Friday, February 22, 2013

பிப்ரவரி - 24 : ஏழைகளுக்கு என்ன பயன்?

தலைப்பை பார்த்து நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.

எனது நண்பரும் தஞ்சை பாம்பே ஸ்வீட் ஸ்டால் உரிமையாளருமான திரு. மணி அவர்கள் வருடந்தோறும் தன் தந்தையின் நினைவாக அவரின் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பாக 'இலவச கண் சிகிர்ச்சை' முகாமை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார். அதை பற்றிய விளம்பரம் தான் கீழே உள்ளது.


தஞ்சையை சுற்றியுள்ள கிராமபுறங்களில்  வீடு வீடாக சென்று ஏழை எளியவர்களை இலவச கண் பரிசோதனைக்கும், அதன் பிறகு தேவை எனில் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் கண் அறுவை சிகிர்சையும் செய்து கொள்ள அவரின் அறக்கட்டளை இந்த வார இறுதியில் ஏற்பாடு செய்துள்ளது.

இது பற்றி ஒரு முறை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பொதுவாக கிராமத்தில் நீங்கள் இருதய பரிசோதனை, பீபி, சுகர் எல்லாம் செக் பண்றீங்களா? அப்படின்னு கேட்டா, அட போப்பா, அதெல்லாம் நமக்கு வராது என சர்வ சாதரணமாக சொல்லி விடுவார்கள். அதே, ஐயா, உங்க கண்ணா டெஸ்ட் பண்ணி கொள்கிறீர்களா? இல்லைனா பிறகு பிரச்னை ஆச்சுனா பாக்க கொள்ள சிரமமா போய்டும்னு சொன்னா போதும். உடனே கவலைப்பட்டு ஆமாப்பா கண்ணு கொஞ்ச நாளா பிரச்னை பண்ணுது. அத பாக்கணும்னு  உடனே கிளம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கண்களுக்கு முக்கியவுத்துவம் கொடுகிறார்கள். அதுவே எங்கள் முகாமுக்கு பெரிய வரவேற்ப்பும், ஆர்வத்தையும் கொடுப்பதாக கூறினார்.

நமக்கு தெரிந்து நம் வீட்டில் வேலை செய்வோர், நமக்கு தெரிந்த எளியோர் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நம்மால் உதவ முடியாவிட்டாலும் இது போன்ற செய்திகளை அவர்களுக்கு தெரிவித்தால் போதும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவிற்கு இந்த தகவலை நாங்கள் சொல்லி விட்டோம்.

நீங்களும் சொல்வீர்கள் தானே? நன்றி.




share on:facebook

Thursday, February 21, 2013

'ஜெ' விஸ்வரூபம் - ஆசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகத்தில் இடம் இல்லை


இலங்கை அரசின் போர் குற்றங்களை காரணம் காட்டியும், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான தொடர் தமிழ் விரோத போக்கினை கண்டித்தும், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளும் ஆசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த தனது அரசுக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள ஆசிய விளையாட்டு போட்டி சங்கம் தடை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னமும் தனக்கு பதில் வரவில்லை என்றும் சுட்டி காட்டி உள்ளார்.

இந்த முடிவு சரியா தவறா என எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால், இப்படி ஏதாவது ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசுக்கு பல தரப்பிலும் இருந்து நெருக்கடிகள் கொடுத்த வண்ணம் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு அவர்களை அடக்க முடியும் என்பது மட்டும் என் கருத்தாகும்.

share on:facebook

Thursday, February 7, 2013

அமெரிக்க வாழ்க்கை: அதிகம் விரும்புவது ஆண்களா அல்லது பெண்களா?


இந்த பதிவு பெண்களை தவறாகவோ தரம் தாழ்த்தியோ எழுதும் எண்ணத்தில் எழுதப்படவில்லை. நான் கண்ட/கேட்டவற்றை வைத்து தான் இதை பகிர்கிறேன்.

அமெரிக்க வாழ்க்கை அனுபவம் என்பது இரண்டு வகை. ஒன்று தனியாகவோ/அல்லது கணவன் மனைவியாக அங்கு வாழ்வது. இரண்டாவது குழந்தைகளுடன் ஒரு முழு குடும்பமாக அங்கு இருப்பது. என்னை பொறுத்த வரையில் தனியாகவும் குடும்பமாகவும் அங்கு இருக்கும் வாய்ப்புகள்  கிடைத்தது. இதில் அதிக சுவாரசியம்/அனுபவங்கள் குடும்பத்துடன் இருந்த போது தான்(நம்பிட்டேன்...என்று வீட்டு அம்மணி சொல்வது கேட்கிறது).

சரி அதற்குள் போகும் முன் இந்திய பெண்களுக்கு அமெரிக்கா அதிகம் பிடிப்பதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம். மேலோட்டமாக சொல்லப்போனால் அங்கு அவர்களுக்கு வீட்டில்/மற்றும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரம் தான் அமெரிக்க வாழ்க்கை பிடித்து போக முக்கிய காரணம். அதை தவிர எனக்கு தெரிந்து சில குறிப்பிட்ட காரணங்களை தான் கீழே குறிப்பிட்டுளேன்.

