Tuesday, February 28, 2012

(சசிகலா) நடராஜன் உயிருக்கு ஆபத்து?



நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய, சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவருக்கு, ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து, தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடராஜன் கூறுகையில், "நில அபகரிப்பு புகார் முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கும், புகாருக்கும் சம்பந்தமில்லை. என்னைக் கைது செய்து விட்டுத்தான் போலீசார் எப்.ஐ.ஆரையே தயார் செய்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே டிரஸ்ட் மூலமாக முள்ளிவாய்க்கால் நினைவக தூண் கட்டப்பட்டு வருகிறது. அதில் உறுப்பினராகக்கூட நான் இல்லை. எனக்கு சம்பந்தமில்லாத வழக்கில், என்னை போலீசார் சேர்த்துள்ளனர். தற்போது என்கவுன்டர்களை போலீசார் நடத்தி வருகின்றனர். அதனால் என்னையும் என்கவுன்டரில் கொல்ல வாய்ப்புள்ளது. எனது உயிருக்கு போலீசாரால் பாதுகாப்பு இல்லை. அதனால், என்னை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கக்கூடாது,' என்று எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில், இந்த வழக்கிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எந்த சமந்தமும் இல்லை என கூறி திருமதி. சசிகலா கதறி அழுததாக செய்தி வந்திருந்தது.

ஹ்ம்ம்...இன்னும் என்னவெல்லாம் அரங்கேற போகிறதோ? எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய மற்ற பதிவு...நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைது

share on:facebook

1 comment:

Post a Comment