Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Tuesday, November 5, 2013

'இசைப்ரியா' பிரபாகரனின் மகளா? அதிர்ச்சி செய்தி.

LTTE Prabhakaran Daughter IsaiPriya Raped and Killed by Srilankan Army. 


தீபாவளி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர் பயணம் ஆகியவற்றால் சில நாட்கள் அதிகமாக செய்திகளை மேய முடியவில்லை. அதனால் ஆன்லைனில் ஞாயிறு இரவு செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் இந்த செய்தியை பார்க்க நேர்ந்தது. தெரிந்து தான் இப்படி செய்தி வெளியிடுகிறார்களா? இல்லை யாரை பற்றி 'ரிப்போர்ட்' செய்கிறோம் என்றே அறியாமல் செய்திகளை வெளியிடுகிறார்களா என தெரியவில்லை.

மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது டைட்டில். அதன் கீழே 'இசைப்ரியா' வின் வீடியோவையும் அதன் பின் இவ்வாறு மீண்டும் இரண்டாம் முறை தவறான தகவலை தந்திருக்கிறார்கள். 

Isaipriya D/O of LTTE Chief Prabhakaran, Found
Dead in a Ditch with Serious Injuries and Evident
of Sexual Assault.

ஓரிருவர் பின்னூட்டத்தில் இது தவறான தகவல் என்று எடுத்து சொல்லியும் இன்னமும் v6news செய்தியின் பொருளை மாற்றவில்லை. 

share on:facebook

Thursday, April 11, 2013

தமிழ் ஈழம்: அறுவடைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள்


போர் என்று ஒன்று நடந்தால் அதில் பொது மக்கள் பலியாவது சகஜம் தான் என்றவரும், அயல் நாட்டு விசயத்தில் ஓரளவு தான் தலை இட முடியும் என்று சொன்னவர்களும் தான் இன்று ஈழ பிரச்சனையில் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஈழப்  பிரச்னை பற்றி ஆரம்பம் முதல் நன்கு அறிந்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி இவர்கள் அவ்வப்போது எடுத்த மாறுபட்ட நிலை பற்றியும்.

1980 களின் துவக்கத்தில் ஜெயவர்த்தனா ஆட்சியில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது (கவனிக்கவும்: போராளிகள் அல்ல. அனைவரும் அப்பாவி தமிழர்கள்) தமிழகம் எங்கும் மனித சங்கிலிகளும் ஈழத் தமிழர்களுக்கான அதரவுக்குரலும் ஓங்கி ஒலித்த நேரம். ஏன், இதே காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்தியாவின் பிரதமருமான, இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது 'Genocide' ஒரு இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்தார்.

அதற்க்கு சற்றும் சளைக்காமல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்  அரசு சார்பில் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தமிழகத்தில் பொது மக்களின் பேராதரவோடு நடத்தி  வந்தார். நான் அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஓரளவு நன்றாக வரைய கூடியவன். பாட நேரத்தின் போதே ஒரு நோட்டு புத்தகத்தில் இலங்கையின் வரைபடத்தை வரைந்து, அதற்க்கு பக்கத்தில் ஜெயவர்த்தனா தன் கோர பற்களால் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது போலவும் அதை பார்த்து இந்திய தாய் கண்ணீர் சிந்துவது போலவும் வரைந்து எல்லோரிடமும் காண்பித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போதே அந்த வயதிலேயே இலங்கை தமிழர்கள் பால் கவலையும் அவர்களுக்கான தார்மீக அதரவு மனநிலையும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழகம் முழுதும் நிலவியது. அதை விட முக்கிய காரணம் இப்போது போல் அரசியல் அந்த காலத்தில் அவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்ததில்லை.

