Monday, November 14, 2011

"Occupy wall street" அம்பானி வருவாரா?

"Occupy wall street" - கடந்த இரு மாதங்களாக அமெரிக்க செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு போராட்டம். ஆரம்பித்தது அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்தில் என்றாலும் இன்று அமெரிக்காவின் மற்ற முக்கிய நகரங்களையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டம் விரிவடைந்திருக்கிறது.

நியூயார்க் அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்றால், அந்நகரில் உள்ள
Wall street எனப்படும்  பகுதியில் தான் உலகின் மிக பெரிய நிறுவனங்களின்  தலைமை அலுவலகங்கள் நிறைந்துள்ளது. அதன் அருகில் தான் "Occupy wall street" போராட்டம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

பெயர் தான் "Occupy wall street" என்றாலும், உண்மையில்  போராட்டகாரர்களின்  நோக்கம்  மேலே குறிப்பிட்டுள்ள Wall street பகுதியை கை பற்றுவது அல்ல.   மாறாக Wall street - ல் அமைந்துள்ள நிறுவனங்களின் கொள்கைகளுக்கு  எதிராகவும், அவற்றினால் சாதாரண பொது மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக  பாதிக்கபடுகிறார்கள் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்பது தான்.

"Occupy wall street" போராட்டக்காரர்களின் முக்கிய நோக்கம் இது தான். அமெரிக்காவின் பெருமளவு  வளமும், வருமானமும் ஒரு சதவிகித (1 %) மக்களிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. மீதி உள்ள தொண்ணூற்று ஒன்பது (99%) சதவிகித மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டபடுவது மட்டுமன்றி மேலே  குறிப்பிட்ட ஒரு சதவிகித மக்கள் தான் மீதி உள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகித  மக்களின் வாழ்க்கை தரத்தை  நிர்ணைகிறார்கள்  என்பது தான். அதை மாற்றி இம்மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு அதிக வரிகளை விதித்தால் அதுவே பொருளாதரத்தை மேம்படுத்தவும், சாதாரண 99% மக்களின் வரிச்சுமையை குறைப்பது மட்டும் இல்லாமல் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் சமப்படுத்தும் என்பதுதான்.

இது ஒரு வினோதமான அதே நேரத்தில் உன்னதமான போராட்டம். முதலில் நியூயார்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான ப்ரூக்ளின் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தும் அளவிற்கு  போராட்டக்காரர்கள்   திடீரென்று நடுவே இறங்கி நடக்க தொடங்கினார்கள்.  இது அமெரிக்க  சட்டப்படி குற்றம். இருந்தும் அரசும் போலீசும் பெரிதாக  ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

அடுத்ததாக நியூயார்க் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லிபர்ட்டி  சதுக்கத்தில் போராட்டகாரர்கள் அனைவரும் குவியத்தொடங்கினார்கள். முதலில் 50 பேர் 100 பேர் என திரண்ட கூட்டம் கடந்த 50 நாட்களில் ஆயிரத்தை தொட்டுவிட்டது. லிபர்ட்டி சதுக்கத்திலே தற்காலிக கூடாரம் அமைத்து அங்கேயே உள்ளிருப்பு போராட்டம் போல் தங்கி விட்டார்கள். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மற்ற வசதிகளுக்கும் தேவையான பணத்திற்காக ஆங்காங்கே பெரிய உண்டியல்கள் வைத்திருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் முதல் பலரும் தங்கள் தார்மீக ஆதரவை இவர்களுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் இவர்கள் சொல்லும் ஒரு சதவிகித அமெரிக்க நிறுவனங்களால்  எவ்வாறு அமெரிக்க  பொருளாதாரமும் பொது  மக்களும்  பாதிக்கப்படுகிறார்கள் என்று மைக்கில் பிரசாரமும், அவ்வழியே போவோர்  வருவோரிடம் துண்டு பிரசுரங்களும்  விநியோகித்து வருகிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காகவும்  வருமானத்திற்க்காகவும்  நாட்டின் பொருளாதாரத்தையே படுகுழிக்குள் இந்நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் தள்ளிவிடுவதாகவும் இன்று  ஏற்பட்டுள்ள அணைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சதவிகித மக்களே காரணம் என்பதும் இவர்களின் வாதம்.

இதில் முக்கிய நிகழ்வாக, தற்போது மேலே குறிப்பிட்டு உள்ள ஒரு சதவிகித பெரும் முதலாளிகளில் ஒரு சிலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளது தான். "Occupy wall street" பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

ஆமாம்,  "Occupy Dalal Steet" நடந்தால் அங்கு அம்பானியும், விஜய் மல்லையாவும் வந்து கலந்து கொள்வார்களா?

share on:facebook

1 comment:

சேக்காளி said...

//இதில் முக்கிய நிகழ்வாக, தற்போது மேலே குறிப்பிட்டு உள்ள ஒரு சதவிகித பெரும் முதலாளிகளில் ஒரு சிலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளது தான்//
அங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தங்கள் வியாபார யுக்தியை மாற்றியமைப்பதற்காக கலந்து கொண்டிருப்பார்கள்.

Post a Comment