Monday, November 8, 2010

ஆளில்லாமல் இயங்கும் கார்




சிறு வயதில் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு சைக்கிள் ஒட்டி பழகும் போது அடிக்கடி கீழே விழுவேன். அப்போது என் அண்ணன் கூறுவார் "நீ என்னைக்கு சைக்கிள் பழகி என்னைக்கு நீயா ஓட்ட போகிறாயோ" என்று.

அதற்கு நான் கூறுவேன், "எனக்கு கார் வாங்கி குடுங்க, உடனே ஒட்டி காட்டுறேன்" என்று. அதெப்படி என்று அவர் கேட்கும் முன்பே என்னுடைய பதில், கார்ல நாலு சக்கரம் இருக்குல்ல அப்புறம் எப்படி அது கீழ விழும். அதனால நான் கீழ விழாமலே ஒட்டிடுவேன்ல? என்று.

அப்படி பார்க்கபோனா ப்ளைட் ஓட்டுவது இன்னும் ஈஸி. எதிரே எந்த வாகனும் வராது. சிக்னல் இல்ல, ஒன் வே இல்ல. படுத்துக்கிட்டே வண்டி ஓட்டலாம். ஆம் அதனால் தான் தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் ராணுவம் மற்றும் உளவு வேலைகளுக்கு ஆளில்லா விமானங்களை உபயோகிக்க தொடங்கி உள்ளது.

சரி விசயத்திற்கு வருவோம். கூடிய சீக்கிரம் ஒட்டுனரில்லா (ஆளில்லா) கார்கள் வரபோகின்றன.

பத்து வருடங்களுக்கு முன் மேலை நாடுகளில் கூட GPS உபயோகம் அவ்வளவாக இல்லை. GPS போன்ற கருவிகள் பற்றி செய்திகள் வந்த போதெல்லாம் அதன் மேல் மக்களுக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவேண்டிய முகவரியை பதிவு செய்தால் கூட, திடீரென்று நாம் திசை மாறி சென்றுவிட்டால் மீண்டும் சரியான திசையை GPS கருவி காட்டுமா? செல்லுமிடத்தை தாண்டி சென்று விட்டால் மீண்டும் திரும்பி வர பாதை காட்டுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.

ஆனால் இப்போது GPS உபயோகிப்பவர்களுக்கு தெரியும், அதனுடைய பயன், முக்கியத்துவம் மற்றும் புத்திசாலித்தனத்தை பற்றி. ஒரு சந்தை மறந்து அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டால் கூட. "அண்ணா திரும்பி மூணாம் சந்துல நுழைந்து பிள்ளையார் கோவில் பக்கமா திரும்பி நேரா போ" என்று கூறி நம் ரூட்டை நேராக்கி விடும். அது மட்டுமா? எங்கெங்கு பெட்ரோல் பன்க் இருக்கு, எங்கு சூடா மசால் வடை (Mc donald's)  கிடைக்கும் என அனைத்து தகவல்களை நாம் செல்லும் இடமெல்லாம் அவ்வப்போது தரவல்ல தீர்க்க தரிசியாக  மாறி உள்ளது.  
தற்போது கூகுல் (Google) நிறுவனம் ஆளில்லாமல் இயங்கும் கார்களை இயக்கி சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகுல் நிறுவனம் ஏற்கனவே சுமார் ஏழு ஆளில்லா கார்களை களத்தில் (ரோடுகளில்) விட்டு தங்களது சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு காரும் சுமார் 1,000 மைல்கள் எந்த விதமான மனித குறுக்கீடும் இல்லாமல் சரியான பாதையில் சரியான சரியாக இலக்கை சென்று அடைந்து உள்ளன.

