Saturday, February 13, 2010

My name is Khan - ஒரு சிறப்பு பார்வை


My name is Khan - சுருக்கமாக "MNIK". இந்த "பெயர்" தான் கடந்த சில நாட்களாக வட இந்திய அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிகமாக அடிபடும் செய்தி. MNIK - இசுலாமியராகவும், இசுலாமிய பெயரை கொண்டிருப்பதாலும் ஒருவர் படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதில் ஓரளவு உண்மையும் கூட. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இசுலாமிய அடையாளங்கள் இருந்தால் அவர்கள் மற்றவர்களை விட சற்று கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இதை என் இசுலாமிய நண்பர் ஒருவர் என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

இதை பற்றி நிறைய பேர் பேசி, எழுதி ஆகிவிட்டது. நான் இங்கு கூற வருவது இதையெல்லாம் விட அதிக கொடுமைகளை உள்நாட்டிலும் (இந்தியாவிலும்) வெளிநாட்டிலும் ஒரு இனத்தில் பிறந்த காரனத்திற்காகவே  எங்கு சென்றாலும் இரண்டாம் தர குடிமகனாகவும் அடித்தும் விரட்டப்படும் "தமிழ்" இன மக்களை பற்றி.

இன்று MNIK திரைப்படத்திற்கும் அதில் நடித்துள்ள  நடிகருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் வெளியாகியுள்ள திரை அரங்குகளுக்கு Z+ பாதுகாப்பு போடப் பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. "நான் ஷாருக்கான் ரசிகன்" என முதல் காட்சி டிக்கட்டை காண்பித்தவாறு ஒரு மாநிலத்தின் உள் துறை அமைச்சர் போடோவுக்கு போஸ் கொடுக்கிறார். அதெல்லாம் சரிதான். ஆனால் சுமார் எட்டு மாதங்களுக்கு முன் பக்கத்தில் உள்ள தேசத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஈவு இரக்கமில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் படு கொலை செய்யப்பட்டர்களே. அப்போது MNIK என்ற ஒரு திரைப்படத்திற்கு தற்போது கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியாவது கொடுத்திருப்பார்களா?

கொலைக்கு நிகராக கொலை முயற்சியும் சட்டத்தில் கருதப்படுகிறது. ஏனெனில் கொலை நடந்திருக்காவிடினும் அப்படி ஒரு முயற்சி கொலையில் முடிந்திருந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்ற காரணத்தினால். நம் முன்னாள் பிரதமரை ஒரு இனத்தை சேர்ந்த குழு ஒன்று கொன்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு இனத்தையே முழுவதுமாக அழிக்க நினைத்த இனவெறி அரசுக்கு துணை போனபோது இப்போது ஒரு திரைப்படத்திற்கு கொடுக்கும் பாதுகாப்பை, முக்கியவத்துவத்தை  ஒரு இனப் பிரச்சனையில்  நம் நாட்டு அரசியல்வாதிகளோ பத்திரிகை உலகமோ சிறிதளவாவது கொடுத்திருக்குமா?

அதே இலங்கையில் நம் பிரதமரை எங்கும் நிகழாத நிகழ்வாக ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது துப்பாக்கி கட்டையால் அந்நாட்டு ராணுவ வீரன் ஒருவன் தாக்கினானே. அது ஒரு கொலை முயற்சிதானே? ஒரு நாட்டு ராணுவ வீரன் ராணுவ அனுவகுப்பின் போது கொலை செய்ய முயற்சிக்கிறான் என்றால் அதுவும் ஒரு நாட்டின் இளைய பிரதமரை, அந்நாட்டு ராணுவத்திற்கு அதில் தொடர்பு இல்லாமல் இருக்குமா? அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்பு இருப்பின் அந்நாட்டு அரசுக்கு தொடர்பு இல்லாமல் இருக்குமா? அப்படியானால் அதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? அந்நாடு ஒரு இனவாத அரசால் பல காலமாக ஆளப்பட்டு வருகிறது. அப்படியானால் அந்த இனத்திற்கு என்ன தண்டனை?

இலங்கை ஒரு இறையாண்மை நாடு. அந்நாட்டு பிரச்சனையில் நாம் தலையிடமுடியாது என மிகவும் வசதியா ஒரு காரணத்தை கூறினார்கள். ஏன் பக்கத்தில் உள்ள மாநிலத்தில் பல வருடங்களாக தமிழர்கள் தாக்கப்படுகிறார்களே. தமிழர்களின் உயிரும் உடமைகளும் கலவரங்களின் போது சூரையாடப்படுகின்றனவே. அவற்றை தடுக்க எந்த இறையாண்மை உங்களை தடுக்கிறது? தமிழ் நாட்டிலிருந்து எந்த தீவிரவாதி அங்கு சென்று யாரை கொலை செய்தான் அம்மாநில தமிழர்களை பழி தீர்க்க?

தங்கள் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் மதகுகளை உடைத்து சேதப்படுத்தினார்களே அங்கு யார் இனவெறியை தூண்டியது? இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழன் என்றால், தமிழர் பிரச்னை என்றால் கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலை தான். 

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - தமிழகத்தை தாண்டி இதை சொல்ல முடியுமா நம்மால் இப்போது?

வழக்கம் போல் உங்கள் பதிலுரையையும், வாக்கையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் - My name is Aathimanithan.
share on:facebook

11 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வந்தாரை வாழ வைப்பதும், சென்ற இடமெல்லாம் "செல்லத்தட்டு" வாங்குவதும் மட்டுமே Mr.தமிழனின் சிறப்பு. நல்ல இடுகை, நன்றி.

ஸ்ரீராம். said...

வாக்களித்து விட்டேன்.

Chitra said...

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - தமிழகத்தை தாண்டி இதை சொல்ல முடியுமா நம்மால் இப்போது?
.........யோசித்து பார்க்கும் போது, தலை குனிய வைத்த கேள்வி.

ராஜா said...

enna irunthalum nammala nallavanganu sollittangalla... athan

ராஜா said...

Enna irunthaalum nammala nallavangannu sollittangalla athan

ஆதி மனிதன் said...

நன்றி சைவகொத்துபரோட்டா, ஸ்ரீராம் & சித்ரா.

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி Raja ராஜா.

உங்கள் பேரே Raja ராஜாவா?

க ரா said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி திரு. க. இராமசாமி.

சாய்ராம் கோபாலன் said...

I guess we were without religion, caste, creed like animals so that we are not in to problems like this to differentiated like this.

ஆதி மனிதன் said...

Very true. Thanks Sairam for your comments.

Post a Comment