Thursday, December 27, 2012

நீயா நானா: கார்பரேட் வாழ்க்கை - 'வீடு திரும்பல்' மோகன் சொல்வது சரியா?


தனக்கு ஒரு முத்தம் கூட தன் கணவரிடம் இருந்து கிடைக்கவில்லை என நிகழ்ச்சியில் ஒரு சகோதிரி கூறினார். வருத்தப்பட வேண்டிய விஷயம் தான். ஒரு வேலை இருவரும் வேலைக்கு செல்லாமல் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் இம்மாதிரி பிரச்சனைகள் பெருமளவு குறைந்து விடும். அது அவர்கள் சொந்த விருப்பம்.

ஆனால் நான் சொல்ல வருவது வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் போது ஆரம்ப காலங்களில் சில கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அது பொருளாதாரம் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. வாழ்வில் சிலவற்றை நாம் இழக்க நேரிடும். எவ்வளவு இழக்கலாம். எவ்வளவு காலம் இழந்து வாழலாம் என்பது அவரவர் சூழ்நிலை மன நிலைக்கு ஏற்றது.

நான் IT யில் வேலைக்கு  சேர்ந்த புதிதில் மற்ற எல்லோரையும் விட எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. அப்போது என் சிரியவளுக்கு 1 1/2 வயது. ஆறு மாதம் கழித்து நான் திரும்பி வரும் போது என்னை அவள் 'அப்பா' என்றே அழைக்கவில்லை. கதவுக்கு இடுக்கில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பாள். யாரென்று கேட்டால் 'மாமா' என்பாள். மற்றபடி என் போட்டோவை காண்பித்தால் 'அப்பா' என்பாள். வீட்டில் உள்ளவர்கள் நான் இல்லாத போது அடிக்கடி என் போட்டோவை காண்பித்ததால் வந்த வினை. அந்த நேரங்களில் எனக்கு மனதுக்கு சற்று கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும் இது சிறிது காலம் கழித்து சரியாகி விடும் என்று. இன்று அவளுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கிறது என்றால் அதற்க்கு நான் கொடுத்த அந்த சிறிய விலை தான்.

வேலை கஷ்டம் வேலை கஷ்டம் என புலம்புகிறார்கள். எனக்கு தெரிந்து எந்த பிராஜக்டிலும் வருஷம் 365 நாளும் கஷ்டம் இருக்க போவதில்லை. சுட்டெரிக்கும் வெயிலில் வேலை பார்க்கும் போக்குவரத்து காவலரை விட விடுமுறையே இல்லாமல் பணியாற்றும் போலீஸ், ராணுவத்தினரை விட நாம் அப்படி என்ன கஷ்ட படுகிறோம் என எனக்கு தெரியவில்லை. வேலை பளு வரும் போகும். அதற்க்கு தானே நமக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?

அதே போல் எதை தான் சொல்லி IT மக்களை மட்டம் தட்டுவது என்றில்லை. சாட்டில் பதில் சொல்லும் பொது 'S' என்று ஒரே எழுத்தில் பதில் தருகிறார்கள், பேரை சுருக்கமாக சொல்லி கூப்பிடுகிறார்கள். என்னப்பா உங்களுக்கு பிராபளம்? இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசு அலுவலகம் போல் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் ஒரு முழு நீள பேப்பரை வாங்கி இன்னமும் லீவ் லெட்டர் போல் எழுத வேண்டுமா இல்லை ஜஸ்ட் ஒரு SMS/ஈமெயிலில் I'm  sick  என சுருக்கமாக வேலையை முடிப்பதை வரவேற்பீர்களா?

அப்புறம் எல்லோரும் இப்போ விவசாயம் விவசாயம் என பேச ஆரம்பித்து விட்டார்கள். விவசாயம் என்னமோ இவர்களுக்கு பஞ்சு மிட்டாய் விற்பது போல் தோன்றுகிறது போலும். சார், நாங்கலாம் என்ன பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். விவசாயத்தில் கொட்டை போட்ட அந்த கால பெரியவர்களே தற்போது விவசாயம் செய்ய முடியவில்லை என நிலத்தை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு ஊர் பக்கம் வந்து விடுகிறார்கள். பல காலம் விவசாயம் பார்த்த என் தந்தை அடிக்கடி இதை சொல்வார். இன்னமும் என் நினைவில் உள்ளது. 'Agriculture is like  gambling' என்று. விவசாயம் பார்ப்பதை நான் தவறாக சொல்லவில்லை. அது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று தான் கூறுகிறேன்.

அப்படி விவசாயம் பார்க்க IT வேலையை விட்டு விட்டேன் என கூறிய ஓரிருவரிடம் எப்போ வேலையை விட்டீர்கள் என கேட்கப்பட்ட போது ஒரு ஆறு ஏழு வருடங்கள் IT யில் வேலை பார்த்த பிறகு தான் தங்கள் வேலையை விட்டதாக ஒத்துக்கொண்டார்கள். அதில் ஒரு நேர்மை தெரிந்தது. அதாவது வேலையை கஷ்டம் என எடுத்தவுடனே விட்டு விடவில்லை. ஓரளவு தங்கள் வாழ்வை செட்டில் செய்து கொண்ட பிறகு தான் தாங்கள் விருப்பப்பட்ட வேலையை செய்ய கிளம்பி இருக்கிறார்கள்.அது தான் நடைமுறையில் சாத்தியம்.

இதை பற்றியெல்லாம் நம் 'வீடு திரும்பல்' மோகன் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் என்பதை...அடுத்த பதிவில் பார்ப்போம்.  

நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சமீபத்திய பதிவு...

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...



share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

அவரு என்ன சொன்னாருன்னு சொல்லாம அதுக்கு முன்னுரையா ஒரு பதிவா? ஆதி மனிதன் .. சென்னை வந்து ரொம்ப கெட்டு போயிட்டீங்க. அவரை நேர்ல பாத்துட்டீன்களோ?

Udhayakumar said...

are you differing in your own view?
http://aathimanithan.blogspot.com/2012/12/it.html

Post a Comment