ஏதோ ஒரு வகையில் (காரணங்களை எழுதினால் அது ஒரு பதிவு போல் நீண்டு விடும்) அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆருக்கு விடுதலை புலிகளையும், தம்பி பிரபாகரனையும் பிடித்து போக அதே காரணத்தினாலும், அரசியலில் எதிர் எதிராக இருந்த காரணத்தாலும் (நாற்பதாண்டு நண்பர் என்ற வசனமெல்லாம்  எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு எழுதியது தான்) கலைஞர் சீறி சபாரத்தினம் குழுவை ஆதரிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் சீறி சபாரத்தினம் விடுதலை புலிகளால் கொல்லப்பட தமிழகம் எங்கும் 'கொலை கார பாவி  பிரபாகரா...' என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அதுவும் ஓர் அரசியல் தான்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களின் நல்வாழ்க்கை இந்திய பூலோக நலன் (காக்கப்பட) சார்ந்தும், தமிழக அரசியல் கட்சிகளின் வோட்டு அரசியலிலும் கலந்து அல்லோகல்ல பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு பலமிக்க நாடாக வந்து பிற்காலத்தில் பாகிஸ்தான் போல் இந்தியாவிற்கு தொல்லையாகி விட கூடாது என்பதில் அன்றைய இந்திய அரசுக்கு கவலை. அதற்க்கு ஒரே வழி அங்கு சுய மரியாதைக்காக போராடி வரும் குழுக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலம் இலங்கை அரசை பலவீனமாக்குவது மட்டுமே இந்தியாவிற்கு நல்லது என்ற 'உயர்ந்த' நோக்கோடு இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இலங்கையில் சிறிய அளவில் போராடி வந்த குழுக்களை இந்தியா அழைத்து வந்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைத்து ஆயுத பயிற்சியை பகிரங்கமாக கொடுத்தது.

ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அனைத்து போராளிகளும் இந்திய அரசின் உதவிகளையும், ஆயுத பயிற்சியையும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பெற்று வந்தனர். கடைசியாக தான் விடுதலை புலிகள் அமைப்பும் சேர்ந்து கொண்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் போராளிகள் ராணுவ சீருடைகளில், 'ஜீப்' வாகனங்களில் சீறி சென்றதெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததுண்டு. அப்போது அவர்கள் மீது தமிழகத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ போராளி குழுக்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை புலிகள் என்றே தமிழகத்தில் அழைத்து வந்தனர். ஒரு வேலை வி.பு. என்ற பெயர் பொருத்தமாகவும், ஈர்பதாகவும் இருந்திருக்கலாம்.

இதற்கிடையே அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை புலிகளை அழைத்து அவர்களின் போராட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ரொக்க பணத்தை எல்லோரும் அறிய நன்கொடையாக  வழங்கினார். அதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் இதை கொடுக்க எனக்கு உரிமை இல்லை என்றால் அதை என் கட்சியின் சார்பாக கொடுக்கிறேன் என்று சொல்லி தைரியமாக அறிவித்தார். பெரும் நிதிப் பற்றக்குறையில் சிக்கி தவித்த வி.பு. களுக்கு அன்றைய கால கட்டத்தில் 3 கோடி ரூபாய் மிக பெரிய பணமாக பட்டது. அதன் காரணமாகவே கடைசி வரையிலும் வி.பு. மத்தியிலும் ஈழ தமிழர்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக பெரிய மரியாதையும் மதிப்பும் இன்றளவும் இருந்து வருகிறது.

இப்படி கூறுவதால் எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஈழ மக்களுக்கு உதவி செய்தார் என்றில்லை. அதற்க்கு சற்றும் சளைக்காமல் கலைஞர் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார். ஆனால் இந்த பாலாய் போன அரசியல் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஈழ மக்களுக்கு உதவி செய்ததற்கு இணையாக அவர்களுக்கு கேடு வரும் போது அதை தடுக்க முடியாமலும் அல்லது அவர்களுடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்களுடைய அரசியல் செயல் பாடுகள் அமைந்தது தான் பெரும் கொடுமை.

இன்னும் நிறைய இருக்கு....


share on:facebook

Monday, September 10, 2012

சீ... சீ...

கோடானு கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு முதல்வர், உலகின் மிக பெரிய நாட்டின் ஒரு பிரதமர் என இருவரை விவரிக்க முடியாத
, ஒரு முறை பார்த்த பிறகு மறு முறை பார்க்க இயலாத ஒரு கேவலமான கார்டூனை வரைந்த சிங்கள பேரினவாத கார்டூனிஸ்ட்ஐயும் அதை வெளியிட்ட சிங்கள பத்திரிக்கையையும்...

