Thursday, December 29, 2011

ஒரு ரூபாய் = நாற்பத்தி ஏழு டாலர்கள் முப்பது சென்ட்ஸ்

2011 நினைவில் நின்றவை...

வேண்டும் விடுதலை: துனிசியாவில் ஏற்ப்பட்ட மக்கள் புரட்சி காரணமாக 2011 ஆண்டு, ஜனவரி மாதம் அந்நாட்டுக்கு கிடைத்த விடுதலை அப்படியே பல காலமாக ராணுவ/ஒரு நபர் ஆட்சியில் சிக்கி தவித்த எகிப்து மற்றும் லிபியாவிற்கு பரவி ஓரளவு அந்த நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தது. ஒசாமா பின் லேடன் சுட்டுக்  கொல்லப்பட்டதும் இந்த ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வு.

கை கூடுமா கூடங்குளம்: அணு உலை பல ஆண்டு காலம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் நேரத்தில் அதன் விளைவுகளையும், ஆபத்துகளையும் முன்னிறுத்தி ஒரு மக்கள் போராட்டம். இது நாள் வரை ஏன் மவுனமாக இருந்தார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. முன்னாள் குடியரசு தலைவரும் மதிப்பிற்குரிய இந்திய அணு விஞ்ஜானியுமான திரு. அப்துல் கலாம் அவர்கள் அணு உலையால் ஆபத்தில்லை என சொல்வது ஓரளவு ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.

பெரியாரும் பக்தர்களும்: இந்த பிரச்னையும் அப்படிதான். இத்தனை வருடங்களாக முல்லை பெரியார் ஆணை இவ்வாறு விஸ்வ ரூபம் எடுத்ததில்லை. திடீரென்று ஏன் பிரச்னை அவ்வளவு பெரிதாக ஆனது என தெரியவில்லை. ஒரு சிறிய இடை தேர்தலுக்காக என கூறுகிறார்கள். ஆனால், நம்ப முடியவில்லை. தமிழகத்தை சுற்றி உள்ள அனைத்து மாநிலங்களுடனும் தண்ணீர் தகராறு. வெளியூரில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் வேலை பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரையும் விட ஐயப்ப பக்தர்கள் தான் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதற்க்கு மத்திய அரசு கண்டிப்பாக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அல்லது சுப்ரீம் கோர்ட் கடுமையாக மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும். 

இணைந்த கைகள் பிரிந்தன: ஜெவும், சசியும் இணை பிரியாதவர்கள். இன்று பிரிந்து விட்டார்கள். அதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. சசி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என சசியை விலக்கியதற்க்காக ஜெவை பத்திரிகைகள் பாராட்டுகின்றன. அப்ப இவ்வளவு நாள் அவ்வாறு தவறு செய்தவரை ஒரு முதல்வர் தன்னுடனே வைத்திருந்தது குற்றம் ஆகாதா? வழக்கம் போல் அவர்கள் பிணக்கு எவ்வளவு நாட்களுக்கு என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உள்ளங் கையில் உலகை தந்தவர்: ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு இந்த உலகிற்கு மிக பெரிய இழப்பு. ஆப்பிள் தயாரிப்புகள் மூலம் நம் உள்ளங் கையில் உலகையே காண வைத்தவர். சிறு வயதில் அவர் பட்ட கஷ்டமும், துறவறத்தை நாடி சென்றதும் அது கை கூடாது போன நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்து, அப்பப்பா என்ன ஒரு மாற்றங்கள் அவர் வாழ்வில். ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எல்லோர் மனதிலும் நீங்காது நிறைந்திருப்பார். என்றும்.

