Friday, June 24, 2011

15 பைசா கார்டு


புறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ்,  ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்பாலான  பொது ஜனங்கள் தபால் சேவையை நம்பியும் உபயோகித்தும்  வருகிறார்கள். 

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக 15 பைசா கார்டு சேவையில் இருந்து வந்தது. இந்தியாவிலேயே குறைந்த செலவில் அதிக பயன் கொடுக்கும் ஒரே பொருள் 15 பைசா தபால் கார்டு தான். என்னுடைய நண்பர் ஒருவர் தபால் பட்டுவாடா சேவையில் பணிபுரிந்தவர். அவர் கூறும்போது,  எங்கோ வெளி ஊரிலோ, வேறு மாநிலங்களிலோ வேலை செய்து தன்  குடும்பத்தை காப்பாற்றும் பிள்ளைகள் தன் வயதான தாய் தந்தைக்கு   ஒரு 15  பைசா கார்டில் சென்டிமீட்டர் விடாமல் ஆடு மாடு உட்பட அனைத்து  சொந்தங்களையும் விசாரித்து எழுதி இருப்பார். ஆனால் அந்த  கடிதத்தை  மீண்டும் மீண்டும் படித்து காட்ட சொல்லி என்னிடம் கேட்பார்கள்.  அந்த 15 பைசா கார்டு அவர்களுக்கு தந்த சந்தோசம் இப்பல்லாம் வெப்  கேமராவில்  என் பிள்ளைகளிடம் நேருக்கு நேர் பேசிக்கொண்டால் கூட எனக்கு கிடைக்க மாட்டேன்கிறது என்கிறார். 

இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட தபால் சேவையை பேணி காக்க   வேண்டும் என எல்லோரும் போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் கார்  இல்லாத வீடு கூட பார்த்துவிடலாம். ஆனால் தபால் பெட்டி இல்லாத வீட்டை  பார்க்க முடியாது. அதுவும் புறா கூண்டு போல் அழகாக இருக்கும். நம்மூர்  போலவே மழை, வெயில், பனி என்று எந்த சூழ்நிலையிலும் தபால் சேவை  தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அமெரிக்காவில், junk mail என்று  கூறுவார்கள். அது போல் நமக்கு தேவை இல்லாத பல விளம்பர  ஏடுகளும் வந்து விழுந்து கொண்டே இருக்கும். நம்மூராக இருந்தால் பழைய  பேப்பருக்கு போட்டாலே நல்ல வருமானம் பார்க்கலாம்.

அபார்ட்மென்ட் வீடுகளில் சிறிது சிறிதாக பெட்டிகள் கொண்ட பெரிய தபால் பெட்டி இருக்கும். தபால் விநியோகிப்பவர் மாஸ்டர் கீயை பயன்படுத்தி எல்லோர் தபாலையும் பிரித்து போடுவார்.



தற்போது பல நவீனங்கள் தபால் சேவையில் வந்து விட்டது. Tracking System  மூலம் நாடுகள் கடந்து போகும் தபால் கூட எந்த நாட்டில் தற்போது  சென்றடைந்துள்ளது என்பதை கூட தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.  ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் தபால் சேவைகள்  தனியாரிடமும், தபால் வில்லைகளுக்கு பதிலாக கை பேசியிலேயே பணம்  செலுத்தி  பெறும் என்னை உறையில் குறித்து விட்டால் போதும் என்ற வசதியும்  உள்ளது. அதுவே  தபால்  தலை ஆகிவிடும். இங்கிலாந்தில் ஆங்காங்கு  ரோட்டோரத்தில் இருக்கும்  சிகப்பு நிற தபால் பெட்டிகள் ஒரு தனி அழகு. 
   

நான் படித்து முடித்த பிறகு என் நண்பன்னுக்கு முதன் முதலில் BSF  வேலை கிடைத்தது. அப்போது பீகார், டெல்லி என அவன் வேலை  செய்து  கொண்டிருந்த போது நான் அவனுக்கும் அவன் எனக்கும் இன்லாந்து கவர்  மூலம் லெட்டர் எழுதிக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அவனிடம் இருந்து  ஒரு லெட்டர் வரும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும். பிறகு நான்  அமெரிக்கா வந்த பிறகு கூட சில காலம் என் அம்மாவிற்கு  கடிதம் எழுதும்  பழக்கம் இருந்தது. என் அம்மா சில கடிதங்களை இன்னமும்  வைத்துள்ளார்கள். அடிக்கடி என்னிடம் நான் எழுதிய பழைய  கடிதத்தில் இருந்ததை கூறுவார்கள். அப்படியா எழுதி இருந்தேன் என ஆவலுடன் கேட்பேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் உங்கள் உறவுகள், நண்பர்களுக்கு  ஒரு கடிதம் எழுதிப்பாருங்களேன். உங்களுக்கும் அவங்களுக்கும் நிச்சயம் ஒரு மாற்றமான சந்தோசம் கிடைக்கும்//ஆனால் கடிதம் உறவுகளை  வலுப்படுத்துவதாகவே இருக்கட்டும்//.

இப்படிக்கு,
ஆதிமனிதன்.   


share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

ம்ம் எனக்கும் இந்த கார்ட் வைத்து நிறைய ஞாபகங்கள் உள்ளன.
****
நீங்க உங்க அட்ரஸ் முதலில் சொல்லுங்க உங்களுக்கு கடிதம் எழுதுறேன் ( ஈ மெயில் முகவரியே சொல்றதில்லை நீங்க ..!!)

சாய்ராம் கோபாலன் said...

Superb and nostalgic.

இன்றும் என் அப்பா மற்றும் அவர் சகோதரர்கள் போஸ்ட் கார்டிலும், இன்லாந்து லெட்டர் தான் எழுதி கொள்வார்கள்.

என் மகன்கள் என்னிடம் பேசவே பிரிய படுவதில்லை, இது வேறு ?

Post a Comment