சீ சீ சிங்களம்...இதை தவிர வேறு என்ன சொல்வது.

share on:facebook

Saturday, May 19, 2012

மே 18. ஹோலோகாஸ்ட் முதல் முள்ளிவாய்க்கால் வரை...

மே 18. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மறக்க முடியாத நாள். ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே நாள், இதே வாரத்தில் தான் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் குரல் முறிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. யாரும் அற்ற அனாதைகள் என கூறுவார்களே. அதற்க்கு உண்மையான உதாரணம் இன்று இலங்கையில் உள்ள மிச்சம் சொச்சம் உள்ள தமிழர்கள் தான். இதை சொல்வதற்கு நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ் இனமே செத்து போன பிறகு இன்று தமிழ் ஈழம் தான் இலங்கை தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிடும் முன்னாள் முதல்வரும், ராஜ பக்சே கூண்டில் ஏற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் இந்நாள் முதல்வரும், இவர்கள் எல்லாம் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் ஒட்டு மொத்த குரலில் இலங்கையில் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என குரல் கொடுத்த போது எங்கு போனார்கள் என தெரியவில்லை. 

உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரே குரலில் இலங்கை தமிழர்களின் இறுதி நாட்களின் போது கண்ணீர் விட்டு கதறி கேட்டார்களே, போரை நிறுத்துங்கள் என்று, அதுவரை உலகையே அச்சுறுத்தி வந்த விடுதலை புலிகளின் இயக்கமும் தங்கள் ஆயுதங்களை மவுநிக்கிறோம் என்று அறிவித்தார்களே, அப்போது எங்கு போனார்கள் இந்த அரசியல் வாதிகள். அப்போது மட்டும் செவிடாகிப் போன இவர்கள் இப்போது மீண்டும் இலங்கை தமிழர் நலன் பற்றி பேசுவது யாரை ஏமாற்றும் செயல். குண்டு மழை பொழிந்து குற்றுயிரும் கொலை உயிருமாய் தமிழர்கள் அங்கு தத்தளித்து கொண்டிருக்க இங்கு முன்னாள் மத்திய அரசில் பதவி தேடியும், தேர்தல் தோல்விக்கு பிறகு கோடை நாட்டில் ரெஸ்ட் எடுக்கவும் இவர்கள் சென்றதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.

விடுதலை புலிகள் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் உண்டு. அதில் உண்மையும் உண்டு. அப்படி பார்த்தால் இன்று உலகில் பல நாடுகள் அரசு தீவிரவாதத்தின் கீழ் தான் உள்ளது. எந்த நாடாக இருந்தாலும் ஒரு அரசுக்கு எதிராக பலமாக ஒரு இயக்கம் வளர்ந்தால் அதை ஜன நாயகம் பார்த்து கட்டுப் படுத்துவதில்லை. தீவிரவாதம் என தலைப்பு கொடுத்து தலையை கிள்ளி தான் எறிகின்றன. 

இலங்கை அரசுக்கு எதிராக சின்ன சின்ன எதிர்ப்பு போரட்டங்களையும், தாக்குதல்களையும் நடத்தி வந்த தமிழ் குழுக்களை தமிழக அரசியல்வாதிகளும், இந்திய அரசும் தங்கள் சுய நலம், பூலோக நலனுக்காகவே அவர்களை அழைத்து வந்து இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் வைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மிக பெரிய சக்தியாக உருவாக காரணமென்றால் அம்மாதிரியான தீவிரவாதத்தை வளர்த்ததும் ஒரு தீவிரவாத செயல்தான்.    

அதே தமிழ் குழுக்கள் வளர்ந்து மிக பெரிய பலம் பெற்ற பின் எங்கே அவர்களால் நமக்கு பிரச்னை வந்துவிடுமோ என அஞ்சி இந்திய அரசு அவர்களுக்குள் சகோதர சண்டை மூட்டி அதுவே கடைசியில் ஒட்டு மொத்த தமிழின அழிவுக்கு காரணமானதற்கு நம் சுய நலம் அன்றி வேறென்ன? இவையெல்லாம் ஆரம்பம் முதல் ஈழ பிரச்சனையை ஆழ்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.

