Friday, September 16, 2011

இலவச ராட்டி மற்றும் ஊதுகுழல் - தமிழக அரசு பரிசீலனை.


தமிழகத்தில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள இனி கேஸ் இல்லாத எல்லா குடும்பத்திற்கும் இலவச சாணி விராட்டிகளும், ஆடுப்பு ஊத எவர்சில்வர் ஊது குழல்களும் தமிழக  தாய்மார்களுக்கு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக முதல்வர்  அறிவிப்பு.    

அட, என்னங்கையா பொழப்பு இது. இன்று பத்திரிகைகளில் பார்த்தால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் தங்கள் தோள்களில் மாட்டிக்கொண்டு  செல்லும் பைகளில் தமிழக முதல்வர் சிரித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த தேர்தல் வரும் போது எதிர் கட்சியினர் இம்மாதிரி ஒரு கட்சி தலைவரின் படம் போட்ட பைகளை மாணவர்கள்  எடுத்து செல்லக்கூடாது அது தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது  என வழக்கு போட்டால் என்ன செய்வது? இல்லை இதே போல்  எல்லா  இலவசங்களிலும் முதல்வர் படங்களை போடுவார்களா? பல  ஆண்டுகளுக்கு  முன் இலவச காலணிகளை வழங்கினார்கள். அப்போது  இம்மாதிரி முதல்வர்  படத்தை காலனியில் போட முடியுமா?  

எது எது தான் இலவசமாக கொடுக்க வேண்டும் என விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. கட்சிகாரர்கள் எல்லோரும் காசு பார்க்க வேண்டும். அதற்க்கு எதாவது ஒன்றை (இலவசமாக) அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மாட்டையும் ஆட்டையும் இலவசமாக கொடுக்கிறார்களாம். காளை மாட்டியா? ஆண் ஆட்டையா? அப்படியே கொடுத்தாலும்  ஒவ்வொரு மாட்டிற்கும் எப்படி விலை நிர்னைப்பார்கள்? ஒரு லிட்டர் கறக்கும் மாட்டை ஆயிரம் ரூபாவிற்கு வாங்கி விட்டு அது ஒன்பது லிட்டர் கறக்கும் மாடு என ஒன்பது ஆயிரத்திற்கு கணக்கு காட்ட மாட்டார்களா கட்சிக்காரர்களும் அமைச்சர்களும்?

ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால், அவர்கள் கல்விக்கடனுக்காக வரும்போது சொத்து மதிப்பு கேக்காமல் வட்டி இல்லா  கடன் கொடுங்கள். ஆடு மாடு வாங்க நீண்ட கால கடன் கொடுங்கள். அதை விட்டு விட்டு இலவசம் இலவசம் என்று மக்கள் பணத்தையே எடுத்து அதில் சம்திங் பார்த்து விட்டு மிச்ச சொச்சங்களை மக்களுக்கு கொடுத்து விட்டு மறுபுறம் காஸ் விலை, பெட்ட்ரோல் விலை என எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு அதனால் பால் விலையிலிருந்து பாகற்காய் வரை விலை உயர்ந்துள்ளது.

இப்படியே போனால் இனி தமிழக மக்களின் தரம் உயர, அவர்கள் உடல்  நலம் காக்க இலவச கொசுவர்த்தியும், இரவு நேரத்தில் மின்சார நிறுத்தம் போது  விளக்கு ஏற்ற இலவச தீப்பெட்டியும் வழங்க திட்டம் அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.   

share on:facebook

3 comments:

Madhavan Srinivasagopalan said...

Good point.. That's the bad part of democracy... 'vote bank' policy.

btw.. it seems that you are posting in ur blog often these days (atleast couple of weeks)

Philosophy Prabhakaran said...

ஆடு, மாடுகளின் மீது அம்மாவின் திருவுருவப்படத்தை பொறிக்கவில்லையா...???

ஆதி மனிதன் said...

Thanks Mathavan. Yes, somehow I get some relaxation/diversion when I blog...

@Philosophy Prabhakaran said...

//ஆடு, மாடுகளின் மீது அம்மாவின் திருவுருவப்படத்தை பொறிக்கவில்லையா...??? //

ஐயோ பாவங்க...நான் ஆடு மாட்டை சொன்னேன்.

Post a Comment