Saturday, October 23, 2010

சும்மா அதிருதல!



சும்மா அதிருதல!

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள். 
வாரத்திற்கு குறைந்தது 250 முதல் 300 பதிவுகள்.
மாதத்திற்கு 10, 00, 000 ஹிட்டுகள்.
சென்ற வருடத்தில் ஒரே நாளில் மட்டும் 10, 00, 000 ஹிட்டுகள்.

என்ன சார் வாய பொளக்குறீங்க. அட போங்க சார். மாசத்திற்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க தடுங்கினத்தம் போடறேன். இதல்லாம் Andrew Sullivan அவர்களின் சாதனைகள்.

பதிவுலகம், இணையத்தளம் என எல்லோரும் உபயோகப்படுத்த துவங்காத காலக்கட்டம் அது.  The Daily Dish என்று அவர் பிளாக் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. நேற்று அவருடைய பிளாக்கில் என்ன எழுதினார் என்று அவருக்கே ஞாபகம் இருப்பதில்லை. 

தனது 27 வது வயதில்  The New Republic என்ற நாளிதழில் ஒரு இளைய பத்திரிகையாளராக சேர்ந்த ஆண்டரு தான் எழுதும் விசயங்களை எல்லோரும் படிக்கும் வகையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தன்னுடைய techie நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தன்னுடைய ஆசையை வெளியிட அவரும் இவருக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் பதிந்து கொண்டிருந்தார். சில காலம் கழித்து என்ன நினைத்தாரோ தன் பத்திரிக்கை நண்பரிடம் எனக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கிறது. பிளாக்கர் பிளாகிங் என புதிதாக ஒன்று வந்துள்ளது. அதில் எப்படி பதிய வேண்டும் என சொல்லித் தருகிறேன். நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் ஒரு வலைதளமாக The Daily Dish மாறி உள்ளது.

தான் எழுதும் கட்டுரை மற்றும் எதுவாக இருந்தாலும் அதை படிக்கும் வாசகர்கள் அதற்கு  உடனே கமென்ட்/விமர்சனம் போட்டு அதை தானும் படிக்கும் வாய்ப்பை இந்த வலைதளம்  வழங்கியதை பார்த்து வியந்து போன Sullivan அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இனி எதிர்காலத்தில் பத்திரிக்கைகளை விட இது தான் பிரபலமாக போகின்றன என அறிந்து கொண்டார். அன்று முதல் இன்று வரை அவரின் வலைதளத்தில் எழுதியதை நிறுத்தவில்லை. வருடத்திற்கு இரு வார விடுமுறை எடுத்துக் கொள்வதை தவிர. 

நாமெல்லாம் நாளுக்கு ஹூஹூம் வாரத்திற்கு ஒரு பதிவு போடவே தினறிக்கொண்டு இருக்கும் போது,  
வார நாட்களிலும், வார இறுதிகளிலும் குறைந்தது இருபது நிமிடத்துக்கு ஒரு முறை தன் பிளாக்கில் எழுதும் இவர், உண்மையில் அவரின் வலைத்தளத்தில் உருவாகும் traffic மற்றும் update களை சமாளிக்க முடியாமல் தினமும் திணறுகிறார்.

ஒரு பதிவை போட்டுவிட்டு ஒரு மணி நேரத்துக்கொருமுறை ஓபன் செய்து ஏதும் கமென்ட் வந்திருக்கான்னு நாம பார்துக்கிட்டுருக்கோம். இவரோ
தற்போது நான்கு பேர் கொண்ட சிறு குழுவை அமர்த்தி தன்னுடைய பிளாக்கை பராமரித்துக்கொண்டலும் இவருக்கு பின் 
என்னாகும் என்று இவரின் follower ஒருவரிடம் கேட்டால் "If Andrew dies, it dies" என எழுதி இருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் ஆர்வம் காட்டி எழுதி வரும் Sullivan தான் ஒரு அரசியல் அநாதை என்கிறார்.

அப்பாடி, Sullivan புண்ணியத்தில் இன்று நான் ஒரு பதிவு போட்டாகிவிட்டது.
share on:facebook

5 comments:

Anonymous said...

ஆர்வமூட்டும் செய்திதான்.

Madhavan Srinivasagopalan said...

//என்ன சார் வாய பொளக்குறீங்க. அட போங்க சார். மாசத்திற்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க தடுங்கினத்தம் போடறேன்//

I know very well. Same blood

பொன் மாலை பொழுது said...

Carry on Dude.

பின்னோக்கி said...

ஸ்..ஸ்..அப்பா படிக்கும்போதே கண்ணக்கட்டுதே.. :)

சாய்ராம் கோபாலன் said...

Aadhi,

We should not worry about others. If we have stuff, write otherwise read others or better spend time with kids !

Post a Comment