதில் சொல்லும் பொது 'S' என்று ஒரே எழுத்தில் பதில் தருகிறார்கள், பேரை சுருக்கமாக சொல்லி கூப்பிடுகிறார்கள். என்னப்பா உங்களுக்கு பிராபளம்? இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசு அலுவலகம் போல் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் ஒரு முழு நீள பேப்பரை வாங்கி இன்னமும் லீவ் லெட்டர் போல் எழுத வேண்டுமா இல்லை ஜஸ்ட் ஒரு SMS/ஈமெயிலில் I'm  sick  என சுருக்கமாக வேலையை முடிப்பதை வரவேற்பீர்களா?

அப்புறம் எல்லோரும் இப்போ விவசாயம் விவசாயம் என பேச ஆரம்பித்து விட்டார்கள். விவசாயம் என்னமோ இவர்களுக்கு பஞ்சு மிட்டாய் விற்பது போல் தோன்றுகிறது போலும். சார், நாங்கலாம் என்ன பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். விவசாயத்தில் கொட்டை போட்ட அந்த கால பெரியவர்களே தற்போது விவசாயம் செய்ய முடியவில்லை என நிலத்தை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு ஊர் பக்கம் வந்து விடுகிறார்கள். பல காலம் விவசாயம் பார்த்த என் தந்தை அடிக்கடி இதை சொல்வார். இன்னமும் என் நினைவில் உள்ளது. 'Agriculture is like  gambling' என்று. விவசாயம் பார்ப்பதை நான் தவறாக சொல்லவில்லை. அது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று தான் கூறுகிறேன்.

அப்படி விவசாயம் பார்க்க IT வேலையை விட்டு விட்டேன் என கூறிய ஓரிருவரிடம் எப்போ வேலையை விட்டீர்கள் என கேட்கப்பட்ட போது ஒரு ஆறு ஏழு வருடங்கள் IT யில் வேலை பார்த்த பிறகு தான் தங்கள் வேலையை விட்டதாக ஒத்துக்கொண்டார்கள். அதில் ஒரு நேர்மை தெரிந்தது. அதாவது வேலையை கஷ்டம் என எடுத்தவுடனே விட்டு விடவில்லை. ஓரளவு தங்கள் வாழ்வை செட்டில் செய்து கொண்ட பிறகு தான் தாங்கள் விருப்பப்பட்ட வேலையை செய்ய கிளம்பி இருக்கிறார்கள்.அது தான் நடைமுறையில் சாத்தியம்.

இதை பற்றியெல்லாம் நம் 'வீடு திரும்பல்' மோகன் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் என்பதை...அடுத்த பதிவில் பார்ப்போம்.  

நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சமீபத்திய பதிவு...

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...



share on:facebook

Wednesday, December 26, 2012

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...


விஜய் டி.வி. யே ஒரு கார்பரேட் கம்பெனி என்பதாலோ என்னவோ சென்ற வார நீயா நானாவில் கார்பரேட் வாழ்க்கை பற்றிய விவாதத்தின் போது  மிஸ்டர். கோபிநாத்தின் வாய்ஸ் கொஞ்சம்  கம்மியாகவே தெரிந்தது.

அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் (இரண்டு புறமும்) பெரும்பாலானவை உண்மையில் நடப்பவை தான். இருந்த போதிலும் IT யில் வேலை என்றாலே எல்லோரும் சுக போகமாக வாழ்க்கையை நடத்துபவர்கள் போலவும், அதிக படியாக செலவு செய்பவர்களாகவும் எப்போதுமே சித்தரிக்க படுகிறார்கள். இப்படியே போனால் பின் T. ராஜேந்தர் படத்தில் வருவது போல காலேஜ் பசங்க என்றாலே பெண்கள் பின்னால் சுற்றுபவர்களாகவும், பரீட்சை என்றாலே பிட் அடிக்காமல் இருக்க மாட்டார்கள் போலவும் சித்தரிக்க படுவது போல் பின்னாளில் எல்லோரும் IT மக்களை பற்றிய தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு(பின்னாளில் என்ன இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு சக நண்பர்கள் சொல்வது கேட்கிறது!).

