Monday, November 7, 2011

பேய் விரட்டும் அமெரிக்கர்கள்



பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடும்பத்துடன் காலடி எடுத்து வைத்த முதல்  நாள்  இரவு.  வந்த களைப்பில் உடனே தூங்கி விட்டோம்.  அடுத்த நாள் எழுந்து  குழந்தைகளுடன் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின்  வரவேற்பு  அறைக்கு  சென்றோம். அவ்வளவு தான், குழந்தைகள்  அலறியடித்து என் பின்னே  வந்து  ஒடுங்கி நின்றார்கள். பின்னே, அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட், காத்திருந்தவர்கள்  என எல்லோரும் பேய் பிசாசுகள் போல்  உடை அணிந்து கொண்டு எவ்வளவு  கொடூரமாக காட்சி அளிக்க முடியுமோ  அந்த அளவுக்கு தங்கள் உடலிலும்  வண்ணங்கள் மூலம் மேக்கப்  போட்டிருந்தார்கள். 

உலகில் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் தான் மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனங்களும் நிறைந்திருக்கும் என பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அமேரிக்கா போன்ற மேலை   நாடுகளில் இன்னமும் ஹாலோவீன் (halloween) போன்ற கொண்டாட்டங்கள்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-31 ம்  தேதி ஹாலோவீன் இங்கு  கொண்டாடப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், பேய், பிசாசு  போன்ற  கெட்ட சக்திகள் நம்மை அண்டாமல் இருக்க, அவைகள் போல் உடை அணிந்து கொண்டு (அல்லது அவர்களை விட கோரமாக) அவைகள் விரட்டுவதே ஹாலோவீன் கொண்டாட்டத்தின் நோக்கம்.

அவையே சிறிது சிறிதாக மாறி அவரவர்களுக்கு பிடித்தமான ஆடைகளை  அணிந்து கொள்வதும் வழக்கமாகி போனது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான உடைகளை அன்று அணிந்து கொண்டு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வார்கள். பிறந்த ஒரு மாத  குழந்தைகளுக்கு கூட கார்டூன் காரெக்டர்கள் போல் அழகழகான உடை அணிந்து அழகு பார்ப்பார்கள். அதே நேரத்தில் சிலர், பார்க்கவே முடியாத அளவிற்கு கோரமாக முகமூடி அணிந்தும் (எலும்புகூடு போல்), உடல் முழுதும் ரத்தம் வழிவது போலவும் உடை அணிபவர்களும் இருப்பர்.


இது எல்லாவற்றுக்கும் மேல், ஹல்லோவீன் அன்று குழந்தைகள் எல்லோரும் ஒரு பையை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி "Trick or Treat" என்பார்கள். உடனே வீட்டில் உள்ளவர்கள் கை நிறைய  மிட்டாய்களை (candies) அள்ளி அக்குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி கிடைக்கும் மிட்டாய்கள் கிலோ கணக்கில்  தேறும். கேக்கவா வேண்டும் குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு?     

அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குழந்தையும் நான் டாக்டர் ஆக வேண்டும் நான் பைலட்டாக வேண்டும் என்று அவர்களை போலவே உடை அணிந்து அவர்கள் ஆசை (மற்றும் பெற்றோர்களின் ஆசையையும்)  தீர்த்துக்கொள்வார்கள். ஹாலோவீன் பரேடு என்று பள்ளிகளில் ஹாலோவீன் வேடமிட்ட அனைத்து குழந்தைகளும் வரிசையாக ஊர்வலம் போவதை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

அதே போல் பெரும்பாலான வீடுகளில் பேய் வீடுகளுக்குரிய டெகரேஷன்  செய்திருப்பார்கள். வீட்டை சுற்றி சிலந்தி வலை போல் பஞ்சு நூலால் சுற்றி  ஆங்காகே பொம்பை வவ்வால், சிலந்தி ஆகியவையும், சில வீடுகளில் எலும்பு  கூடுகள், பேய் பொம்மைகள் போன்றவற்றையும் நிறுத்தி வைத்து  பயமூடுவார்கள்.   

கொசுறு செய்தி: நாங்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளில்  தற்போது பெரிய அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆதலால் இந்த வருடம் ஹாலோவீன் தினத்தன்று இந்திய குழந்தைகளின் ஆதிக்கம் நிறைய இருந்தது. வீட்டுக்கு வீடு கும்பலாக இந்திய குழந்தைகள் பல்வேறு வேடமிட்டு மிட்டாய்கள் வாங்க சென்றார்கள். என் குழந்தைகள் மட்டுமே சுமார் 7-8 பவுண்டுகள் சாக்லேட்டுகள் அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆமா, நம்மூர்ல பேய் விரட்ட இன்னும் விளக்கமாறும், (போலி) சாமியார்கள் தான்  இருக்கிறதா? 

share on:facebook

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த பேய் கதை எல்லா நாட்டிலும் இருக்கிறததா..

சுவாரஸ்யமான தகவல்..

dr.tj vadivukkarasi said...

நல்ல பதிவு. ஹாலோவீன் பற்றி ஆங்கில படங்களில் பார்த்ததோடு சரி. இங்கு(தில்லியில்) இந்த கார்த்திகை மாதத்தில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருக்குமென்றும் அதனால் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்குமாறும் என் வீட்டுப் பணி உதவியாளர் கூறுகிறார்!!!

Philosophy Prabhakaran said...

இந்த மேட்டர் நல்லா இருக்கே...

ஆதி மனிதன் said...

நன்றி சௌந்தர்

நன்றி பிரபா

ஆதி மனிதன் said...

dr.tj vadivukkarasi said...

//இங்கு(தில்லியில்) இந்த கார்த்திகை மாதத்தில் பேய்கள் நடமாட்டம் அதிகம் இருக்குமென்றும் அதனால் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி வைக்குமாறும் என் வீட்டுப் பணி உதவியாளர் கூறுகிறார்!!! //

ஹ்ம்ம்... தில்லியில் அரசியல்வாதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதை தான் சொல்கிறீர்களோ?

அமுதா கிருஷ்ணா said...

படிக்கவே ஜாலியா இருக்கே.காதலர் தின கொண்டாட்டத்திற்கு பதில் இந்த கொண்டாட்டம் இந்தியா வந்தால் நல்லாயிருக்கும்.

Post a Comment