எங்கு மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கு நிச்சயம் புரட்சிகள் வெடிக்கும். புரட்சிகள் எப்போதும் பூக்களால் அலங்கரிக்கப் படுவதில்லை. நேப்பாளத்தில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி தூக்கி எறியப்பட்டு புரட்சியாளர்கள் நாட்டை பிடித்தார்கள். இன்று அவர்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லையா? நேபாள புரட்சியாளர்கள் மட்டும் என்ன பூப் பந்தையா கையில் எடுத்தார்கள். அவ்வளவு ஏன், கடந்த ஓராண்டாக எகிப்த்து முதல் பல்வேறு நாடுகளில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சியாளர்கள் தானே ஆட்சி செய்து வந்தார்கள். அந்த நாடுகள் எல்லாம் 'Sovereign' ஸ்டேட்ஸ் தானே. அங்கு மட்டும் புரட்சி எப்படி அனுமதிக்கப் பட்டது. புரட்சியாளர்கள் அது வரை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களை எல்லோரும் பார்க்க படு கொலை செய்தார்களே. அதுவெல்லாம் தீவிரவாதம் இல்லையா? 

ஒரு இனத்தையே முற்றிலும் அழித்தால் தான் தீவிரவாத்தை ஒழிக்க முடியும் என்றால் அப்புறம் உலகில் எந்த இனமும் வாழ வாய்ப்பில்லை. 

இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்ட் முள்ளி வாய்க்கால் படுகொலைகள்.  முள்ளி வாய்க்காலில் கொத்து கொத்தாய் மடிந்து போன என் தமிழ்  உறவுகளுக்கும், இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்டில் உயிர் பிழைத்து  இன்னமும்  கொட்டடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் ஆதரவற்ற  தமிழ் இனத்திற்கு என்னுடைய வீர வணக்கங்கள்.      

share on:facebook

Thursday, April 19, 2012

இலங்கை சரக்கும், இந்திய எம்.பி க்களும் - ஒன்னுமே புரியல


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் மறு புனரமைப்பு வசதிகளை பார்வையிட சென்ற இந்திய எம்.பி க்கள் நேற்று  காங்கேசன் துறைமுகம் சென்றனர். இதில் என்ன என்று கேட்கிறீர்களா? 

அங்கு சென்று போரினால் பாதிக்கப் பட்ட மக்களை பற்றி யாரும்  பேசவில்லை. அதற்க்கு பதிலாக காங்கேசன் துறை முகத்திலிருந்து  இந்தியாவிற்கு  சரக்குகளை எவ்வாறு மிக சிறந்த முறையில் ஏற்றி  அனுப்புவது இந்தியாவிலிருந்து கப்பல்கள் மூலம் வரும் சரக்குககளை எவ்வாறு சிறப்பாக பரிமாற்றம் செய்வது என்பதை விவாதித்ததாக செய்திகள்  வெளியாகி  உள்ளன.

அட பாவிகளா? நீங்கள் தமிழர்களின் மறு புனரப்பை பற்றி பார்வையிட இலங்கை சென்றீர்களா? இல்லை வியாபாரம் பேச சென்றீர்களா? ஒரு குறிப்பிட்ட இனமே அழிந்து போய் அல்லது அழியும் நிலையில் உள்ள போது, இழவு வீட்டில் எதையோ பிடுங்கியது போல், அங்கு சென்று  அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க அந் நாட்டு அரசுடன் பேசுவதற்கு  பதிலாக அங்கு சென்று இந்திய கடையை விரித்துள்ளார்கள்.