இனி, நிகழ்ச்சியிலிருந்து:

#IT வாழ்க்கை அடிமை வாழ்க்கை போல் சிலர் பேசினார்கள். அப்போ அரசாங்க உத்தியோகம் மட்டும் என்ன சுதந்திர வாழ்க்கையா? அப்படியே இருந்தாலும் ஒரு ரிசர்வேஷன் கவுண்டரில் உள்ளவர் இயற்கை உபாதைக்கு அஞ்சு என்ன ரெண்டு நிமிஷம் எழுந்து போனால் கூட நாமே கரிச்சு கொட்டுவோமே? 9 டு 5 ஆபிசில் இல்லையென்றால் அரசு அதிகாரிகள் விட்டு விடுவார்களா? உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். அது வேறு கதை. கொடுத்த வேலையை/கடமையை நேரம் காலம பார்க்காமல் செய்தால் அது அடிமை தனமாம். இன்னும் சொல்லப்போனால் வேலைக்கு சேர்ந்த முதல் ஒன்றிரண்டு வருடங்கள் மட்டும் பல கம்பெனிகளில் பாண்ட் போடுவார்கள். அதன் பின் யாரும் யாரையும் பிடித்து வைத்துக்கொள்வதில்லை/முடியாது. இதில் எங்கிருந்து அடிமைத்தனம் வந்ததென்று தெரியவில்லை. இதோ, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சக மேனேஜர் ஒருவரிடம் வேலை பார்க்கும் ஒரு ஊழியர், உங்கள்  டீமில் வேலை செய்ய பிடிக்கவில்லை. என்னை உடனே உங்கள் பிராஜக்டில் இருந்து ரிலீஸ் செய்யுங்கள் என்று கேட்டாராம். இதை என்னவென்று சொல்லுவது?

#அடுத்து அளவுக்கு அதிகமாக/ஆடம்பரமாக செலவழித்தல். இது எப்போதுமே எழுப்பப்படும் பொதுப்படையான ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் ஒரு மிக சிறிய சதவிகிதம் மட்டுமே அப்படி செலவு செய்வார்கள்/முடியும். அமெரிக்காவில் இருந்த போது கூட நான் தான் கடைசி ஆளாக ஐ-போன் வாங்கினேன். பணம் இல்லை என்று இல்லை. எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. என்னையும் சேர்த்து இந்த வருடத்தில் இரண்டு பேர் எங்கள் சென்னை கிளைக்கு அமெரிக்காவில் இருந்து மாற்றல் வங்கி வந்தோம். நான் இன்னமும் 1997 மாருதி தான் ஒட்டி செல்கிறேன். மற்ற இருவர் புது டூ வீலர் தான் வாங்கினார்கள். பெரும்பாலும் வீட்டில் நல்ல வசதியும் வேலையில் சேரும் புதிதில் தான் சிலர் கண்ணா பின்னாவென்று செலவு செய்வார்கள். அப்படியே செய்தால் தான் என்ன? அதனால் பொருளாதாரத்திற்கு தான் நல்லது. சும்மா அப்படியே மூட்டை மூட்டையா சேர்த்து வைக்கிற பழக்கத்த முதலில் விட்டு ஒழிப்போம்.

