Wednesday, December 28, 2011

ஜெவும், அழகிரியும் ஒன்னு. தமிழர்கள் வாயில் மண்ணு.

என்ன கொடுமை சார் இது. ஒரு பிரதமர் வராரு. அவரை மாநில ஆளுநர், முதல் அமைச்சர் சந்திச்சு கை கொடுப்பதை மறைத்துக்கொண்டு ஒரு வீடியோ போடோகிராபர் வீடியோ எடுப்பதை பார்த்து அருகில் உள்ள மற்ற போடோகிராபர்கள். யோவ், செக்கூரிட்டி, ஹல்லோ, சார், நகருயா என பல்வேறு குரல்கள். இந்த கூச்சல்களுக்கு மத்தியில் ஒரு பிரதமர், முதல்வர் மற்றும் கவர்னர் நடந்து முன்னே செல்கிறார்கள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தாங்க இந்த கொடுமை. மாநிலத்தில் எதிர் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு சால்வை மரியாதை செய்து விட்டு பக்கத்தில் நிற்கும் ஒரு மாநில முதல்வரை கண்டு கொள்ளவேயில்லை. அதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத முதல்வர் உடனே அங்கிருந்து (பிரதமரை அம்போ என்று விட்டு விட்டு) சென்று விடுகிறார். அட, பிரதமரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.

இந்த லட்சணத்தில் இவர்கள் கூடங்குளம், முல்லை பெரியார் பிரச்சனையில் ஒன்றாக சேர்ந்து! தமிழக மக்களுக்கு என்ன செய்து விட போகிறார்கள்.

காணொளி உதவி. நக்கீரனுக்கு நன்றி.


share on:facebook