Wednesday, July 27, 2011

கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் - சாண்டியாகோ சபாரி பார்க்


இந்தியாவில், சென்னையில் இருக்கும் போது பக்கத்தில் உள்ள கிண்டி பார்க்கையோ வண்டலூர் மிருககாட்சி சலையையோ பார்க்க முடிவதில்லை. காரணம் பல. அதில் ஒன்று நம்மூரில் அடிக்கும் வெயில் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்கள். அல்லது நமக்கே உள்ள சோம்பேறித்தனம் அல்லது கஞ்சத்தனம்.

அதே நேரம் வெளிநாட்டில் பிழைப்புக்காக வரும்போது (அதுவும் நல்ல சம்பளத்தில்) அந்த நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை ஒன்று விடாமல் பலரும் பார்த்துவிடுவது இயல்பு. இதற்கும் பல காரணங்கள். பல விஷயங்கள் பிரமிப்பாகவும், விட்டால் திரும்ப பார்க்க முடியுமா என்கிற எண்ணமும், அங்குள்ளவர்களின் வெகேஷன் போகின்ற மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்வது ஒரு காரணம். இது   எல்லாவற்றையும் விட அங்குள்ள சொகுசான வாழ்க்கைமுறை, சுத்தம், சுலபமான போக்குவரத்து வசதிகள் என எல்லாமும் எல்லா இடங்களையும் சுற்றி  பார்க்க   வைத்துவிடுகிறது. 

இந்த கோடைக்கால விடுமுறைக்காக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான "San diego Safari Park" சென்றோம். 1800  ஏக்கர் பரப்பளவில் 3000 மேற்ப்பட்ட விலங்குகள். வருடத்திற்க்கு  20 லட்சத்திற்கு  மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திறந்த வெளி மிருககாட்சி சாலை அது.

கூண்டுக்குள்ளேயே பெரும்பாலும் மிருகங்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு திறந்த வெளியில் பல வகையான மிருங்கங்கள் உலவி வருவதை பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அதைவிட சில இடங்களில் நாம் அவைகளை நெருங்கி தொட்டு பார்த்து ரசிக்க முடிவது இன்னும் அருமை.

உள்ளே நுழையும் போது பலதரப்பட்ட சின்ன சின்ன விலங்குகள், பறவைகள் என ஆரம்பித்து உள்ளே நுழைந்தவுடனேயே திறந்த வெளியில் (சிறிய தடுப்பு வேலிக்குள்தான்) சிங்கத்தை காட்டி பயமுறுத்தி விடுகிறார்கள்.

சபாரி பார்க் முழுவதையும் வெவேறு தீம்களில் பிரித்து வன விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். கொரில்லா பாரெஸ்ட், ஆப்ரிக்கன் அவுட் போஸ்ட்  என பல பெயர்களில். இவை எல்லாவற்றையும் சுற்றி பார்க்க பல வழிகள் உண்டு. உங்கள் வசதிக்கேற்ப(பர்சின் கனத்திற்க்கேர்ப்பவும்). பொதுவாக  ட்ராம் எனப்படும் வரிசையாக கோர்க்கப்பட்ட வண்டியில் ஏறி உட்கார்ந்தால் அந்த வண்டியிலேயே முக்கால்வாசி பார்க்கை சுற்றி காட்டி விடுவார்கள். இதை விட்டால், வேன் அல்லது தனி ஜீப்பிலும் போய் சுற்றிபார்க்கலாம். அதேபோல் கயிற்றில் தொங்கியபடியோ அல்லது ரோல்லிங் சபாரி எனப்படும்(தசாவதாரம் படத்தில் காட்டி உள்ளார்கள்) வாகனத்திலும் நீங்கள் சுற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் சுத்தத்தை கடை பிடிக்கும் விதம்தான். அதனாலேயே எங்கு நீங்கள் பயணம் செய்தாலும் அதனால் எந்த பிரச்னையும் வராது. அவ்வளவு பெரிய பார்க்கில் ஒரு சின்ன குப்பையை கூட பார்க்க முடியாது. அதே போல் மிருகங்களிடமும் அதிக பட்ச மரியாதையையையும் அன்பையும் காட்டுவார்கள். ரொம்ப நேரமாக புலிகள் சரணாலயத்தில் இரண்டு மூன்று புலிகள் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவேயில்லை. இருந்தும் எல்லோரும் அதை அமைதியாக நின்று பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள்.
  
அப்பா, சரியான ஆந்த கண்ணுடா!

அழகான வண்ண கிளிகள் உள்ள பார்வை கூடத்தில் சிறிய கிண்ணத்தில் உணவை கொண்டு சென்றால் (பார்வை கூடம் இலவசம் ஆனால் உணவுக்கின்னம் $3) அனைத்து கிளிகளும் உணவுக்காக நம் மீது வந்து  உட்கார்ந்து  உணவை உன்ன பழக்கி வைத்துள்ளார்கள். உணவு காலியானவுடன் எல்லாம் பறந்து சென்று விடுகிறது. அப்பதானே அவர்களுக்கு பிசினெஸ்.

இதுதான் கி(லி)ளியா...  


அப்புறம் யாரு நம்ம சிங்க ராஜாதான். சும்மா எப்படி கம்பீரமா இருக்காருன்னு பாருங்க. சும்மா இருபதடி தூரத்தில் சிறிய வேலிக்கு பின் நம்மையே முறைத்து பார்கிறார் பாருங்கள்.


இங்க இரையை தேடி சீட்டா...

கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான கொக்குகள்...

ஓவியம் போன்ற மான்கள்.  

நான் வளர்கிறேனே மம்மி...

எனக்கும் லிப்ட் தாங்களேன்...

என் செல்ல குட்டி...

ஐயைய...சீ....எவ்வளவோ முயற்சி செய்தேன். முன்பக்கம்  படம் எடுக்க முடியவில்லை. 

நாங்கள் சென்ற நாளன்றுதான் சீட்டா ரன் என இரண்டே வயதான சீட்டா ஒன்றை பார்வையாளர்கள் முன் ஓடவிட்டு காட்டினார்கள். அப்பப்பா...என்ன ஒரு வேகம். 0 கிலோ மீட்டர் ஸ்பீடில் ஆரம்பித்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்தது... அந்த சீட்டா இங்கே...


யானை கூட்டம்னா இதுதானோ...

அப்புறம் வழக்கம் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...   

அப்புறம் வரட்டா....பை. பை....முடிஞ்சா இந்தப்பக்கம் வந்து நீங்களும் சபாரி பார்க்கை ஒரு முறை பார்த்துவிட்டு போங்கள்.
 

share on:facebook

3 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஃபோட்டோக்கள் நல்லாயிருக்கு.வண்டலூருக்கு ஒரு 15 முறையாவது போயிருப்பேன்.இனி போக கூடாது என்ற முடிவுடன் இருந்த என்னை திரும்ப ஒரு ஜூவிற்கு கூட்டிட்டு போயிட்டீங்க.thanks..

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா.

//வீடுதிரும்பல் மோகனிடமிருந்து வந்த பின்னூட்டம்...//

நன்றி மோகன்.

I saw your recent post in the Zoo today morning. The photos and captions were really good. Particularly liked the parrot photo & what you had written about it.

CS. Mohan Kumar said...

அருமைய்யா. ஊர் ஊரா போவதில் இப்படி நல்ல விஷயங்கள் இருக்குது. படங்கள் சூப்பர். குறிப்பா கிளி பற்றிய படமும் குறிப்பும்..

Post a Comment