எப்படியோ, நம்மூர் கோமாளி கட்சிகள் வழக்கம் போல் இலங்கை செல்லும்  எம்.பி க்கள் குழுவை புறக்கணித்து தங்கள் சுய ரூபத்தை மேலும் ஒரு முறை  பறை சாற்றி உள்ளன.  சரி, தேசபக்தி பேசும் பி.ஜே.பியும், கம்யூனிசம் பேசும்   காம்ரேட்களும் அங்கு சென்று வீராவேசமாக ஏதாவது பேசுவார்கள் என்றால், ஏதோ சுற்றுலா வந்த பயணிகள் போல் கும்பல் கும்பலாக எல்லா  இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஒன்றுமே பெரிதாக வாய்  திறக்கவில்லை. ` 

தொலைக்காட்சிகளில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இந்திய குழுவை  காண்பித்தார்கள். அதிலும் அங்குள்ள தமிழர்களை அவர்கள் சந்தித்த முழு  விபரத்தையோ அல்லது குழுவின் பேட்டியையோ ஒன்றை கூட காட்டவில்லை.  அப்படியென்றால் போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆன பிறகும் கூட அங்குள்ள நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள்.     

கடைசியாக என்ன நடக்கும் என எல்லோருக்கும் அறிந்ததே. ஊருக்கு கிளம்பும் முன் ராஜபக்சே கொடுக்கும் விருந்தை வயிறு புடைக்க தின்று விட்டு, பிறகு சிரித்துக் கொண்டு எல்லோரும் அவரிடம் கை குழுக்குவதை   போல் ஒரு போஸ் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள். நல்ல வேலை  தமிழகத்திலிருந்து  கழக எம்.பி க்கள் யாரும் இலங்கை செல்லவில்லை. இல்லை என்றால், அவர்கள் இங்கு வந்து இறங்கும் முன், ராஜபக்சேவை  நேரில் சந்தித்து  உயிருடன் திரும்பும் அஞ்சா நெஞ்சனே வருக வருக என போஸ்டர் அடித்து ஒட்டி விடுவார்கள்.   

கடந்த முறை திருவாளர் திருமா அவர்கள், ராஜபக்சேவை நேரில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி  விடுவேன் என்று கொக்கரித்தார்.  கடைசியில் அத்தனை பற்களும் தெரியும் படி போடோவுக்கு போஸ் கொடுத்தார். என்னமோ போங்க. இலங்கை செல்லும் யாருமே அங்குள்ள சூழ்நிலையை உணர்ந்ததாக தெரியவில்லை.  ஏதோ சுற்றுலா  செல்வது போல் தான் சென்று வருகிறார்கள். இலங்கையில் தமிழன் இருக்கும் வரை அவனுக்கு அங்கு பிரச்சனைதான்.

share on:facebook

Sunday, March 25, 2012

இலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆங்கில நாளேடுகள்.


சென்ற பதிவில் இலங்கை தமிழர் பிரச்சனையில் நம்மூர் ஆங்கில நாளேடுகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தேன். இந்து பத்திரிக்கை தான் அப்படி என்றால் தற்போது தென்னகத்தில் வேகமாக வளர்ந்து வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படிதான். இது இன்னும் மோசமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளது.

நான் முன்பே கூறியிருந்தது போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆரம்பம் முதல் நாம் (இந்தியா) தான் காரணம். நம் சுய நலன்களுக்காக அவர்களை பாடாய் படுத்தி இன்று நடு தெருவில் நிறுத்தி இருக்கிறோம். அது மட்டுமன்றி தமிழ் இனத்தின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேல் பலிகொடுத்து விட்டோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கைக்கு அதரவாக ஓட்டளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. அது மட்டும்மல்ல, இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால் அதனால் இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப் பட போகிறார்களாம். என்ன இலங்கையில் வாழும் தமிழர்கள் கார் வாங்கவும், இறக்குமதியாகும் பொருட்களையும் வாங்கவும்  முடியாமல் அழ போகிறார்களா? அந்த நிலைமையிலா அவர்கள் இருக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட இவர்கள் தான் இலங்கையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள். உண்மையை சொல்லப் போனால் விடுதலை புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இருந்தவரை நம் இந்திய பூலோக நலன்கள் காக்கப் பட்டது. சீனாக்காரனோ வேறு யாரோ இலங்கையில் காலடி வைக்க தயங்கினார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எல்லாம் சிகப்பு கம்பள விரிப்பு. இதை எல்லாம் மறைக்கத்தான் எப்போது பார்த்தாலும் புலிகள் அகண்ட தமிழ் ஈழம் அடைய தமிழகத்தை தங்களுடன் இணைக்கும் திட்டம் போட்டுள்ளார்கள் என்று இவர்களாக ஒரு கதையை அவ்வப்போது பரப்பி அவர்களை இந்தியாவின் எதிரியாக எப்போதுமே பார்க்கப் பட வைத்ததாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