அதே நேரத்தில் சோதனையின் போது காரினுள் யாரும் இல்லாமல் இல்லை. ஒரு வேலை கார் தானாக இயங்கும் போது தவறு ஏதும் நேரும் பட்சத்தில் விபத்தாகிவிடாமல் தடுக்க உண்மையில் டிரைவர் சீட்டில் ஒருவரும், ஒரு மெக்கானிக் மற்றும் பின் இருக்கையில் ஒருவரும் சோதனை ஓட்டத்தின் போது இருந்திருக்கிறார்கள். இருப்பினும் இது ஒரு மிக பெறும் சாதனையாக கருதப்படுகிறது. அதில் ஒரு கார், சான் பிரான்சிஸ்கோவின்  மிகவும் வளைவு நெளிவு உள்ள லோம்பார்ட் தெரு வழியாக சவாரி செய்துள்ளது.

இம்மாதிரியான கார்கள் உடனே மார்கெட்டுக்கு வர வாய்ப்பிலை என்றாலும் கூட  பிற்காலத்தில் விஞ்சான வளர்ச்சியின் முதிர்ச்சியாக நடைமுறையில் மிகவும் சாத்தியமாகவே தெரிகிறது. தற்போது GPS பயன்பாடு போல்.          

அப்படியே ஆளில்லா கார்கள் இல்லையென்றால் கூட, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித குறுக்கீடுகள் அதிகம் இல்லாத அதே நேரத்தில் மிக நீண்ட தூர பிரயாணங்களில் ஆட்டோ பைலட் மாதிரி செயல் பட கூடிய கார்கள் மிக விரைவில் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது.

அதில் ஒன்று, சமீபத்தில் போர்ட் கம்பெனி தயாரித்துக் கொண்டிருக்கும் கார் வகை. இந்த வகை கார்கள் அதனை சுற்றி நடக்கும் அல்லது தெரியும் விசயங்களை 360 degrees கோணத்தில் படம் பிடிப்பது மட்டுமில்லாமல் அதனை வைத்து கார் ஓட்டுனருக்கு அவ்வப்போது சிக்னல்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதை பற்றி ஆராச்சியாளர்கள் கூறும் போது, குடித்துவிட்டோ, தூக்க கலக்கத்திலோ கார் ஓட்டுபவர்களை காட்டிலும், ரோபோ டிரைவர்கள் மிகவும் பாதுகாப்பானவையே என்று.

அதிலும் ரோட்டில் ஓடும் அனைத்து வாகனங்களும் ரோபோவினால் இயக்கப்படும்போது அவைகளை நெட் வொர்க்கிர்க்குள் கொண்டு வருவது மிகவும் சுலபம் என்றும் கூறுகிறார்கள்.

ஹ்ம்ம். எல்லாம் சாத்தியமே. முயற்சி செய்யும் பட்சத்தில்...
share on:facebook

Friday, November 5, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

share on:facebook

Wednesday, November 3, 2010

போடுங்கம்மா ஒட்டு...

 
தமிழக தேர்தல் திருவிழாவின் போது ஒரு பத்திரிகை நிருபருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்.

நிருபர்: நீங்க யாருக்கு பாட்டி இந்த தேர்தல்ல வோட்டு போட போறீங்க?
பாட்டி: நான் ரெட்டை எல கட்சி. எம். ஜி. ஆருக்கு தான் வோட்டு போடுவேன்.

நிருபர்: ஐயா நீங்க எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
ஐயா: நான் பரம்பரை காங்கிரஸ்காரன். எங்க பரம்பரையே காங்கிரசுக்கு தான் வோட்டு போடும்.

நிருபர்: என்ன சார்? நீங்க இந்த எலெக்சன்ல எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
வாக்காளர்: முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆறாவது முறையா முதல்வர் ஆகணும். அதனால அவருக்கு தான் என் வோட்டு.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடை தேர்தல்களின் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும். இதோ...

Reporter: Hello madame, To whom you are going to vote in this election?
Madame: I am going to vote for the republicans because the unemployment rate is rising and the democrats didn't do anything on that.

Reporter: Hi, Why do you want to vote democrats?
Mr. Voter: Because I don't want our government to spend too much in wars which is affecting our economy in a very bad way.

Reporter: Hi, You said that you are 87 now? Which party you are going to vote in this election.
Old lady: I use to vote for democrats before but now in this election, I am going to elect an republican because I don't want to have any more cuts in Medicare.