2G விவகாரத்தில் பல "ஜீ" க்கள் உள்ளே: இந்தியாவில் இன்றும் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆம், இல்லையென்றால் பல முன்னாள் (மத்திய) அமைச்சர்களும், மாநில முதல் அமைச்சர் ஒருவரின் மகளும், எம்.பிக்களும், அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இந்தியாவையே உலுக்கிய 2G ஊழல் சம்பந்தமாக திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும், சம்பிரதாயமாக ஓரிரு நாட்கள் இல்லாமல் பல  மாதங்கள் சிறைவாசம் அனுபவித்ததும் நினைத்து  பார்க்க முடியாத ஒன்று.  இவையெல்லாம் சாத்தியமாவதற்கு மீடியாவும் ஒரு முக்கிய பங்கு.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: கொல்கத்தாவில் நிகழ்ந்த மருத்துவமனை தீ விபத்தும், சமீபத்தில் சென்னையில் நடந்த படகு விபத்தும் மனதை உருக்கிய சம்பவங்கள். கும்பகோணம் தீவிபத்து,  திருச்சி கல்யாண மண்டப விபத்து என எத்தனை விபத்துகள்  ஏற்பட்டாலும்  ஒவ்வொரு முறையும் அந்தந்த சம்பவங்களில் தொடர்புடைய  விசயங்களில் மட்டும் அதுவும் அப்போது மட்டும் கவனம் செலுத்தி விட்டு மற்ற  விசயங்களில் வரும் முன் காப்போம் என்ற உக்தியை மறந்து விடுவோம். சென்னையில் எத்தனையோ மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்களில்  இன்றும் தீயணைப்பு வசதிகளோ, தீயை தடுக்கும் முறைகளோ கையாளப் படுவதில்லை.  

அதிர்ஷ்டத்தின் மறு பெயர் தனுஷ்: முதலில் சூப்பர் ஸ்டாருக்கு மாப்பிள்ளையானது. தற்போது Why this kolaveri... Adi மூலம் உலகெங்கும்  பாபுலரானது. யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம். இப்பாடலின் வெற்றிக்கு எது காரணம் என இதுவரை எனக்கு புரியவில்லை. தமிழ் கலந்த ஆங்கிலமா? இசையா, குரலா, எது?

சபாஷ் தமிழர்கள்: என்ன தான் சொல்லுங்கள்? தமிழர்களை பற்றி பெருமையாக மற்ற மாநிலத்தவர்கள் பேச ஒரு காரணம் எப்போதும் உண்டு. அது ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியை தூக்கி எறிந்து விட்டு எதிர் கட்சிக்கு வாய்ப்பை கொடுப்பதுதான். இந்த முறை சர்வ  வல்லமை படைத்த ஆளும் தி.மு.க. வை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் ஜெயலலிதாவை முதல் அமைச்சர் ஆக்கியது. ஹ்ம்ம். தற்போதைய ஆளும் கட்சிக்கும் இதே நிலைமைதான் பின்னாளில். ஒழுங்காக ஆட்சி புரியவில்லை என்றால்.

ஒரு ரூபாய் = நாற்பத்தி ஏழு டாலர்கள்: என்ன நல்லா தானே எழுதிக்கிட்டு இருந்தே. இப்ப என்ன ஆனதுன்னு கேக்குறீங்களா? 2015 ல்  மூன்று லட்சம் அமெரிக்கர்கள் இந்திய மென் பொருள் கம்பெனிகளில்  வேலை பார்ப்பதற்காக இந்தியா செல்வர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.  இப்போதே இன்போசிஸ் விப்ரோ போன்ற கம்பனிகளில் இந்தியாவில்  அமெரிக்கர்கள் வேலையில் சேர்ந்துள்ளார்கள். அப்படி ஒரு நிலைமை  வந்தால், அப்பாடா ஒரு வழியாய் நாங்கள் எல்லாம் இந்தியா திரும்பி அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு (onsite) வரும் அமெரிக்கர்களை ஆயா  கடையில் ஆப்பம் சாப்பிட வரும் போது "ஹாய்" Hi சொல்லலாம். நம் அம்மா  அப்பாவை நன்றாக கவனித்துக் கொண்டு அவர்களுடன் சந்தோசமாக  இந்தியாவிலேயே இருக்கலாம். 

share on:facebook

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

dhanush is really lucky..kolaveri pattule..one side kamal's ponnu..real life le rajini's ponnu..

sasi+jai drama??

SURYAJEEVA said...

பெரியார் அல்ல பெரியாறு, அதே போல் கூடங்குளம் பிரச்சினை திடீரென்று ஆரம்பித்தது அல்ல, ஒப்பந்தம் போடப் பட்ட அன்றே போராட ஆரம்பித்து விட்டார்கள்.. இன்று அது பெரிய அளவில் நிற்கிறது..
வரலாறு முக்கியம் அமைச்சரே

Post a Comment