Sunday, November 13, 2011

"டைனமிக்" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலாச்சாரமும்

சமீபத்தில் "டைனமிக்" கல்யாணம் பற்றி ஒரு வீடியோ பதிவை பார்த்து அதிர்ச்சியானேன். ஐயர் வைத்து, ஆகம விதிகள்படி சடங்குகள் நடத்தி திருமணம் நடத்துவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. அந்த வகையில் எங்கள் குடும்பத்தில் முடிந்தவரை புரியாத சடங்குகளை நாங்கள் பெருமைக்காக செய்வதேயில்லை. அதே நேரத்தில் புரட்சிகரம் என சொல்லிக்கொண்டு நமக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் செயல்படுவது அதை விட கொடுமை.


"டைனமிக்" திருமணங்களில் மணமக்களுக்கு ஒரு விதவை தாய் மாலை எடுத்துக்கொடுக்க அதை மணமக்கள் மாற்றிக்கொள்கிறார்கள். இதெல்லாம் சரிதான். அடுத்ததாக மணமக்கள் ஒருவரை ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் ஆரத்தழுவி கட்டி கொள்கிறார்கள். இது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட, சரி இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என கூறி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், அதன் பிறகு வருகிறது பாருங்கள் ஒரு சடங்கு. அது தான் "புரட்சிகர திருமணம்" என்ற வார்த்தைக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்கு வரும் ஒவ்வொருவரும், ஆண்கள் மணப்பெண்ணையும், பெண்கள் மணமகனையும், ஒருவரை ஒருவர் எல்லோர் முன்னிலையிலும் திருமண மேடையிலேயே இறுக கட்டி தழுவிக்கொள்கிறார்கள். இதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள். பார்க்க சகிக்கலை. கருமம். கண்றாவி.

ஒரு வேளை "டைனமிக்" திருமண குழுவினர், மேலை நாடுகளில் ஒருவரை ஒருவர் கை கொடுத்துக்கொள்வதில்லையா? கட்டி தழுவி முத்தம் இட்டுக்கொள்வதில்லையா என கேட்டால், அட பாவிகளா அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கீறீர்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலை நாடுகளில் கூட ஒரு பெண்ணை சந்திக்கும்போது அப்பெண் முதலில் கைகளை நீட்டினால் மட்டுமே ஒரு ஆண் தன் கைகளை நீட்டி கை கொடுக்கலாம். அதே போல், ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியோ அல்லது காதலர்களோ இல்லாத பட்சத்தில், ஒருவரை ஒருவர் ஆரத்தளுவுவது என்பது "டைனமிக்" கலாச்சாரம் போல் இறுக கட்டித்தழுவ மாட்டார்கள். உரிமை இல்லாத பெண்ணை தழுவும் போது ஒரு ஆணின் கைகள் மட்டும் தான் அப்பெண்ணின்  தோள்களில் படும். முடிந்த மட்டும் பெண்ணின் மார்பு பகுதியோ மற்ற அவயன்களோ தங்கள் மேல் படாதவாறு பார்த்துக்கொள்வார்கள்.

அதே போல், கன்னத்தில் முத்தமிடுவது என்பது ஒரு (symbolic) அடையாளமாகத்தான் செய்வார்களே ஒழிய, "டைனமிக்" கலாச்சாரம் போல் உரிமை இல்லாத ஒரு பெண்ணின் கன்னத்தில் பஜக் பஜக் என்று முத்தமிட மாட்டார்கள். பெண்ணின் கன்னத்தில் தங்கள் கன்னத்தை வைத்து பெயருக்கு முத்தம் கொடுப்பது போல் வாயை அசைப்பார்கள். அப்பெனின் மீது அதிகபட்சம் உதடுகள் படவே படாது.

"டைனமிக்" கல்யாணத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் மணமக்களை கட்டிப்பிடித்து முத்தமிடுவதை பார்க்கும் போது காதலன் காதலிகள் கூட  தோற்று போய் விடுவார்கள். அப்படி ஒரு இறுக்கம். ஆசை போல.  என்னமோ இதற்க்கேன்றே காத்திருந்தது போல் ஒவ்வொரும் அப்படி  இறுக  கட்டிப்பிடுத்து முத்தமிடுகிறார்கள். அதுவும் ஒரு நொடி இரண்டு நொடி  அல்ல. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கத்திலேயே  இருக்கிறார்கள்.  என்னமோ போங்க...இந்த இயக்கத்திற்கு ஒரு கவிஞர், அவர் இவர் என்று ஒரு பட்டாளம். இந்த கும்பலை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் இன்னும் பகிரலாம்.


share on:facebook

4 comments:

அமுதா கிருஷ்ணா said...

லூசுகளா???

CS. Mohan Kumar said...

:)))

ஆதி மனிதன் said...

@ அமுதா கிருஷ்ணா said...
//லூசுகளா??? //

சரியா சொன்னீர் போங்க...

Madhavan Srinivasagopalan said...

But, it's a old story.. atleast few years back this was held. now, not so, I think

Post a Comment