ஆக பரம்பரை பரம்பரையா, எனக்கு எம். ஜி. ஆரை பிடிக்கும். நான் எப்பவுமே உதய சூரியன் தான் என்று சொல்லிக் கொண்டிராமல் நாட்டு நலன்களை மையமாக வைத்து என்று நாம் சிந்தித்து வோட்டு போட போகிறோமோ அன்றே நம் நாடு உருப்பட வழி கிடைத்தது போல்தான்.

இனி சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடை தேர்தல்கள் பற்றி சில குறிப்புகள்...

பரபரப்பான அமெரிக்க இடை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்தபடியே குடியரசு கட்சிக்கு சாதகமாகவும் ஜனநாயக கட்சிக்கு சரிவாகவும் அமைந்துள்ளது.

பாபி ஜிந்தாலுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய வம்சாவளி பெண்மணி (Nimrata Randhawa) நிம்ரதா ரன்டவா என்பவர் தெற்கு கரோலினா மாநிலத்திற்கு கவர்னராக (நம் நாட்டில் முதல்மந்திரிக்கு சமம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும் தெற்கு கரோலினா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அரை டஜனுக்கு மேல் இந்திய வம்சாவளியினர் இந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டதால் குடியரசுக் கட்சிக்கு சார்பாக அடித்த சூறாவளி காற்றில் காணாமல் போய்விட்டார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இரு இந்திய வம்சாவளியினர் (Dalip Singh Saund in 1956, and Bobby Jindal before he become as Governor in 2004) சட்டம் இயற்றும் (US House of Representatives ) பதவியில் இருந்துள்ளனர்.

இதனால் எல்லாம் இந்தியாவிற்கோ அல்லது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கோ ஏதும் நன்மை ஏற்பட போவதாய் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நல்ல ஆரம்பம். வாழ்க இந்தியர்கள் - வெளி நாடுகளில்.  

- ஆதிமனிதன்.
share on:facebook

Friday, October 29, 2010

அன்னமிட்ட கை


ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை. இன்னும் என்ன சொல்லி வேண்டுமானாலும் இவரை அழைக்கலாம். ரோட்டில் கலைந்த முடியும், அழுக்கேறிய உடலும் மன நலம் குன்றியவராகவும் ஒருவரை கண்டால் சராசரி மனிதனாய் நகர்ந்து போகும் இந்த உலகில், அவர்களை ஒவ்வொரு நாளும் தேடி சென்று உணவளிப்பது மட்டுமல்லாமல், அதை உணவு என்று கூட தெரியாமல் தட்டிவிடவும் தள்ளிவைப்பவர்களுக்கும் தன் கையாலேயே ஊட்டியும் விடும் இவர்  ஆயிரத்தில் ஒருவன் அல்ல லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம், பின்னல் வரும் காரணங்களுக்காக.

நாராயணன் கிருஷ்ணன்(29) - இந்த பெயர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப் படுகிறது. காரணம் உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ...

நாராயணன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரர் (Chief Chef). அதுமட்டுமில்லாமல் தன் தொழிலில் பல பதக்கங்களை குவித்தவர். Swiss நாட்டில் தனக்கு கிடைத்த வேலையில் சேருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவர் அங்கு பிளாட்பாரம் ஓரத்தில் புத்தி பேதலித்த பெரியவர் ஒருவர் தன் மலத்தையே தான் எடுத்து தின்னும் அவலத்தை நேரில் கண்ட போது அதிர்ச்சியானார்(இதை எழுதும்போதே எனக்கு உமட்டல் வருகிறது என்பதை உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்).

என்ன நினைத்தாரோ, ரயில் பிடித்து ஊருக்கு சென்றவர் திரும்பவும் Swiss நாட்டுக்கு செல்லவேயில்லை. இனி தன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இம்மாதிரி மனிதர்களுக்கு உணவளிப்பது ஒன்றே என்ற முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து (2003 முதல்) இன்றுவரை பன்னிரண்டு லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை தானே (தனது அக்சயா தொண்டு நிறுவனத்தின் மூலம்) சமைத்து பொட்டலம் கட்டி அதை ஒரு வேனில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக தெரு தெருவாக மனநலம் குன்றியவர்கள் வயதானவர்கள் என எல்லோருக்கும் கொடுத்து உதவுகிறார்.