#பெயர் சொல்லி கூப்பிடுவது மற்றும் கெட்ட வார்த்தைகள் பிரயோகம். இதில் வருத்தப்பட பெரிசா என்ன இருக்குனு தெரியல. சார், சார்னு இன்னும் தனக்கு மேல உள்ளவர்களுக்கு சலாம் போட்டுகிட்டே இருக்கணும்னு எதிர் பார்க்குறாங்களா? மேலை நாடுகளுடன் IT தொடர்பு உள்ளதால் அங்குள்ள  வழக்கம் போல் பேர் சொல்லி எல்லோரையும் கூப்பிடுகிறோம். அதற்காக அப்பா, அம்மாவையும் என்ன பேர் சொல்லியா வீட்டில் கூப்பிடுகிறோம்? கெட்ட வார்த்தைகள். சிலர் அதன் முழு அர்த்தம் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக உபயோக படுத்துகிறார்கள். இதையும் எல்லோரும் எல்லோரிடத்திலும் செய்வதில்லை. தமிழிலும், மற்ற தொழில் செய்பவர்களும் கெட்ட வார்த்தை பேசுவதே இல்லையா என்ன? இன்னும் சொல்லப்போனால் இங்கு யாரும் கெட்ட வார்த்தையை அடுத்தவர்களை திட்ட உபயோகிப்பதில்லை. மாறாக அவர்களுக்குள்ளாக 'ஷி...' என்று கூறிக்கொள்வார்கள். மற்ற வேலைகளில் கெ.வா. அடுத்தவர்களை திட்டவே உபயோக படுகிறது.

#கை நிறைய சம்பளம். வாங்கினா என்ன? கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம பாதி மாசத்தில் இருந்து அடுத்தவரிடம் கை ஏந்தாமல் இன்றைய இளைஞர்கள் வாழ்கையில் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? நான் முன்பே கூறியது போல் அதுவும் ஆரம்ப காலத்தில் பெரிய சம்பளமாக தோன்றும். பின் திருமணம் குழந்தைகள் என ஆன பின் எவ்வளவு வாங்கினாலும் பத்தாது. நான் ஒரு காலத்தில் பாசஞ்சர் ரயிலில் பொது பெட்டியில் துண்டை விரித்து இடம் பிடித்து சென்னை வருவேன். இப்போ எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் செய்து படுத்து தூங்கி போவது ஒரு முன்னேற்றம் தானே? அப்படி தானே எல்லோரும் சொல்லி வளர்கிறார்கள். வாழ்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும். நல்ல வளமான வசதியான வாழ்வு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று. எல்லாம் நாங்கள் உழைத்து தானே சம்பாதிக்கிறோம். தவறான வழியில் அல்லவே?

                                                                                                                            இன்னும் வரும்...

தொடர்புடைய பழைய பதிவு: நீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் ?

  

share on:facebook

Thursday, December 20, 2012

பெண்களும் அண்ணாவும்...


பேரறிஞர் அண்ணா அரசியலில் மட்டுமன்றி அறிவாற்றலிலும் மாமேதை என்பதை எல்லோரும் அறிவர். அமெரிக்க உள்துறை மற்றும் யேல் பல்கலை கழகத்தின் விருந்தினராக 1968 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற அறிஞர் அண்ணாவுக்கு யேல் பல்கலைகழகம் chubb fellowship கொடுத்து கவுரவித்தது. அமெரிக்கர் அல்லாதவர் ஒருவர் chubb fellowship ஆனது அதுவே முதல் முறை. தினமும் படுக்க போகும் முன் இரு புதிய ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்வது அறிஞர் அண்ணாவின் வழக்கமாக இருந்தது.

இனி வருவது நம் லோக்கல் அண்ணாக்களை பற்றியது .

எங்கள் நிறுவனத்தில் வெளி மாநிலங்களில் இருந்து (பெரும்பாலும் மும்பையிலிருந்து) வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும் trainees பலரும் அருகே உள்ள கம்பெனி கெஸ்ட் ஹவுசில் தங்கி உள்ளார்கள். இவர்களும் எங்கள் கம்பெனி பஸ்ஸில் தான் போய் வருவார்கள். பெரும்பாலான பஸ்கள் காண்ட்ராக்ட் முறையில் ஓடுவதால் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட இடத்தில் தான் ஊழியர்களை ஏற்றி இறக்குவார்கள். இருந்தாலும் இந்த (வட இந்திய) பெண்கள் அழகாக கொஞ்சும் தமிழில் 'அண்ணா...பிளீஸ் ஸ்டாப்' என்று டிரைவரிடம் கேட்டால் போதும், வண்டி எங்கே போய் கொண்டிருந்தாலும் உடனே அங்கேயே நிறுத்தி விடுவார். சார், டிரைவர் என்று சொல்வதை விட 'அண்ணா' என்று சொல்லும் போது அதற்குள் ஒரு பாசம் ஏற்பட்டு விடுகிறது போலும்.

