Thursday, February 21, 2013

'ஜெ' விஸ்வரூபம் - ஆசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகத்தில் இடம் இல்லை


இலங்கை அரசின் போர் குற்றங்களை காரணம் காட்டியும், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான தொடர் தமிழ் விரோத போக்கினை கண்டித்தும், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளும் ஆசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த தனது அரசுக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள ஆசிய விளையாட்டு போட்டி சங்கம் தடை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னமும் தனக்கு பதில் வரவில்லை என்றும் சுட்டி காட்டி உள்ளார்.

இந்த முடிவு சரியா தவறா என எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால், இப்படி ஏதாவது ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசுக்கு பல தரப்பிலும் இருந்து நெருக்கடிகள் கொடுத்த வண்ணம் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு அவர்களை அடக்க முடியும் என்பது மட்டும் என் கருத்தாகும்.

share on:facebook

3 comments:

கவியாழி said...

முதன்முதலில் நேரு விளையாட்டரங்கம் கட்டிய அவர் இப்படி செய்ய மாட்டாரே

Unknown said...

correct move

rajamelaiyur said...

அதிரடியான , அருமையான முடிவு

Post a Comment