Monday, August 22, 2011

அண்ணா ஹசாரே குறித்து நமீதா...அட உண்மையிலேயே தாங்க.


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமிதா.

ஹசாரேவின் போராட்டம் குறித்து நமிதாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "அன்னா ஹசாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும். ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு.

லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்திய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹசாரேயின் போராட்டம் காந்திய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன்கூட இருக்காது. இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளேகூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார்.

ஹசாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமிதா. இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து? "அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹசாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரசாரம்கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹசாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமிதா. அரேபியக் குதிர சொல்வதும் வாஸ்தவந்தானே....
நன்றி: koodal.com

share on:facebook

3 comments:

Madhavan Srinivasagopalan said...

கேள்வி கேட்டாம்பாரு.. அவனைச் சொல்லணும்.. நமிதாவுக்கு, கேள்வின்னா இப்படி இருக்கணும்.. சாம்பிள்தான்...

எந்தப் பாட்டுக்கு எந்த ட்ரெஸ் போடணும்....
எதை காட்டணும்.. எதை காட்டக் கூடாது...

Philosophy Prabhakaran said...

சூப்பரா சொல்லுது மச்சான்...

ஆதி மனிதன் said...

//எந்தப் பாட்டுக்கு எந்த ட்ரெஸ் போடணும்....
எதை காட்டணும்.. எதை காட்டக் கூடாது... //

நன்றி மாதவன்:ஹி ஹி ஹி...

//சூப்பரா சொல்லுது மச்சான்...//

நன்றி பிரபா: ஆமாம் ஆமாம் ...

Post a Comment