Wednesday, February 23, 2011

ஐ. நா. சபை அவமானம் - எல்லை தாண்டினாரா S. M. கிருஷ்ணா?


"தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதால் தான் சுடப்படுகிறார்கள். அவர்கள் பொறுப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் - S . M . கிருஷ்ணா"

கடந்த சில வாரங்களுக்கு முன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆண்டுக்கூட்டத்தில் உரை ஆற்றிய நம் மத்திய வெளியுறவு அமைச்சர் S .M . கிருஷ்ணா சுமார் 15      நிமிடங்களுக்கும் மேலாக   போர்ச்சுகீஸ்  நாட்டு அமைச்சர்  உரையாற்றுவதர்க்காக தயாரிக்கப்பட்ட உரையை தன்னுடைய உரை என்று நினைத்துக்கொண்டு  தொடர்ந்து வாசித்துள்ளார்.

நல்ல வேலை அந்த உரையில் ஒரு வரி '...இந்த கூட்டத்தில் இரண்டு போர்ச்சுகீஸ் மொழி பேசும் நாடுகள் இருப்பது எனக்கு சந்தோசத்தை கொடுக்கிறது...என்று இருந்துருக்கிறது. ஆனால் நம் அமைச்சருக்கோ அதை வாசித்த பிறகும் கூட தன தவறு தெரியவில்லை. நல்ல வேலையாக இதை காதில் வாங்கிய இந்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் சுதாரித்துக்கொண்டு அமைச்சரின் காதில் கிசு கிசுக்க, உரையை வாசிப்பதை திரு. கிருஷ்ணா நிறுத்தியுள்ளார்.

இது பற்றி கேக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், இது ஒரு பெரிய தவறு இல்லை, எத்தனையோ பேப்பர்கள் என் மேஜையில் கிடந்தன. அதனால் தெரியாமல் போர்ச்சுகீஸ் நாட்டு அறிக்கையை எடுத்து படித்துவிட்டேன் என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார்.

ஐயா அமைச்சர் அவர்களே? கண்ணுக்கு எதிர்தார்ப்போல் கிடக்கும் பேப்பரை தனித்தனியாக உங்களால் அடையாளம் காண முடியவில்லை. வெறும் நீலமாக தண்ணீர் மட்டுமே தெரியும் நடுக்கடலில் இலங்கை இந்திய எல்லையை எப்படி எங்கள் பாமர மீனவர்கள் அடையாளம் காண்பார்கள்?

அப்படி எல்லை தெரியாமல் இலங்கை கடற்பகுதிக்கு போய்விட்டால் அது ராஜா துரோக குற்றமோ உங்களுக்கு? பாக்கிஸ்தானில் அமெரிக்க  தூதரகத்தில்  வெறும்  டெக்னீசனாக  பணியாற்றிய ஒரு அமெரிக்கர், தன்னிடம் திருட முயன்ற இருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரை பாக்கிஸ்தான் போலிஸ் கைது செய்ததிர்க்காக, அவரும் ஒரு தூதரக ஊழியர் தான், அவரை கிரிமினல் வழக்கிலிருந்து விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்  என அமெரிக்க அதிபர் ஒபாமா போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஆனால் நம் அமைச்சரோ இலங்கை இராணுவத்திடம் சுடுபட்டு இறக்கும் மீனவர்களின் மீதே குற்றமும் குறையும் காண்கிறார். இதற்க்கு எதற்கு ஒரு வெளியுறவு துறை? அதற்க்கு ஒரு அமைச்சர்? அதுவும் ஐ. நா. சபையில் அறிக்கையை மாற்றிப்படிக்க?

சென்ற வாரம் முழுவதும் அமெரிக்க வானொலி நிகழ்சிகளில் கிருஷ்ணாவின் சொதப்பலை தொவைத்து காயப்போட்டு விட்டார்கள். அவர்கள் அனைவரும் கேலி செய்தது நடந்த தவறை கூட அல்ல, அது ஒரு தவறே இல்லை என்று கிருஷ்ணா கூறியதைத்தான்.

என்னைப் பொறுத்தவரையில் வெறும் உரையையே படித்து பார்க்காமல், மேலே கிடந்தது எடுத்துப் படித்தேன் என கூறுபவர்  நாளை இரு  நாடுகளுக்கு  இடையே போடப்படும்  ஒப்பந்தங்களை சரி பார்ப்பார் என எப்படி நம்புவது? 

     
படம் நன்றி: techlondon.co.uk 

share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

Fully agree with your views.

Madhavan Srinivasagopalan said...

@ Mins..
அடப்பாவிகளா.. நீங்கலாம் என்னாத்துக்கு இருக்கீங்க

Post a Comment