Sunday, April 1, 2012

மின்வெட்டால் பாதித்தோருக்கு நஷ்டஈடு: மின்சார ஒழுங்கு முறை வாரியம் அதிரடி.


கடந்த மாதம் திடீரென்று ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இரண்டு நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி இருட்டில் மூழ்கின. பல தொழில் சாலைகளும், பள்ளி மற்றும் மருத்துவ மனைகளுக்கும் மிகுத்த சிரமம் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான புகார்களின் அடிப்படையில், அதனையே வழக்காக எடுத்துக் கொண்ட மின்சார ஒழுங்கு வாரியம், மின்சார தடையை உடனடியாக சரி செய்ய இயலாத மின் வழங்கும் கம்பெனியிடம் அதற்க்கு அபராதம் விதித்து அந்த தொகைய பதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடாக வழங்க முடிவு செய்துள்ளது.

பொறுங்க, பொறுங்க...இது நம்மூர்ல நடந்த விசயமில்லீங்க...அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சம்பவம். ஆம், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மின் தடை என்பது என்ன வென்றே தெரியாது என்று கூட சொல்லலாம். எதிர்பாராத இயற்க்கை பேரிடர் அல்லது வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடை ஏற்பட்டால் ஒழிய மற்றபடி மின் வெட்டு என்பது அங்கு அரிது.

இயற்க்கை காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக மின் தடை ஏற்படுவது அரிது என்றாலும் அப்படி ஏற்படுமாயின், அதை முன் கூட்டியே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை மின் வெட்டு ஏற்படும், அதனால் என்னென்ன வீட்டு மின் உபகரணங்கள் பாதிக்கப் படும், மின் வெட்டின் போது வீட்டில் உள்ள மின் உபகரணங்களை எவ்வாறு முறையாக பாத்து காக வேண்டும் உட்பட அனைத்தையும் ஒரு கடிதம்/நோட்டீஸ் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முன் கூட்டியே தெரியப் படுத்தி விடுவார்கள்.

2020 இல் சூப்பர் பவர், 2050 இல் உலகையே ஆளப் போகிறோம் என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகும். அல்லது நம்மை அரசியல் வாதிகள் ஏமாற்றும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடி மகனுக்கும், குடிக்க சுகாதரமான குடிநீர், நல்ல சாலை வசதிகள், மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகள் அனைத்தையும் எந்த ஒரு நாடு/அரசாங்கம் ஏற்படுத்தி தருமோ அல்லது அதற்க்கான திட்டங்களை வகுத்து செயல்படுமோ அந்த நாடு தான் சூப்பர் பவர் தன்னை கூறிக் கொள்ள முடியும்.

இதையெல்லாம் நாங்கள் சொன்னால், சும்மா அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தாய் நாட்டையே தூற்றுபவனாக நம்மை பார்க்கும். வேறு ஒன்றும் இல்லைங்க. எல்லாம் வாயிற்று எரிச்சல் தான். இத்தனைக்கும் அமெரிக்காவில் மட்டும் ஒன்றும் ஒரே நாளில் எல்லா வசதிகளும் வானத்திலிருந்து பொத்துக் கொண்டு வந்து விட வில்லை. பல நூறு வருடங்கள் அரசும், அரசியல் மேதைகளும், மக்களும் திட்டம் போட்டு, அதை நல்ல முறையில் லஞ்சம் ஊழல் இன்றி செயலாற்றியதன் பலனை தான் அதன் பின் பல தலைமுறைகளும் அனுபவித்து வருகிறார்கள்.


இன்று தமிழகத்தில் அமலில் உள்ள மின் வெட்டை பற்றி வரும் துணுக்குகள் பல. பிறந்த குழந்தை நர்சிடம், இங்கு கரண்ட் இருக்கிறதா என கேட்பதும் அதற்க்கு நர்ஸ் ஆம் என்று சொன்னால், அப்பா, அப்ப நான் தமிழ் நாட்டுல பிறக்கல என சிரிப்பதும் என்று.

மின்சாரம் என்பது மற்ற எந்த பொருட்களையும் விட சற்று வித்தியாசமானது. அதை பல வகைகளில் உருவாக்க முடியும் ஆனால், சேமித்து வைக்க முடியாது. அது தான் பிரச்சனையே. அமெரிக்காவே என்றாலும், மின்சாரம் மட்டும் வீட்டு உபயோகத்திற்கு ஒரு நிறுவனத்திடம் இருந்து தான் பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் எங்குமே மின்சாரம் வழங்குவதில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே எல்லா நாடுகளிலும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அது எவ்வாறு சிறப்பாக செயலாற்றுகிறது என்பதில் இருந்துதான் அந் நாட்டு மின்சார பிரச்சனையின் அளவும்.

அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட மின்சார நிறுவனம் ஐந்து மில்லியன் (50 லட்சம்) வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. அவர்கள் இன்று ஒரு யூனிட்டுக்கு ஒரு சென்ட் உயர்த்துவது என்றாலும் அதற்க்கு மின்சார ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு ஒரு பெரிய 'நோ' சொல்லி விட்டது. அதற்க்கு காரணம், நான்கு மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்த போது, வெறும் பதினாறாயிரம் ஊழியர்களை மட்டுமே இருந்த அந்த நிறுவனத்தில் இன்று ஐந்து மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் இருபத்திநான்கு ஆயிரம் ஊழியர்களை வைத்துள்ளது. அது ஏன், அவர்களுக்கு கொடுக்கப் படும் சம்பளம் வாடிக்கையாளர்கள் தலையில் தானே கட்டண உயர்வாக அமையும் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளது.


இப்போ சொல்லுங்கள், நம்மூர் அரசியல் வாதிகள், பயனற்ற அரசு திட்டங்கள், இலவசங்கள் என பல்வேறு வகையில் அரசுக்கும், மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை சரிகட்டவே மின்சார கட்டணம் உயர்த்தப் படுகிறது என்றால் அந்த உயர்வு நம் தலையில் ஏன் வந்து விழ வேண்டும்.


நான் ஒன்றும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் இல்லை. இருப்பினும் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த போது அனுபவித்த மின் வெட்டின் தாக்கம் இன்றும் என்னை பயமுறுத்துகிறது. கேட்ட வார்த்தையே உபயோகிக்காத நான், அந்த ஒன்றிரண்டு மாதங்கள் காலை வேளையில் மின்சாரம் போகும் போது, வந்து என்னை பிடுங்கி தின்ற கொசுக்களின் மத்தியிலும், உடல் முழுதும் வியர்வையில் எறிந்த போதும், நான் திட்டாத கேட்ட வார்த்தைகள் இல்லை. அரசியல் வாதிகளையும் தமிழக அரசையும் தான்.

மின்வெட்டால் வியர்த்து போய் இருந்தால், சற்று கூலாக ஒரு ஜோக். ரஜினிகாந்த் வீட்டில் மட்டும் மின் வெட்டு பிரச்னை இருந்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால், அவர்தான் 'மின்சார கண்ணா' வாச்சே...      

share on:facebook

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

விறு விறுன்னு படிச்சுட்டு வந்தா கடைசில ஜோக் ஏனோ கொஞ்சமா கூல் பண்ணிச்சு.

angel said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
விறு விறுன்னு படிச்சுட்டு வந்தா கடைசில ஜோக் ஏனோ கொஞ்சமா கூல் பண்ணிச்சு.


ithai nan vazhimozhigindren

Anonymous said...

http://www.iacaatl.org/is-it-right-to-convict-dharun-ravi-for-10-years/

Post a Comment