தற்போது இவரின் இந்த சேவையை பாராட்டி அமெரிக்க போன்ற நாடுகளில் பெருமளவு பார்க்கப்படும் CNN
தொலைக்காட்சி, தனி மனித சேவையில் உலகின் தலை சிறந்த மனிதரை (உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கொண்டுவரும் - “everyday individuals who are changing the world”)  தேர்வு செய்ய அமைத்த கமிட்டி பரிந்துரைத்த 10, 000 நபர்களில் இருந்து முதல் பத்து பேரில் ஒருவராக நாராயணனை உலகில் 100 க்கு மேலான நாடுகளில் உள்ள CNN பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நவம்பர் 25 தேதி ஒரு விழா எடுத்து கவரவிக்கப்போகிறது CNN. அத்துடன் $ 25,000 பணமுடிப்பும் அளிக்கிறது. அதே நேரத்தில் தலை சிறந்த பத்து பேரில் ஒருவரை online voting மூலம் தேர்ந்தெடுத்து அவரை "CNN - Hero of the year" ஆக அறிவிக்கிறது. அப்படி அறிவிக்கப்படுபவர்க்கு 100, 000 அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பாக அளிக்கிறது.

நாராயணனின் தற்போதைய ஒரே கவலை, தங்களுக்கு கிடைக்கும் உதவிகள் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 22 நாட்களுக்கு மட்டும் தான் இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கு உணவு அழிக்க முடிகிறது.

என்னுடைய ஒரே வேண்டுகோள் உங்களுக்கெல்லாம் என்னவென்றால், நம்மால் இந்தளவு ஒரு தியாக சிந்தனையுடன் வாழ்கையை அர்பணிக்க முடியாவிட்டாலும், பெரிய அளவில் பண உதவிகள் செய்ய முடியாவிட்டாலும் கூட கீழே உள்ள சுட்டி மூலம் நமது நாராயணனை தேர்வு செய்தால் அவர் CNN அறிவிக்கப்போகும் "Hero of the Year" ஆக தேர்வாகிவிட்டால் அவரின் தொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் தெரிவது மட்டுமில்லாமல் அவரின் இந்த பனி இன்னும் சிறப்பாக தொடர நாம் நமது பங்கை அளித்த மன நிறைவாவது கிடைக்கும்.

எனக்கு கீழே ஓட்டளிக்க நான் கேட்கவில்லை. ஆனால் இங்கு கிளிக் செய்து நாராயணனுக்கு ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள். நன்றி.

மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில் அறிய : இங்கே சொடுக்கவும்.

படம் நன்றி: The Hindu      
share on:facebook

Saturday, October 23, 2010

சும்மா அதிருதல!



சும்மா அதிருதல!

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள். 
வாரத்திற்கு குறைந்தது 250 முதல் 300 பதிவுகள்.
மாதத்திற்கு 10, 00, 000 ஹிட்டுகள்.
சென்ற வருடத்தில் ஒரே நாளில் மட்டும் 10, 00, 000 ஹிட்டுகள்.

என்ன சார் வாய பொளக்குறீங்க. அட போங்க சார். மாசத்திற்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க தடுங்கினத்தம் போடறேன். இதல்லாம் Andrew Sullivan அவர்களின் சாதனைகள்.

பதிவுலகம், இணையத்தளம் என எல்லோரும் உபயோகப்படுத்த துவங்காத காலக்கட்டம் அது.  The Daily Dish என்று அவர் பிளாக் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. நேற்று அவருடைய பிளாக்கில் என்ன எழுதினார் என்று அவருக்கே ஞாபகம் இருப்பதில்லை. 

