Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

Sunday, April 1, 2012

மின்வெட்டால் பாதித்தோருக்கு நஷ்டஈடு: மின்சார ஒழுங்கு முறை வாரியம் அதிரடி.


கடந்த மாதம் திடீரென்று ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இரண்டு நாட்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி இருட்டில் மூழ்கின. பல தொழில் சாலைகளும், பள்ளி மற்றும் மருத்துவ மனைகளுக்கும் மிகுத்த சிரமம் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து வந்து குவிந்த ஆயிரக்கணக்கான புகார்களின் அடிப்படையில், அதனையே வழக்காக எடுத்துக் கொண்ட மின்சார ஒழுங்கு வாரியம், மின்சார தடையை உடனடியாக சரி செய்ய இயலாத மின் வழங்கும் கம்பெனியிடம் அதற்க்கு அபராதம் விதித்து அந்த தொகைய பதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடாக வழங்க முடிவு செய்துள்ளது.

பொறுங்க, பொறுங்க...இது நம்மூர்ல நடந்த விசயமில்லீங்க...அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சம்பவம். ஆம், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மின் தடை என்பது என்ன வென்றே தெரியாது என்று கூட சொல்லலாம். எதிர்பாராத இயற்க்கை பேரிடர் அல்லது வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடை ஏற்பட்டால் ஒழிய மற்றபடி மின் வெட்டு என்பது அங்கு அரிது.

இயற்க்கை காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக மின் தடை ஏற்படுவது அரிது என்றாலும் அப்படி ஏற்படுமாயின், அதை முன் கூட்டியே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை மின் வெட்டு ஏற்படும், அதனால் என்னென்ன வீட்டு மின் உபகரணங்கள் பாதிக்கப் படும், மின் வெட்டின் போது வீட்டில் உள்ள மின் உபகரணங்களை எவ்வாறு முறையாக பாத்து காக வேண்டும் உட்பட அனைத்தையும் ஒரு கடிதம்/நோட்டீஸ் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முன் கூட்டியே தெரியப் படுத்தி விடுவார்கள்.

2020 இல் சூப்பர் பவர், 2050 இல் உலகையே ஆளப் போகிறோம் என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகும். அல்லது நம்மை அரசியல் வாதிகள் ஏமாற்றும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடி மகனுக்கும், குடிக்க சுகாதரமான குடிநீர், நல்ல சாலை வசதிகள், மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் வசதிகள் அனைத்தையும் எந்த ஒரு நாடு/அரசாங்கம் ஏற்படுத்தி தருமோ அல்லது அதற்க்கான திட்டங்களை வகுத்து செயல்படுமோ அந்த நாடு தான் சூப்பர் பவர் தன்னை கூறிக் கொள்ள முடியும்.

இதையெல்லாம் நாங்கள் சொன்னால், சும்மா அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தாய் நாட்டையே தூற்றுபவனாக நம்மை பார்க்கும். வேறு ஒன்றும் இல்லைங்க. எல்லாம் வாயிற்று எரிச்சல் தான். இத்தனைக்கும் அமெரிக்காவில் மட்டும் ஒன்றும் ஒரே நாளில் எல்லா வசதிகளும் வானத்திலிருந்து பொத்துக் கொண்டு வந்து விட வில்லை. பல நூறு வருடங்கள் அரசும், அரசியல் மேதைகளும், மக்களும் திட்டம் போட்டு, அதை நல்ல முறையில் லஞ்சம் ஊழல் இன்றி செயலாற்றியதன் பலனை தான் அதன் பின் பல தலைமுறைகளும் அனுபவித்து வருகிறார்கள்.


இன்று தமிழகத்தில் அமலில் உள்ள மின் வெட்டை பற்றி வரும் துணுக்குகள் பல. பிறந்த குழந்தை நர்சிடம், இங்கு கரண்ட் இருக்கிறதா என கேட்பதும் அதற்க்கு நர்ஸ் ஆம் என்று சொன்னால், அப்பா, அப்ப நான் தமிழ் நாட்டுல பிறக்கல என சிரிப்பதும் என்று.

மின்சாரம் என்பது மற்ற எந்த பொருட்களையும் விட சற்று வித்தியாசமானது. அதை பல வகைகளில் உருவாக்க முடியும் ஆனால், சேமித்து வைக்க முடியாது. அது தான் பிரச்சனையே. அமெரிக்காவே என்றாலும், மின்சாரம் மட்டும் வீட்டு உபயோகத்திற்கு ஒரு நிறுவனத்திடம் இருந்து தான் பெற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் எங்குமே மின்சாரம் வழங்குவதில்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே எல்லா நாடுகளிலும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அது எவ்வாறு சிறப்பாக செயலாற்றுகிறது என்பதில் இருந்துதான் அந் நாட்டு மின்சார பிரச்சனையின் அளவும்.

அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட மின்சார நிறுவனம் ஐந்து மில்லியன் (50 லட்சம்) வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. அவர்கள் இன்று ஒரு யூனிட்டுக்கு ஒரு சென்ட் உயர்த்துவது என்றாலும் அதற்க்கு மின்சார ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு ஒரு பெரிய 'நோ' சொல்லி விட்டது. அதற்க்கு காரணம், நான்கு மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்த போது, வெறும் பதினாறாயிரம் ஊழியர்களை மட்டுமே இருந்த அந்த நிறுவனத்தில் இன்று ஐந்து மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் இருபத்திநான்கு ஆயிரம் ஊழியர்களை வைத்துள்ளது. அது ஏன், அவர்களுக்கு கொடுக்கப் படும் சம்பளம் வாடிக்கையாளர்கள் தலையில் தானே கட்டண உயர்வாக அமையும் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளது.


இப்போ சொல்லுங்கள், நம்மூர் அரசியல் வாதிகள், பயனற்ற அரசு திட்டங்கள், இலவசங்கள் என பல்வேறு வகையில் அரசுக்கும், மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை சரிகட்டவே மின்சார கட்டணம் உயர்த்தப் படுகிறது என்றால் அந்த உயர்வு நம் தலையில் ஏன் வந்து விழ வேண்டும்.


நான் ஒன்றும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் இல்லை. இருப்பினும் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த போது அனுபவித்த மின் வெட்டின் தாக்கம் இன்றும் என்னை பயமுறுத்துகிறது. கேட்ட வார்த்தையே உபயோகிக்காத நான், அந்த ஒன்றிரண்டு மாதங்கள் காலை வேளையில் மின்சாரம் போகும் போது, வந்து என்னை பிடுங்கி தின்ற கொசுக்களின் மத்தியிலும், உடல் முழுதும் வியர்வையில் எறிந்த போதும், நான் திட்டாத கேட்ட வார்த்தைகள் இல்லை. அரசியல் வாதிகளையும் தமிழக அரசையும் தான்.

மின்வெட்டால் வியர்த்து போய் இருந்தால், சற்று கூலாக ஒரு ஜோக். ரஜினிகாந்த் வீட்டில் மட்டும் மின் வெட்டு பிரச்னை இருந்தாலும் பிரச்னை இல்லை. ஏனென்றால், அவர்தான் 'மின்சார கண்ணா' வாச்சே...      

share on:facebook