எது எப்படியோ, அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.

தொடர்புடைய பதிவுகள்...

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.

share on:facebook

Thursday, March 22, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.


'Genocide' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தேடினால் ஆப்பரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அரசு தான் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆப்ரிக்க நாட்டவர்களை போல் காட்டு வாசிகள் இல்லை. படிப்பு, வியாபாரம், அரசியல் என்று பல துறைகளிலும் இலங்கையில் கோலோச்சினார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாக கடைசியில் முடிந்தது.

ஆரம்பம் முதல் இலங்கை தமிழர் பிரச்னை இந்த அளவிற்கு வளர காரணம்  தமிழக அரசியல் வாதிகளும் இந்திய அரசாங்கமும் தான் என்பது விபரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். தமிழக அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரச்சனையை ஊதி பெருக்கினார்கள் என்றால் இந்திய அரசு முற்றிலும் சுயநல போக்குடன் இந்தியாவின் பூலோக நலனுக்காக ஒரு இனத்திற்கு எதிராக ஆரம்பம் முதல் செயல் பட்டது.

இப்போது இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் உள்ள ஆங்கில நாளிதழ்கள் நடந்து கொள்கின்றன. அதற்க்கு காரணம் சுயநலமும், வியாபார நோக்கமுமும் தான்.

ஒரு காலத்தில் 'தி ஹிந்து' நாளிதழும், அதன் ஆசிரியர் திரு. ராமும் எல்லோராலும் மதிக்கப் பட்டவர்கள். குறிப்பாக திரு. ராம் அவர்கள் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும், பொது நல வாதியாகவும் அடிக்கடி காட்டிக் கொள்வார். ஆனால், ஊர் உலகத்தை பற்றி எல்லாம் எழுதும் அவர் மீதே நில மோசடி வழக்கு உள்ளது. இலங்கையில் நடந்த போரை பற்றி எல்லோரும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் பக்கம் பக்கமாக தனது நாளிதழில், புகைப் படத்துடன் இலங்கை அரசு எவ்வாறு தமிழ் அகதிகளை சிறப்பாக 'கேம்ப்' புகளில் கவனித்துக் கொள்கிறது என்று ஊருக்கு ஒப்பாரி வைத்தார். முள் வேலிக்குள், டெண்டிர்க்குள் அப்பாவி மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஒரு பாராட்டுப் பத்திரம்.


இலங்கை அரசின் விருந்தினராகவே கவனிக்கப் பட்ட திரு. ராமிற்கு இலங்கை அரசை பற்றி புகழ்ந்து எழுதுவதும், அதன் அதிபர் ராஜபக்சேவை நேர்காணல் செய்வதுமையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு இலங்கை அரசு கொடுத்த விருதும், அவரின் பத்திரிக்கையை இலங்கையில் அச்சடித்து விநியோகம் செய்ய அனுமதி அளித்ததும் தான் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் போக்குக்கு அதரவாக நடக்க ஆரம்பித்தார். கேரள மீனவர் ஒருவர் சுடப்பட்டு இறந்தார் என்பதற்காக இத்தாலிய கப்பலை கையகப் படுத்தி கப்பல் ஊழியர்களை கைது செய்து இரு நாட்டு உறவு பாழாய் போகும் அளவிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்க்கு காரணம், இந்த ஆங்கில பத்திரிக்கைகளின் ஊளை தான். ஆனால், தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.


