Tuesday, April 26, 2011

கிளே பாம் - உலக போரில் எதிரிகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட கொசுக்கள்


"இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியல சாமி". கவுண்டமணியின் பிரபலமான  காமெடி வசனம் இது. ஆனால் இந்த கொசுக்களை வைத்து இரண்டாம்  உலகப்போரில்  ஒரு யுத்தமே நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது கிளே பாம்  என்று சொல்லக்கூடிய ஒரு ஒரு பாம்மை ஜப்பானியர்கள் சீனாவின் ராணுவ  மையங்களின் மீது  போட்டுள்ளார்கள். இந்த பாமில் அடக்கி வைக்கப்பட்ட எல்லாமே கொசுக்கள்  தான்.  கொசுக்கள் என்றால் சாதாரண கொசுக்கள் இல்லை. பிளாக் பிளேக் என்று சொல்லக்கூடிய உயிர்கொல்லி வியாதியான பிளேக் நோய் கிருமிகள்  செலுத்தப்பட்ட கொசுக்கள். இந்த கொசு ஒரு முறை கடித்தால் அடுத்த சில  நாட்களில் மர்கயா தான். இதே போல் ஒரு கிளே பாம்மை அமெரிக்காவின்  கலிபோர்னிய மாகாணத்திலும் போடுவதாக ஒரு பிளான் இருந்ததாம். ஆனால் அதை செயல்படுத்தும் முன்பே இரண்டாம் உலகப்போர்  முடிந்துவிட்டதாம்.  

பண்டைய காலத்து போர்களிலும் இம்மாதிரி விஷ வண்டுகள், தேள் போன்ற  ஜந்துக்களை எதிரிகளின் கூடாரம் நோக்கி விடுவதும் அதன் மூலம்  எதிரிப்படையை நாசப்படுத்துவதும் ஒரு போர் கலையாக இருந்துள்ளது.  

தற்போது அமெரிக்க ராணுவம், வண்ணத்து பூச்சிகளாக வளரும் முன்  அவை  "லாவா" எனப்படும் புழு போன்ற நிலையில் இருக்கும் போதே சிறிய  மைக்ரோ சிப்புகளை வைத்து  "லாவா" வண்ணத்துப்பூச்சி  ஆனபின் உள்ளே  இருக்கும் மைக்ரோ சிப்பின் மூலம் வண்ணத்துப்பூச்சியின்  நடமாட்டத்தை  கண்காணிக்கும் ஆராய்ச்சி நடை பெறுவதாகவும் இது வெற்றி  பெற்றால்  இம்மாதிரி வண்ணத்துப்பூச்சிகளை வைத்து எதிரிகளின்  அசைவுகளை  கண்காணிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ம்ம்...டெக்னிக் எல்லாம் பழசுதான். டெக்னாலஜி மட்டும் புதுசு.

இன்னொமொரு கொசு கதை விரைவில்...

share on:facebook

1 comment:

Post a Comment