Showing posts with label மாத்தி யோசி. Show all posts
Showing posts with label மாத்தி யோசி. Show all posts

Tuesday, April 17, 2012

நீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் ?


சமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்ற 'நீயா நானா' புகழ் திரு. கோபிநாத் சிறப்பாக விளையாடி பதினாறு லட்சம் வென்றார்.

இடை இடையே திரு. சூர்யா கேட்ட கேள்விகளுக்கு உணர்வு பூர்வமாக பதில் அளித்தார். எல்லாம் நன்றாக தான் போய்கிட்டு இருந்தது. திடீரென்று ஆடியன்சை பார்த்து, இனிமே வெளிநாடுகளுக்கு போய் இன்னொருத்தன் கிட்ட கையேந்தி வேலை செய்யறதை விட்டுட்டு அவங்களை போல் உலகமே பேர் சொல்லும் மாதிரி எதையாவது ஒன்றை (ஒரு ப்ராடக்டை) புதுசா கண்டு பிடிங்கப்பா. அப்பத்தான் இந்தியா முன்னேறும் என்றார். தொடர்ந்து என்னப்பா கண்டு பிடிப்பீங்களா? என்று விடை கிடைக்காத ஒரு கேள்வியும் கேட்டார்.

அவர் IT நண்பர்களை மனதில் வைத்துதான் அதை சொன்னார் என்பதற்கு வேறு விளக்கங்கள் தேவை இல்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அமெரிக்காவில் IT இல் வேலை பார்ப்பவர்களை பற்றி பலரும் ஒரு குத்தலாக தான் பேசுகிறார்கள். அதற்க்கு காரணம் அவர்களால் அவ்வாறு கண்டம் விட்டு கண்டம் சென்று மிகவும் சொகுசாகவும், மரியாதையாகவும் வாழ வழி இல்லை என்ற பொறமையையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல், அமெரிக்காவிற்கு யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. இங்கு வரும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் கஷ்டப்பட்டு படித்து, போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களுக்கு உள்ள தகுதியின் அடிப்படையில் முண்டி அடித்து தான் இங்கு வந்து சேருகிறார்கள். "Career" என்று சொல்வார்களே. அதில் ஒரு மைல் கல்லாகத்தான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை IT இல் உள்ளவர்கள் கருதுகிறார்கள். பாங்க்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மானேஜர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் போது பெரும்பாலும் வெளி ஊர்கள் அல்லது மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். அது போல் தான் IT மக்கள் வெளி நாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். இதை எப்படி நம் நாட்டை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு சேவகம் செய்வதாக பார்க்கிறார்களோ தெரியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் அதிக பட்சம் பத்து/பதினைந்து சதவிகிதம் பேர் கூட அங்கேயே செட்டில் ஆவதில்லை. ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் இந்தியா திரும்பி விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்போது தான் நம்மிடையே கணிப்பொறி மற்றும் அது சம்மந்தப் பட்ட அறிவு பெரும்பாலான மக்களிடையே பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம்மிடையே ஒரு பில் கேட்ஸ்சோ ஸ்டீவ் ஜாப்ஸ்சோ நிச்சயம் உருவாவார்கள். அதற்க்கு இந்த தலைமுறையின் கணணி அறிவு நிச்சயம் அடுத்த தலைமுறையை மேலும் அறிவாளிகளாக்க பயன்படும்.

கடைசியாக நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பார்த்து கோபிநாத் கேட்ட கேள்வியை அவரிடமே நான் கேட்க நினைக்கிறேன்.

ஆமா, 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நீங்களா கண்டுபிடித்த நிகழ்ச்சியா? பல நாடுகளில், மொழிகளில் நடத்தப் பட்ட, நடந்து கொண்டு இருக்கிற நிகழ்ச்சியை தானே நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள். நீங்க எப்போது இது மாதிரி ஒரு நிகழ்ச்சியை கண்டுபிடித்து உலகம் பூரா உள்ள மற்ற நாட்டு தொலைகாட்சிகள் உங்களை பின்பற்ற வைக்க போகிறீர்கள். சொல்வது எல்லாம் ஈசிதான் சார். அதை நாம செய்து பார்த்தா தான் கஷ்டம் தெரியும்.

இந்தியர்கள் தான் முதன் முதலில் அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் முதன் முதலில் இன்டர்நெட் பேஸ்ட் ஈமெயில் வசதியை கண்டு பிடித்து அதை செயல் படுத்தினார்கள். அது தான் தற்போதுள்ள மைக்ரோ சாப்ட்  'ஹாட் மெயில்'. ஆரம்பித்த சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைத்தவுடன் அதை மைக்ரோ சாப்ட்டிடம் விற்று விட்டார்கள். நாம ஏற்கனவே கண்டு பிடித்து விட்டோம் சார். இன்னும் நிறைய கண்டு பிடிப்போம்...     

share on:facebook

Thursday, March 15, 2012

தமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு !

I Like this ....



share on:facebook

Wednesday, February 15, 2012

கவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி? - பெண்களுக்கு மட்டும்.


சமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் "வால் கிரீன்சில்" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள  பெண்களூக்கான 'கமிசோல்' என்று சொல்லப் படும் உள்ளாடையின் விளம்பரத்தை பார்த்தேன். 'மாத்தி யோசி' என்று சொல்வார்களே அது இது தான் போல. சில நேரங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த கலர், டிசைன் என்று எல்லாம் தேர்வு செய்த பின் மேலாடையை அணிந்து பார்த்தால் அதில் கழுத்துக்கு கீழே பெரிய அளவில் மார்பக பகுதிகள் தெரியும் வகையில் மிகவும் லோ நெக்க்காக இருக்கும். அதை விரும்பாத பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு உடை பிடித்திருந்தும் வேண்டா வெறுப்பாக வந்து விடுவார்கள். 

ஆனால், படத்தில் உள்ளது போல் ஒன்றிரண்டு வண்ணங்களில் 'கமிசோல்கள்'  பெண்கள் வாங்கி வைத்துக் கொண்டால் போதும். எவ்வளவு லோ நெக்காக  இருந்தாலும், மேலாடை அவர்களுக்கு பிடித்திருந்தால் இம்மாதிரி  கமிசோல்களை உபயோகித்து அழகான உடைகளை கவர்ச்சி இன்றி அதே நேரத்தில் அடுத்தவர்களை கவரும் வகையில் உடைகளை அணியலாம்.


இந்தியாவில் இம்மாதிரி 'கமிசோல்ஸ்' கிடைக்கிறதா என்று எனக்கு தெரியாது. இல்லை என்றாலும் கூட இம்மாதிரி இரண்டு மூன்று வண்ணங்களில் பெண்களே தைத்து வைத்துக் கொண்டால் அவர்களுக்கு பயன் படும் என்று நினைக்கிறேன்.

இம்மாதிரி வேறு சில 'மாத்தி யோசி' பொருட்களை பற்றி வேறு ஒரு பதிவில்...

வேறு சில 'மாத்தி யோசி' சமாச்சாரங்கள் கீழே...

மாத்தி யோசி - 1


மாத்தி யோசி - 2


share on:facebook

Wednesday, January 4, 2012

ஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது சென்னை ஸ்டைலு


தலைப்பை பார்த்து இது ஏதோ புது பிளாக் நேம்னு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. குப்பைதொட்டி.காம் - சென்னை கார்பரேசன் செய்ய வேண்டிய குப்பை அள்ளும்/பிரிக்கும் வேலையை ஒரு தனியார் நிறுவனம் ஹை டெக்காக செய்து வருகிறது. அதுவும் ஆன்லைனில். குறிப்பாக மக்காத குப்பையான பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் சரியானபடி ரீசைக்ளிங்  அல்லது உபயோகப் படுத்த படவில்லை என்றால் அதனால் சுற்றுப்புற  சூழலுக்கு கேடு.

சுற்று புற சூழலை பாதுகாக்கும் நோக்கோடும் அதே சமயம் மக்காத குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரித்து அதற்குரிய விலையை  கொடுப்பதின்  மூலம் வாடிக்கையாளர்களையும் சந்தோசப் படுத்தி  வருகிறார் சென்னையை  சேர்ந்த திரு ஜோசப் ஜெகன்  என்பவர்.  இவர்தான் சிலரோடு சேர்ந்து குப்பை தொட்டி.காம் என்ற  ஆன்லைன் சேவையை  ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

சென்னை வாழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.  முதலில் குப்பைத்தொட்டி.காமில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்  வீட்டில் உள்ள குப்பைகளை  தரம் பிரித்து வைத்துக் கொண்டால் மாதத்திற்கு ஒரு முறை குப்பைதொட்டி.காமில் இருந்து உங்களிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிக்கொண்டு உங்கள் வீட்டிற்க்கே வந்து உங்கள் குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உங்களுக்கு குப்பைக்கான சன்மானமும் கிடைக்கும். குப்பையை பெற்றுக்  கொண்டதற்கான ரசீதும் உங்களுக்கு ஈமெயிலிலும் அனுப்புகிறார்கள்.

எல்லோருக்கும் சுற்று புற சூழ்நிலை மேல் அக்கறை இருந்தாலும் இந்த அவசர உலகில் குப்பைகளை தரம் பிரித்து அதை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்க்க எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆதலால் தான் இத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம் என்கிறார். ஜெகன். ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட இந்த ஆன்லைன் சேவையில் இது வரை 
500 பேருக்கு மேல் தங்களை பதிவு செய்துள்ளதவும் தெரிவித்துள்ள ஜெகன்  அவர்கள்,  கூடிய விரைவில் பல வன்னங்களினால் ஆன மூடியுடன் கூடிய குப்பை பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு தரப் போவதாகவும் இது மக்காத  குப்பைகளை தரம் பிரிக்க மேலும் உதவும் எனவும் தெரிவிக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் குப்பை தொட்டிகளில் மறு மதிப்புள்ள மக்காத குப்பை வகைகள் டன் கணக்கில் கொட்டப் பட்டு வீணாவதை பார்த்ததின்  விளைவே இப்படி ஒரு சேவையை ஆரம்பிக்க வேண்டும் என தனக்கு  தோன்றியதாக கூறும் திரு. ஜெகன், கூடிய விரைவில் பல மேற்கத்திய  நாடுகளை போல் நம் நாடும்  குப்பை பராமரிப்பில் சிறந்து விளங்கும்  நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.

நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டுமா? அப்ப இங்க சொடுக்குங்க.

  

share on:facebook