தனது 27 வது வயதில்  The New Republic என்ற நாளிதழில் ஒரு இளைய பத்திரிகையாளராக சேர்ந்த ஆண்டரு தான் எழுதும் விசயங்களை எல்லோரும் படிக்கும் வகையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தன்னுடைய techie நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தன்னுடைய ஆசையை வெளியிட அவரும் இவருக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் பதிந்து கொண்டிருந்தார். சில காலம் கழித்து என்ன நினைத்தாரோ தன் பத்திரிக்கை நண்பரிடம் எனக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கிறது. பிளாக்கர் பிளாகிங் என புதிதாக ஒன்று வந்துள்ளது. அதில் எப்படி பதிய வேண்டும் என சொல்லித் தருகிறேன். நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் ஒரு வலைதளமாக The Daily Dish மாறி உள்ளது.

தான் எழுதும் கட்டுரை மற்றும் எதுவாக இருந்தாலும் அதை படிக்கும் வாசகர்கள் அதற்கு  உடனே கமென்ட்/விமர்சனம் போட்டு அதை தானும் படிக்கும் வாய்ப்பை இந்த வலைதளம்  வழங்கியதை பார்த்து வியந்து போன Sullivan அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இனி எதிர்காலத்தில் பத்திரிக்கைகளை விட இது தான் பிரபலமாக போகின்றன என அறிந்து கொண்டார். அன்று முதல் இன்று வரை அவரின் வலைதளத்தில் எழுதியதை நிறுத்தவில்லை. வருடத்திற்கு இரு வார விடுமுறை எடுத்துக் கொள்வதை தவிர. 

நாமெல்லாம் நாளுக்கு ஹூஹூம் வாரத்திற்கு ஒரு பதிவு போடவே தினறிக்கொண்டு இருக்கும் போது,  
வார நாட்களிலும், வார இறுதிகளிலும் குறைந்தது இருபது நிமிடத்துக்கு ஒரு முறை தன் பிளாக்கில் எழுதும் இவர், உண்மையில் அவரின் வலைத்தளத்தில் உருவாகும் traffic மற்றும் update களை சமாளிக்க முடியாமல் தினமும் திணறுகிறார்.

ஒரு பதிவை போட்டுவிட்டு ஒரு மணி நேரத்துக்கொருமுறை ஓபன் செய்து ஏதும் கமென்ட் வந்திருக்கான்னு நாம பார்துக்கிட்டுருக்கோம். இவரோ
தற்போது நான்கு பேர் கொண்ட சிறு குழுவை அமர்த்தி தன்னுடைய பிளாக்கை பராமரித்துக்கொண்டலும் இவருக்கு பின் 
என்னாகும் என்று இவரின் follower ஒருவரிடம் கேட்டால் "If Andrew dies, it dies" என எழுதி இருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் ஆர்வம் காட்டி எழுதி வரும் Sullivan தான் ஒரு அரசியல் அநாதை என்கிறார்.

அப்பாடி, Sullivan புண்ணியத்தில் இன்று நான் ஒரு பதிவு போட்டாகிவிட்டது.
share on:facebook

Sunday, October 17, 2010

கதை அல்ல நிஜம்...

இன்று காலை எழுந்ததும் அநேகமாக எல்லோரும் அவர்களின் குல தெய்வங்களை நிச்சயம் கும்பிட்டிருப்பார்கள். இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் சூலூர்பேட்டா என்கிற ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இந்தியாவின் ஏவுகணை ஏவும் தளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக நிலவிற்கு மனிதரில்லாத ஒரு உயரினத்தை ஏவுகணையில் வைத்து  அனுப்ப எல்லாம் தயார் நிலையில் உள்ளது. சரியாக காலை 10:10 விண்ணில் சீறிப்பாய எல்லா ஏற்பாடுகளும் தயார். மற்ற எல்லோரைவிடவும் எனக்கு டென்ஷன் அதிகம் இருப்பதில் ஆச்சிர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் நான் தான் அந்த பிராஜக்டின் தலைமை பொறியாளர்.