தி.ஹிந்துவிற்கு அடுத்த படியாக, தற்போது இலங்கை தமிழர் நலனுக்கு எதிராக நரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அடுத்த பத்திரிகை ...அது பற்றி அடுத்த பதிவில்...

இலங்கை பிரச்னை பற்றிய வேறு சில பதிவுகள்...

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


share on:facebook

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்பு



ஜெனீவா: ஐநா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டிருந்தது. கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு என்ற குழுவை இலங்கை அரசு நியமித்தது. ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தியே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. தற்போது இந்த தீர்மானம் வெற்றியடைந்திருப்பதால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை சர்வதேச நாடுகள் விதிக்கும். இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதமர்: கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர், இந்நேரத்தில் பதில் அளித்த பிரதமர் இலங்கை எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவை ஆதரிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் . இதன்படி இந்தியா தமிழர்கள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.

தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகள் பட்டியல்: ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், மெக்சிகோ, நைஜிரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ருமேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் உருகுவே.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்த நாடுகள் பட்டியல்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மவுரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் உகாண்டா.

ஓட்டெடுப்பை புறக்கணித்த நாடுகள் பட்டியல்: அங்கோலா, போஸ்ட்வானா, பர்கினோ பாசோ, ஜிபூடி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா மற்றும் செனகல்.

நன்றி: தினமலர்.காம் செய்தி.

share on:facebook

Wednesday, March 21, 2012

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


போர் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ. நாவில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தானில்  ராணுவ பணியில்  இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஒன்றும் அறியாத அப்பாவி பொது மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரின் மீது அமெரிக்க ராணுவ நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவருக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை வழங்க ஏதுவாக பிராசுகூஷன் தரப்பில் தற்போது வழக்கை தயார் செய்து  வருவதாக சமீபத்து செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு அமெரிக்க ராணுவ நீதிமன்றமும் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கியதில்லை என்றாலும் இந்த முறை வழக்கின் தன்மையை கருதி ராணுவ தரப்பில் குற்றம் சாட்டப் பட்ட ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர முயற்சிப்பதாக சொல்லப் படுகிறது.

அதற்க்கு சொல்லப் படும் முக்கிய காரணம், போரில் நேரடியாக சம்பந்தப் படாதவர்கள் அதிலும் சுட்டுக் கொள்ளப் பட்ட பதினாறு பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஆவர். இது மன்னிக்கப் பட முடியாத குற்றம் என்று காரணம் கூறப் படுகிறது.

இந்த செய்தி தான் தற்போது இலங்கையில் ராஜபக்க்ஷே சகோதரர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இல்லையா பின்னே? அப்பாவி மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற ஒருவரே தூக்கு தண்டனையை எதிர்  நோக்கி இருக்கும் சமயத்தில் லட்சக் கணக்கான அப்பாவி பொது மக்கள்  குழந்தைகள், பெரியோர்களை ஈவு இரக்க மின்றி கொலை செய்ய காரணமான   ராஜபக்க்ஷே சகோதரர்களின் நிலைமை என்னாகும்?

காமெடி # 1 
மன்மோகன் சிங்: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது சம்பந்தமாக சப்பை கட்டு கட்டி வரும் நம் இந்திய பிரதமர், தீர்மானத்தின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அது பற்றி ஆராய்ந்து நல்லதொரு முடிவு எடுக்கப் படும் என கூறி உள்ளார். அட ராமா? தீர்மானம் என்ன தபால் கார்டிலா அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. உலகமே  அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொது நம் பிரதமருக்கு மட்டும் அது பற்றி ஒன்னும் தெரியவில்லை. வேறு எது தான் தெரியும் இவருக்கு?