# உடைகள்: சென்னையை தாண்டி ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வெளியில் நடந்தால் அதை பொதுஜனம் எப்படி பார்ப்பார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கு அவர்களுக்கு பிடித்தமான உடைகளை (இந்திய பெண்களை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கவுரவமான உடைகளை தான் அணிவர்) அணிந்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க போவதில்லை. சில ஊர்களில் அங்கிருக்கும் குளிருக்கும் வெயிலுக்கும் ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட்ஸ் அவசியமும் கூட. அதே போல் அவர்களுக்கான உடைகளும் சற்று சல்லிசு தான். இங்கு ஒரு பட்டுபுடவை வாங்கும் காசுக்கு அங்கு ஒரு டசன் உடைகளை வாங்கி விடலாம். நமக்கும் காசு மிச்சம் தானே!

# பெர்சனல் டைம்: பெண்களுக்கு அங்கு நல்ல பெர்சனல் டைம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் இருப்பதாலும், வீட்டை பெருக்க, சுத்தம் செய்ய என்று பெரிதாக ஒன்றும் இல்லாததால் (அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தான் வீட்டை  (vacuum cleaning) சுத்தம் செய்வார்கள் ஹி..  ஹி... ஹி...) அவர்களுக்கென்று நிறைய நேரம் கிடைக்கும். இதற்க்கு இன்னமொரு முக்கிய காரணம், பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அவர்களே தான் செய்து கொள்ள வேண்டும். அம்மாக்கள் துணை தேவை படாது.

#குக்கிங்: அடுத்ததாக சமையல். இது ஒரு பொருட்டே இல்லை அமெரிக்காவில். இதை விட வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு? ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்/பழங்களை ஒரு தடவை வாங்கி வந்தால் போதும். தண்ணீரில் கழுவ கூட தேவை இல்லை. அப்படியே நறுக்கி போட்டு சமைத்து விடலாம். பத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளும் அதிக கஷ்டமில்லை. டிஷ் வாஷர் இருக்கையிலே. ஒரு கட்டத்தில் சாண்ட் விச், பீட்சா, நூடுல்ஸ், பாஸ்டா என அவ்வப்போது சாப்பிட பழக்கி கொள்வதால் தினமும் மூன்று வேளையும் சமைக்க வேண்டும் என்ற கொடுமை அங்கு அவர்களுக்கு கிடையாது.   

#நட்பு: நம்மூரிலேயே அவர்களது நட்பு வட்டாரம் பெரிதாக தான் இருக்கும். அங்கு கேட்க வேண்டுமா? எங்கள் கம்பெனியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் என்னுடன் பணியாற்றினாலும் எல்லோரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு துணைவியார் இருந்தால் அவர்கள் அனைவரும் நண்பி(பர்)களாக எல்லோரையும் தெரிந்து வைத்து இருப்பார்கள். நாம் வீட்டுக்கு வந்து அலுவலகத்தில் நடந்த கதையை சொல்லி முடிக்கும் முன்பே இது தான் எங்களுக்கு தெரியுமே. ரேஷ்மா சொன்னாள், ரேகா சொன்னாள் என்று சொல்லி நமக்கு பல்பு கொடுத்து விடுவார்கள்.

#டிரைவிங் த்ரில்: அடுத்ததாக டிரைவிங் சான்ஸ். நம்மூரில் சைக்கிள் ஓட்ட திண்டாடுவான் கூட அமெரிக்காவில் ஒரே வாரத்தில் கார் ஒட்டி விடுவான். அந்த அளவுக்கு டிரைவிங் அங்கு பழகுவதற்கும் ஓட்டுவதற்கும் ஈசி. அந்த வகையில் கார் ஓட்ட கற்றுக் கொண்டால் போதும். பெண்களுக்கு அங்கு டிரைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும். இந்தியா போனால் மீண்டும் கார் ஓட்ட முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்தில் எப்போதும், நான் தான் காரை ஓட்டுவேன் என்று விடாபிடியாக நம்மிடம் காரை பிடுங்கி ஓட்டும் போது  அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்தால் கூட கிடைக்காது என்றே எண்ணத் தோன்றும்.

#தனி குடித்தனம்(No offensive!): இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பொதுவாக விரும்பும் தனி குடித்தனம். அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் என்ற எந்த பிச்சு பிடுங்கல் இல்லாமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று எந்த பிரச்னையும் இல்லாமல்(!) வாழலாம் என்ற சூழ்நிலை.

#தன்னம்பிக்கை: எனக்கு தெரிந்து நண்பர்கள் வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி, முதல் தடவை அமெரிக்கா சென்ற போது அவர்களிடம் இருந்த பயம், தன்னம்பிக்கை இன்மை, கூச்ச சுபாவம் எல்லாம் அடுத்த முறை காணமல் போய் விட்டது. இது அவர்களே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம்.

இப்போ சொல்லுங்கள் அமெரிக்க வாழ்க்கை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமா பிடிக்காதா என்று? ஆமாம், ஆண்களை பற்றி கூறவேயில்லை என்பவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுகிறேன்...

இதை கூட நீங்கள் விரும்பி படிக்கலாம்...

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்...

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.







share on:facebook

திருச்சியில் குஷ்பு மீது திடீர் தாக்குதல்


திருச்சி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: dinamalar.com

share on:facebook