Thursday, September 13, 2012

நான்-வெஜ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை - இறந்து (அழுகி!) போன இறைச்சிகளை வாங்கி சமைக்கும் ஹோட்டல்கள்...



அடுத்த தடவை ஏதாவது ஒரு நான்-வெஜ் ஹோட்டலுக்கு செல்லும் போது  இந்த செய்தி நினைப்புக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.


சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி வயிற்றை கலக்கியது. ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்து சென்னைக்கு இறந்து போன ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகள் சட்ட விரோதமாக ரயில்வே பார்சல்கள் வழியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவை நடுத்தர மற்றும் போஷ் ஏரியா என்று சொல்லப்படுகின்ற VIP வசிக்கும் ஏரியாக்களில் உள்ள 'சில' ஹோட்டல் ரெஸ்டாரன்ட்களில் கூட வாங்கி சமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது அந்த செய்தி.

ஆடுகளை இறைச்சிக்காக கொல்வதற்க்கேன்றே  சென்னையில் மூன்று இடங்கள் உள்ளன. இவற்றில் தினமும் ஆயிரத்திற்கும் மேலான ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் ஆடுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதித்தபின் தான் ஆடுகள் வெட்டப்படுகின்றன. ஆடுகள் வெட்டப்பட்ட பின் அவற்றின் மேல் சீலும் குத்தப்படுகின்றன.

ஆனால் ஆந்திராவிலிருந்து இறக்குமதி ஆகும் இம்மாதிரியான இறந்து போன ஆடு/மாட்டிறைசிகள் இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கப் படுவதில்லை. இத்தகைய இறைச்சிகள் வெளியில் விற்கப்படும் இறைச்சியை விட 40/50 சதவிகிதம் விலை குறைவு என்பதாலேயே  'சில' ஹோட்டல்கள் இவற்றை வாங்குகின்றன.

ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இதில் அடக்கமாம். ஆனால் இவர்கள் தங்கள் தரப்பு நியாயமாக இவ்வாறான இறைச்சிகளை நாங்கள் வாங்கினாலும் அவற்றை விஞ்ஞான முறையில் சுத்தம் செய்த பிறகே சமைக்கிறோம் என்கிறார்கள். எப்படி சுத்தம் செய்தாலும் வேக வைத்தாலும் அதிலுள்ள கிருமிகள் வேண்டுமானால் சாகலாம். ஆனால், இறந்த பின் அவற்றினுள் உருவாகும் டாக்ஸின் ஆசிடுகள் நம் உடலுக்குள் சென்றால் அது நம் உயிருக்கே உலை வைத்து விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கடைசி செய்தி: நேற்று வெளியான இந்த செய்தியை தொடர்ந்து இன்று சுகாதார துறை அதிகாரிகள் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரைடு சென்றிருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் சென்ட்ரல்/ஸ்டேட் அதிகாரிகளுக்குள் இடையே உள்ள ஈகோ பிரச்சனையால் போலிஸ் பிளாட்பாரம் உள்ளே  செல்ல தாமதமான நேரத்தில் இறைச்சி வியாபாரிகள் அனைவரும் எஸ்கேப். (இறைச்சியுடன் தான்).

share on:facebook

1 comment:

ப.கந்தசாமி said...

இது உண்மைதான்.

Post a Comment