நேரம் 10:00 மணி. ஏவு தளத்தில் எல்லாவற்றையும் ஒரு முறை சுற்றி வந்து, தலைமை விஞ்சாநியிடம் என்ன சார் எல்லாம் ரெடி தானே 10:09 கவுன்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல என கேட்டேன். கண்டிப்பாக சார். எந்த பிரச்னையும் இல்ல. எல்லாம் சரியாய் போய்கிட்டு இருக்கு என்றார். வெரி குட் என்றபடியே எல்லா விஞ்சாநிகளும் அமர்திருந்த வட்ட வரிசையில் நாடு நாயமாக சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்து எதிரே மிக பெரிய திரையில் வட்டமும் புள்ளியுமாய் தெரியும் பிரபஞ்சத்தின் வரைபடங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஓரிரு மணித்துளிகளில் தலைமை கண்காணிப்பாளரின் அறிவிப்பை தொடர்ந்து ஏவுகணை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. 10.. 9.. 8.. 7.. 6.. 5.. 4.. 3.. 2.. 1.. 0 FIRE என்ற அடுத்த நிமிடம் எல்லோரும் சற்று அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தார்கள். ஏவுகணையின் அடியில் வெளியான நெருப்பிற்கும் அதனுடைய சூட்டிற்கும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் ஏவுகணை மேலே எழும்பவேயில்லை. ஒரு கணத்தில் அனைவரின் முகமும் சுண்டி ஒருவரை ஒருவர் ஒரு வித இலாமை பார்வையுடன் பார்த்துக்கொண்டனர். ஏன், எப்படி, என்ன ஆச்சு...எங்கும் கேள்விகள். சரியான பதில் தான் இல்லை.
 
கவலை தோய்ந்த முகத்துடன் எதிரில் தெரிந்த திரையையும், ஒருவருக்கொருவர் குழுமி குழுமி பேசிக்கொள்வதையும் பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றுகொண்டிருந்த பொழுதுதான் சற்று கார 
சாரமான சத்தமும் யாரோ யாரையோ அதட்டும் சத்தமும் கேட்டு அங்கு என்ன நடக்கிறது என அறியும் பொருட்டு எனது இருக்கையை விட்டு எழுந்து அங்கு சென்றேன். 
 
என்ன சார்? என்ன இங்கு சத்தம். என்ன நடக்கிறது இங்கே?
 
சார் நாம்ப எல்லோரும் உங்களையும் சேர்த்து ஏவுகணை கிளம்பாததற்கு என்ன காரணம்னு முழிச்சிக்கிட்டு இருக்கோம். ஒன்னுமே புரியலை. இவரு நம்ம டிபார்ட்மெண்ட சுத்தம் பண்றவரு. இவரு ஏவுகணை கிளம்ப ஐடியா சொல்றாராம். கேளுங்க சார் ஜோக்க என்று ஒரு பொறியாளர் கூறியவுடன் அங்கிருந்த நிலைமையையும் மறந்து எல்லோரும் சிரித்து விட்டார்கள். 
 
சார் எல்லோரும் சற்று அமைதியா இருக்கிங்களா? யாரையும் கொறச்சி எடை போட கூடாது. 
 
ஹல்லோ என்னோட என் ஆபிஸ்க்கு வாங்க என்றபடியே அவரை அழைத்துக்கொண்டு என் அறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன்.     
 
இப்ப சொல்லுங்க மிஸ்டர் ...
 
சார் என் பேரு பெருமாள்,...
 
ஓகே பெருமாள். இப்ப நீங்க இங்க என்ன பண்றீங்க ஏதுன்லாம் கேக்க எனக்கு டயம் கிடையாது. சொல்லுங்க எப்படி அந்த ஏவுகணையை பறக்க வைக்கலாம்?
 
சார் அது வந்து....
-------------------------
-------------
------
 
என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு? அப்படி செஞ்சா ராக்கெட் பரந்துடுமா?
 
கண்டிப்பா சார். ஒரு வாட்டி ட்ரை தான் பண்ணுங்களேன்.
 
இறுதியாக மிஸ்டர் பெருமாள் கூறியபடி ஒரு காரியத்தை செய்தவுடன் ராகெட் எல்லோரும் அண்ணாந்து பார்பதற்குள் வின்னிர்க்கே  சென்று மறைந்து விட்டது.
 
