Thursday, February 7, 2013

திருச்சியில் குஷ்பு மீது திடீர் தாக்குதல்


திருச்சி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: dinamalar.com

share on:facebook

No comments:

Post a Comment