Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

No comments:

Post a Comment