Monday, December 3, 2012

நொறுக்ஸ்: மிலிடரி காதல் - ஹிந்துவின் காவடி.

இந்த வார நொறுக்ஸ்:

1. இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் இலங்கை பெண் ஒருவரை காதலித்து பின் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளார். ராணுவ சட்டப்படி பணியில் உள்ள ஒருவர் வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்ள முடியாது போலும் (விபரம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தலாம்).

இந்நிலையில் நம் ராணுவ வீரர், தான் வேறொரு நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பல காரணங்களை காட்டி ராணுவம் அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து ராணுவ வீரர் கோர்ட்டில் வழக்கு தொடர கோர்ட் அவருக்கு சாதகமாக தீர்பளித்துள்ளது.

அது மட்டுமல்ல. வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்வதாலேயே அவரோ அவர் திருமணம் செய்து கொண்டவரோ நம் நாட்டுக்கு துரோகம் செய்வார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன் கருத்தை வெளியிட்டு இருக்கிறது. ஹ்ம்ம்..காதல் செய்வதில் அதிலும் வெளிநாட்டு பெண்ணை  என்றால் இவ்வளவு பிரச்சனையா?

2. இதுவும் இலங்கை சம்பத்தப்பட்டது. ஹிந்து நாளிதழ். ஒரு காலத்தில் விரும்பி படித்ததுண்டு. ஆனால் சில வருடங்களாக, குறிப்பாக இலங்கை விசயத்தில் இலங்கை அரசின் பத்திரிக்கையாகவே மாறிவிட்டது. இலங்கையில், இறுதிகட்ட போரில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் பலியாகி, உள்நாட்டிலேயே அகதிகளாக கொட்டடிகளிலும், திறந்த வெளி கேம்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது கூட, ஹிந்து நாளேட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிலுள்ள டெண்ட்டுகளை முழு பக்கத்தில் கலரில் புகைப்படங்களாக வெளியிட்டு, உலகிலேயே சிறந்த அகதிகள் முகாம் இலங்கையில் தான் உள்ளது என்று புகழாரம் சூட்டியது. அட கண்றாவியே! இதையெல்லாமா பாராட்டுவார்கள்?

தற்போது இலங்கையிலிருந்து கடிதம் என்ற தலைப்பில் அவ்வப்போது ஏதாவது ஒன்றுக்கும் உதவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. பிராபகரன் வாழ்ந்த வீட்டை யாரும் பார்க்க போவதில்லை. அதற்க்கு பதிலாக இலங்கை அரசு அமைத்துள்ள போர் மியூசியத்தை மக்கள் சாரி சாரியாக சென்று பார்த்து வருகிறார்கள் என்று சொல்லி வருகிறது.

இன்னொரு கடிதத்தில் இலங்கை மக்கள் இப்போது தான் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும், மிக விரைவில் பெரிய பெரிய தொழில்கள் ஆரம்பித்து செல்வத்தில் கொழிக்க போகிறார்கள் என்று ஆருடம் கூறிக்கொண்டு இருக்கிறது.

இதை தவிர அவ்வப்போது ஹிமாச்சல் பிரதேசத்து பிரச்சனையில் ஒரு மாதிரியாக சீனாவுக்கு வக்காலத்து வாங்குவது போல் அவ்வப்போது எழுதி வருகிறது.

ஹ்ம்ம்...எப்படி இருந்த பத்திரிக்கை இப்படி ஆகிவிட்டது?

share on:facebook

4 comments:

rajamelaiyur said...

இந்து...
படிச்சேன் நொந்து ..

ஆதி மனிதன் said...

//இந்து...
படிச்சேன் நொந்து ..//

வாங்க ராஜா. நீங்களுமா? ரைமிங் சூப்பர்.

Vadivelan said...

always controversial news will be sold easily.......

Udhayakumar said...

first one is a very good judgement from court.

himachal or arunachal?

Post a Comment