அதே போல் அவ்வப்போது ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் போதும் பார்த்திருக்கிறேன். பெண்கள் பெரும்பாலும் 'அண்ணா' என்ற சொல்லை தான் உபயோகிக்கிறார்கள். அது ஆட்டோ டிரைவர்களுக்கு மரியாதையையும், அண்ணன் என்று உறவுக்குள்ளும் வருவதால் பெரும்பாலும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. தற்போது நடந்து வரும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை பார்க்கும் போது பெண்கள் இவ்வாறு 'அண்ணன்' முறை வைத்து அழைப்பதே நன்று என்று தெரிகிறது.

மும்பையில் இருந்த போது எங்கள் அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஒருவர் ரெண்டல் காண்ட்ராக்ட் சம்பந்தமாக என்னை ஒவ்வொரு முறை அழைக்கும் போது 'பையா(baiya), பையா' என்பார். ஆரம்பத்தில் என்னடா இவ்வளவு சின்ன பொண்ணு நம்மை பார்த்து பையா என்று அழைக்கிறதே என்று எனக்கு எரிச்சலாக இருந்தது. பின் வட இந்திய நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, பையா(baiya) என்றால் சகோதரா என்று அர்த்தம். உங்களை சகோதரா என்று தான் அந்த பெண் அழைத்திருக்கிறாள் என்று கூறினார்.

ஹ்ம்ம்...அண்ணா என்றாலே பாசமும் மரியாதையும் தான். உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா இது மாதிரி?




share on:facebook

Tuesday, December 18, 2012

12/12 ரஜினியை நேரில் சந்தித்த அனுபவம் + பிறந்த நாள் செய்தி


ரஜினியை அவரின் முப்பத்தி ஏழாவது பிறந்த தினத்தன்று ரசிகர் மன்ற நண்பர்களுடன் சந்தித்து வாழ்த்து கூறினோம். பிறந்த நாள் அன்று கூட்டம் நிறைய இருக்கும் என்று அதற்கு முன் தினம் இரவே அவரது வீட்டில் சந்தித்து பிறந்த நாள் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினோம்.

இரவு பதினோரு மணிவரை டப்பிங்கில் (மிஸ்டர் பாரத் என்று நினைக்கிறன்) இருந்து விட்டு வீடு திரும்பியவர் நாங்கள் மாலையிலிருந்து அவரை காண காத்திருக்கிறோம் என அறிந்து வீட்டிற்க்குள் நுழையும் முன் ஒரு நிமிடம் திரும்பி வந்து வரவேற்பறையில் காத்திருந்த எங்களை பார்த்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் என்னமா கண்ணு? எல்லோரும் சவுக்கியமா? என கேட்டு விட்டு. இதோ ஒரு அஞ்சு நிமிஷம், வந்துடுறேன் என விடு விடுவென்று உள்ளே சென்றவர், அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் பிரஷாக வந்து எங்களுடன் ஒரு பத்து நிமிடங்கள் பேசி இருந்து விட்டு நாங்கள் கொண்டு வந்திருந்த பிறந்த நாள் பரிசுகளை பெற்றுக்கொண்டு, எல்லோரும் பார்த்து பத்திரமா ஊருக்கு போங்க அது தான் எனக்கு முக்கியம் என விடை பெற்று சென்றார்.

ரஜினி பிறந்த 12/12 நாளுக்கு அடுத்த வாரம் 19/12 என் பிறந்த நாளாக்கும். எனக்கு மட்டுமல்ல. தி.மு.க. வின் பொது செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் அன்று தான் பிறந்த நாள். இதை விட ஒரு சிறப்பு அம்சம் என் அண்ணனுக்கும் அன்று தான் பிறந்த நாள். அப்படியென்றால் நீங்கள் இரட்டை பிறவியா என கேட்பவர்களுக்கு? இல்லை, எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். ஆம், என் அண்ணன் பிறந்து சரியாக மூன்று வருடங்கள் கழித்து அதே மாதம் அதே  தேதியில் நான் பிறந்தேன்.

