Thursday, October 8, 2009

அதற்கு பெயர் என்ன?


தமிழ் சினிமா உலகில் ஓரிரு நாட்களாக நடந்து வரும் சம்பவங்களும், கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் இன்னமொரு சம்பவமும் ஏனோ என்னை ஒன்றுக்கொன்று முடிச்சு போட தோன்றுகிறது.

சமீபத்தில் ....... வழக்கு ஒன்றில் ஒரு நடிகை கைது செய்யப்பட, அதுவும், அதன் ஒட்டி வெளியான தகவல்களும் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டதாக மிகப்பெரிய இரைச்சல் தாங்கமுடியாத வண்ணம் நம் கதை செவிடாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் தன் உடம்பை பலருக்கு பணத்திற்காகவோ, வேறு பல அனுகூலங்களுக்காகவோ விருந்தாக்கினால் மட்டுமே அது தவறு என்ற கண்ணோட்டம் நிலவுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு தொழில் சில/பல நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாகவே நடக்கிறது.

அதே நேரத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, அவர் இன்னொருவரின் வாழ்வில் அதாவது இன்னொருவரின் குடும்பத்தில் புகுந்து அடுத்தவரின் மனைவியை/கணவனை அபகரிப்பது தான் மிகப்பெரிய விளைவுகளை பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது.

சமீப காலமாக ஒரு மிக பெரிய நடிகரை ஒரு முன்னணி நடிகை அவருடைய மனைவியிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், அவரை அவர் குடும்பத்துடன் சேர விடாமல் தன்னிடமே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வார ஏடுகளிலும் அட்டை படம் போட்டு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் கணவனை தன்னிடமிருந்து பிரிக்க நினைக்கும் நடிகையை நேரில் கண்டால் கண்டிப்பேன்/உதைப்பேன் என ஒரு ஆத்திரத்தில் கூறியதற்கு, அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒரு குடும்பத் தலைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை பார்த்து "உனக்கு அந்த அருகதை இல்லை" என அந்த நடிகை கூறிஉள்ளார். மேலும், அப்படி ஏதாவுது நடந்தால் நானும் திரும்பி அடிப்பேன் என்று பகிரங்கமாக பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.


பத்திரிக்கைகளில் ஊகங்களின் பேரில் வெளியான தகவல்களுக்கே "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டப்படி" நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, அமாம் நான் இன்னொருவரின் கணவருடன் சுற்றுவேன், அவருடன் குடும்பம் நடத்துவேன், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறும் நடிகை மீது பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவி புகார் கொடுத்தால் அந்த நடிகை மீதும் இதே நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா?

அப்படி எடுத்தால் நடிகர் சங்கம் இதே மாதிரி அந்த நடிகைக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்குமா?

கடைசியாக ஒரு கேள்வி.
 
இவ்வாறு இன்னொருவரின் கணவரை அவரின் குடும்பத்திலிருந்து பிரித்து அவருடன் தனியாக குடும்பம் நடத்த துடிக்கும் இந்த செயலுக்கு என்ன பெயர்?
share on:facebook

2 comments:

ஸ்ரீராம். said...

மாத்தி மாத்தி இப்படி கேள்வி கேட்டுகிட்டே இருந்தா இதற்கு முடிவே கிடையாது...!

கலையரசன் said...

நல்லா வாயில வருதுங்க...
சொன்னா, நாகரீகமா இருக்காதுன்னு விடுறேன்!!

Post a Comment