காமெடி # 2:
அ.தி.மு.க., தி.மு.க : இலங்கை தமிழர்கள் மீது திடீர் கரிசனம் காட்டும் அ.தி.மு.க, இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும்  வகையில் பாராளுமன்றத்தில் ஒரு திருத்த தீர்மானம் கொண்டு வந்தது.  இந்த தீர்மானம் வோட்டெடுப்புக்கு விடும் நேரம் தி.மு.க. உறுப்பினர்கள்  அனைவரும் நைசாக வெளி நடப்பு செய்து விட்டார்கள். போர் என்றால் அதில் பொது மக்களும் சாகத் தான் செய்வார்கள் என திருவாய் மலர்ந்த  புரட்சித் தலைவியும், அரை நாளில் உண்ணாவிரதம் இருந்த தமிழின  தலைவர், போர் முடிந்து விட்டது. தூவானம் விட சற்று நாளாகும் என கூறிய  பிறகு தான் அனைத்து தமிழர்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள். 
 
இவர்களை நம்புவதை விட எங்கோ இருக்கும் அமெரிக்கா காரனை  தாராளமாக நம்பலாம்.

போர் குற்றம் பற்றிய காணொளியை இங்கே காணலாம்...


share on:facebook

Wednesday, March 14, 2012

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?



லேசான மனம் படைத்தவர்கள் இதை தயவு செய்து பார்க்க வேண்டாம்...


share on:facebook

Monday, October 17, 2011

பங்கு சந்தை ஊழலும் அமெரிக்க நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பும்.


உலக பணக்காரர்களில் ஒருவரும் ஹெக்டே பன்ட் நிறுவனருமான  இலங்கை தமிழர் திரு. ராஜரத்னத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று  பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது.

விஷயம் இது தான். ஹெக்டே பன்ட் நிறுவனர் ராஜரத்தினம் insider trading எனப்படும் பங்கு வர்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக  சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்.  இது பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.       

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இம்மாதிரி பங்கு வர்த்தக முறைகேடுகளுக்காக வழங்கப்பட்ட அதிகபச்ச தண்டனை இதுதான். இதற்கு முன் இதே போல் ஒருவருக்கு பத்து வருடங்கள்  வழங்கப்பட்டுள்ளது.  ராஜரத்தினத்துக்கு அதிக பச்சமாக இருபத்தி நான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்குமாறு அரசுத்தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்ட போதும், நீதிபதி குறைவாகவே தண்டனை வழங்கி உள்ளார். அதற்க்கான காரணங்கள் இதோ.

திரு. ராஜரத்தினம் அவர்கள் பல்வேறு சமூக உதவிகள் செய்துவந்ததும், செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை  கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்,  மற்றும் இயற்க்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு காலங்களில் பெரும் அளவில் இவர் உதவிக்கரம் நீட்டியதும் சமூக நன்மைக்காக இவர் தொடர்ந்து சேவை செய்து வந்ததும் தான். அத்தோடு, இவரின் உடல் கோளாறுகள் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல், தண்டனை குறைத்ததற்காக சுமார்
10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும், முறைகேடுகளில்  ஈட்டிய சுமார் 53.8 டாலர்களையும் அரசுக்கு திருப்பி செலுத்த தீர்ப்பு அளித்துள்ளார்கள். 

குறைந்தபச்ச தண்டனையாக சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே  தண்டனையாக வழங்க இவருடைய வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்ட போதும், அதை மறுத்து விட்ட நீதிபதிகள், நவம்பர் 28 ம் தேதி வரை  அவருடைய 10 மில்லியன் பங்களாவை விட்டு  எங்கும் போககூடாது 
எனவும் பிறகு  அவர் குறிப்பிட்ட ஜெயிலுக்கு சென்று தன்னை  ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.  
IBM, Google போன்ற மிக பெரிய நிறுவனங்களில் தான் உருவாக்கி வைத்திருந்த தகவல் பெரும் நபர்கள், மற்றும் தன்னுடைய நண்பர்கள், மூலம் சுமார் 57 மில்லியன் டாலர்கள் பங்கு வர்த்தக முறைகேடு மூலம் சம்பாதித்திருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.3  பில்லியன் டாலர்கள்(ஆறாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்).
என்ன இருந்து என்ன பயன். கூடிய விரைவில் சிறையில் அதுவும் பத்து  வருடங்களுக்கு மேல்...ஆசைக்கு அளவில்லை என்றால் இப்படியெல்லாம்  அனுபவிக்க வேண்டியது தான்.   

share on:facebook