சிறு வயதாக இருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அம்மாவின் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்று சாக்லேட்டுகள் இருவருமாக சேர்ந்து எடுத்து சென்றால் எனக்கு ஏற்படும் ஒரே கவலை இருவருக்கும் சேர்த்து ஒரே பரிசு கொடுத்து விட்டால் யார் அதை எடுத்துக்கொள்வது என்று தான். அதன் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வீட்டில் ஸ்வீட் செய்வதோடு நின்று விட்டது. இருந்தாலும் இன்று வரை பிறந்த நாளை மகிழ்வுடன் வீட்டிற்குள்ளே கொண்டாடி வருகிறோம். தற்போதெல்லாம் குழந்தைகள் ஏதாவது ஒரு பிறந்த நாள் பரிசு (எனக்கு தெரியாமல்) வாங்கி வைத்து பிறந்த நாள் அன்று பரிசாக எனக்கு தருகிறார்கள். சென்ற முறை என் பெரிய மகள் ஒரு அழகான வாட்ச் வாங்கி கொடுத்தாள் (அவள் சேமிப்பிலிருந்து). இந்த முறை என்ன கிடைக்கும் என ஆவலாக உள்ளேன்.

இப்போதெல்லாம் பிறந்த நாள் வரும் போது கூடவே நமக்கு வயதாகிறது என்ற நினைப்பும் கேட்காமலேயே வந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மனிதனுக்கு அப்படியே மீண்டும் வயது குறைந்து கொண்டே போனால் எப்படி இருக்கும்? சைக்கிளுக்கு கால் எட்டாமல் மூன்று காலில் ஓட்டுவதும், டீன் ஏஜ் பருவத்தில் கோ-எட் பள்ளியில் படிப்பதும், கல்லூரி என்றால் கட் அடித்து விட்டு சினிமா/பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவதற்கு தான் என்று அந்த கட்டுபாடற்ற வாழ்க்கை இனி கிடைக்குமா?

ஹ்ம்ம்...இப்படி ஆசை படுவது தான் மனிதன் முதிச்சி அடைய காரணமாமே?

ரஜினி பதிவுகள்...

McDonald's இட்லி வடை. ருசித்து சாப்பிட்டார் ரஜினி.

இணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆல் அபவுட் ரஜினி.காம்

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...

share on:facebook

Thursday, December 6, 2012

IT அவலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்...

உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி வேலை நேரம்.

இக்கரைக்கு அக்கறை பச்சை என்பார்கள். அப்படிதான் இந்த IT வேலையும். வெளியில் உள்ளவர்கள் எல்லாம் இன்று விலைவாசி உயர்வு தொடங்கி, ரியல் எஸ்டேட்டின் விண்ணை முட்டும் விலை வரைக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் இந்த IT யும், அதில் வேலை செய்பவர்களும் தான் என்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்க்கும் போது எல்லாம் நல்லாத்தான் தெரியும். உள்ளே வந்து பார்த்தால் தான் எங்கள் நிலைமை புரியும். கீழே சொல்லப்படும் எல்லாம் பல IT கம்பெனி நண்பர்கள் மூலம் வாய் மொழியாக கேட்டது.

நாள் முழுதும் ஏசியில் உட்கார்ந்து வேலை செய்கிறோம் என்று பலர் பொருமுவார்கள். ஆனால் IT கம்பெனிகளில் பல இடங்களில் ஏ.சி. வேலை செய்வதே இல்லை. இதை கேட்டால் 'டிசைனே'  அப்படிதான் சார் என்பார்கள். தொடர்ந்து கம்ப்ளைன்ட் செய்தால் ஒரு காற்றாடியை தூக்கி கொடுத்து விடுவார்கள். நாள் பூரா இண்டஸ்ட்ரியல் பேன் முன் உட்கார்ந்து பாருங்கள். மாலையில் வெளியே போகும் போது முகம் எல்லாம் பேயறைந்தது போல் இருக்கும்.

அடுத்து வேலை நேரம். உலகம் பூராவும் எட்டு மணி நேர வேலை என்றால் IT கம்பெனிகளில் மட்டும் ஒன்பதரை மணி நேரம் வேலை. இடையில் ஒரு மணி நேரம் மதிய சாப்பாட்டுக்கு என்றாலும் பெரும்பாலானோர் உட்காரும் இடத்திலேயே பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையை தொடங்கி விடுவர். எட்டு மணி நேரமாக தான் இருந்தது முதலில். 2008 வாக்கில் ரூபாயின் மதிப்பு உயர்ந்த போது (ஒரு டாலர் நாற்பது ரூபாய்க்கும் குறைந்த போது) லாபம் குறைகிறது என்று சொல்லி கூட அரை மணி நேரம் வேலை பார்க்க சொன்னார்கள். இன்று ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து ஒரு டாலர் ஐம்பத்தைந்தை தாண்டி விட்டது. ஆனால் இவர்கள் மட்டும் அதே நேரத்தை பின் பற்றுகிறார்கள்.

தீபாவளி பொங்கல் என்றால் எல்லோரும் ஓரிரு நாள் முன்பே ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுவார்கள். சென்னையே வெறிச்சோடி கிடக்கும். ஆனால் அப்போது தான் அந்த ப்ரொடக்ஷன் பிராப்ளம், இந்த  இம்ப்ளிமெண்டேஷன் என்று முதல் நாள் இரவு வரை கட்டாயமாக இருக்க வைத்து விடுவார்கள்.

ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் ஷிபிட் முடிந்தால் கூட உடனே வீட்டுக்கு போக முடியாது. 11 ஷிப்ட் முடிந்தவன் 12 மணி ஷிப்ட் முடியும் வரை காத்திருந்து அவனோடு சேர்ந்து தான் வீட்டுக்கு கேப்பில் போக முடியும். கேட்டால் காஸ்ட் கட்டிங் சார். கேப் புல் ஆனால் தான் எடுக்க சொல்லி இருகிறார்கள் என்று அட்மினில் புலம்புவார்கள்.

படிச்சு முடிச்சோமா, வேலைக்கு சேர்ந்தோமா என்று இந்த தொழிலில் இருக்க முடியாது. வருடம் வருடம் அதை படி இதை படி அப்போதான் புரோமஷன் என்று நம் குழந்தைகளோடு சேர்ந்து நம்மையும் (வலு) கட்டாயமாக மீண்டும் படிக்க வைக்கிறார்கள். இல்லை என்றால் இன்கிரிமென்ட் கிடையாது புரோமோஷன் கிடையாது. என்ன தான் மாடு மாதிரி வேலை செய்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எந்த கம்பெனியிலும் வளர முடியாது.

ஆம், முதல் இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் அதிக பட்சமாக வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். அதன் பின் பெரும்பாலும் இறங்கு முகம் தான். இதற்க்காகவே ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கம்பெனி மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி மாறுவது எளிதாகினும் அதன் பின் மீண்டும் முதலிலிருந்து நம் திறமையை புது கம்பெனியில் நிருபித்து காட்ட வேண்டும்.

நான் முப்பது ஆண்டுகள் செர்விசில் இருந்தேன் என்றெல்லாம் பெருமை பட அரசு ஊழியர்களால் தான் முடியும் போல். இன்னும் சில ஆண்டுகளில் IT யை சேர்ந்தவர்கள் அறுபது வயதை தொடும் காலம் வரும். ஆனால் அது வரை தொடர்ந்து IT சமூகம் வேலையில் தொடர்வார்களா என்பது சந்தேகமே. எனக்கு தெரிந்து நாற்பது நாற்பத்தி ஐந்து வயதை நெருங்கிய, நன்றாக சம்பளம் வாங்கும் IT நண்பர்கள் சிலர் தற்போதே வேலையை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். அந்த அளவிற்கு வேலை பளு. மன அழுத்தம்.

இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் குறைந்து விடும் என நம்புகிறேன்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்...

IT நிறுவனங்களும் பெண்களின் ஆடை குறைப்பும்

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2

ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள்


share on:facebook

Tuesday, December 4, 2012

அதிரடி அயல்நாட்டு சட்டங்கள். அதிர்ச்சியில் இந்திய பெற்றோர்கள்.

//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//

நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின்  முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.

ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.

விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.

அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள்  அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.

முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.

அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன். 

share on:facebook

Monday, December 3, 2012

நொறுக்ஸ்: மிலிடரி காதல் - ஹிந்துவின் காவடி.

இந்த வார நொறுக்ஸ்:

1. இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் இலங்கை பெண் ஒருவரை காதலித்து பின் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளார். ராணுவ சட்டப்படி பணியில் உள்ள ஒருவர் வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்ள முடியாது போலும் (விபரம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தலாம்).

இந்நிலையில் நம் ராணுவ வீரர், தான் வேறொரு நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பல காரணங்களை காட்டி ராணுவம் அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து ராணுவ வீரர் கோர்ட்டில் வழக்கு தொடர கோர்ட் அவருக்கு சாதகமாக தீர்பளித்துள்ளது.

அது மட்டுமல்ல. வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்வதாலேயே அவரோ அவர் திருமணம் செய்து கொண்டவரோ நம் நாட்டுக்கு துரோகம் செய்வார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன் கருத்தை வெளியிட்டு இருக்கிறது. ஹ்ம்ம்..காதல் செய்வதில் அதிலும் வெளிநாட்டு பெண்ணை  என்றால் இவ்வளவு பிரச்சனையா?

2. இதுவும் இலங்கை சம்பத்தப்பட்டது. ஹிந்து நாளிதழ். ஒரு காலத்தில் விரும்பி படித்ததுண்டு. ஆனால் சில வருடங்களாக, குறிப்பாக இலங்கை விசயத்தில் இலங்கை அரசின் பத்திரிக்கையாகவே மாறிவிட்டது. இலங்கையில், இறுதிகட்ட போரில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் பலியாகி, உள்நாட்டிலேயே அகதிகளாக கொட்டடிகளிலும், திறந்த வெளி கேம்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது கூட, ஹிந்து நாளேட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிலுள்ள டெண்ட்டுகளை முழு பக்கத்தில் கலரில் புகைப்படங்களாக வெளியிட்டு, உலகிலேயே சிறந்த அகதிகள் முகாம் இலங்கையில் தான் உள்ளது என்று புகழாரம் சூட்டியது. அட கண்றாவியே! இதையெல்லாமா பாராட்டுவார்கள்?

தற்போது இலங்கையிலிருந்து கடிதம் என்ற தலைப்பில் அவ்வப்போது ஏதாவது ஒன்றுக்கும் உதவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. பிராபகரன் வாழ்ந்த வீட்டை யாரும் பார்க்க போவதில்லை. அதற்க்கு பதிலாக இலங்கை அரசு அமைத்துள்ள போர் மியூசியத்தை மக்கள் சாரி சாரியாக சென்று பார்த்து வருகிறார்கள் என்று சொல்லி வருகிறது.

இன்னொரு கடிதத்தில் இலங்கை மக்கள் இப்போது தான் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும், மிக விரைவில் பெரிய பெரிய தொழில்கள் ஆரம்பித்து செல்வத்தில் கொழிக்க போகிறார்கள் என்று ஆருடம் கூறிக்கொண்டு இருக்கிறது.

இதை தவிர அவ்வப்போது ஹிமாச்சல் பிரதேசத்து பிரச்சனையில் ஒரு மாதிரியாக சீனாவுக்கு வக்காலத்து வாங்குவது போல் அவ்வப்போது எழுதி வருகிறது.

ஹ்ம்ம்...எப்படி இருந்த பத்திரிக்கை இப்படி ஆகிவிட்டது?

share on:facebook