அப்படி என்ன தான் மிஸ்டர் பெருமாள் ஐடியா சொல்லி இருப்பார். முடிந்தால்/தெரிந்தால் பின்நூட்டத்தில் போடுங்களேன்.

                                               **************************

சொல்லுங்க மிஸ்டர் பெருமாள். எங்களால நம்பவே முடியல. நீங்க சொன்னபடியே ராகெட்ட கீழ கொஞ்சம் சாய்த்து  மேல தூக்கினவுடன் உடனே  மேலே கிளம்பிடுச்சே!

நாங்க எல்லோரும் என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தப்ப உங்களுக்கு மட்டும் எப்படி இந்த ஐடியா வந்துச்சு?

சார். எங்க கிராமத்துல எங்க ஸ்கூல் வாத்தியார் கிட்ட மட்டும் தான் ஸ்கூட்டர் ஒண்ணு இருந்துச்சு. அத அவர் எப்ப ஸ்டார்ட் செஞ்சாலும் ஸ்டார்ட் ஆகாது. உடனே அத கீழ ஒருபுறமா சாய்த்து  பிறகு நிமிர்த்தி ஒரு உதை விட்டார்னா உடனே வண்டி கிளம்பிடும். அதே டெக்னிக்க  தான் நான் இங்கயும் உங்ககிட்ட சொன்னேன். அது வொர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான்.

                                                   **************************



ஐயோ... அடிக்க வரீங்களா. உடு ஜூட். 

அப்புறம் இது நிஜம் அல்ல கதைதான். மிகச் சரியா கணிச்ச Anonymous க்கு வாழ்த்துக்கள். 

//Anonymous said... ஒரு 45 டிகிரி சாய்த்து கொஞ்ச நேரம் கழித்து அப்பாலிக்கா கெளப்பு சாமி.....ஜோரா கெளம்பும்...//
share on:facebook

Thursday, October 14, 2010

எல்லோர் கையிலும் A. K. 47. . .

கணவன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு வீட்டில் நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனை மிரட்டுகிறான். மரியாதையாக பீரோவை திறந்து அதிலுள்ள நகை பணம் எல்லாவற்றையும் எடுத்து கொடு. இல்லைனா உன் மனைவியின் சங்கை அறுத்து விடுவேன் என பயமுறுத்துகிறான். கணவனுக்கு வேறு வழி தெரியவில்லை. சரி நான் எல்லாத்தையும் எடுத்து கொடுத்துடுறேன். பீரோவோட சாவி மாடியில இருக்கு. நான் போய் அத எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் என் மனைவிய ஒண்ணும் பண்ணிடாதனு கெஞ்சிக் கொண்டே மாடிப்படிகளை நோக்கி ஓடினார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவரை பார்த்த திருடனுக்கு தேள் கொட்டியதை விட அதிகமாக உடல் உதறியது. ஐயோ சாமி. என்ன விட்டுடுங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். நா ஓடிடுறேன் என கத்திக்கொண்டே திரும்பி பார்க்காமல் ஓடினான்.

கைல கத்தி வச்சுக்கிட்டு மிரட்டியவன் ஓடியதற்கு காரணம், திரும்பி வந்தவரின் கையில் இருந்த A.K. 47 தான் காரணம். அதெப்படி சாதாரணமான ஒருத்தவரிடம் A.K. 47 இருக்கும்னு நீங்க கேக்கறது காதுல விழுது. நான் சொன்ன சம்பவம் ரசியாவில நடந்தது. அங்க நடந்திருந்தா கூட அந்த வீட்டுகாரர் வச்சிருந்தது நிஜ A.K. 47 அல்ல. அது ஒரு inflatable fake A.K. 47. கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவிற்கு உள்ள ஒரு சிறிய பலூன் போன்ற பொருளில் காற்றை நிரப்பினால் நிஜ A.K. 47 போலவே அது inflate ஆகி தோற்றமளிக்கும்.

மேலே நீங்கள் படித்தது inflatable weaponary பற்றி நானே உருவாக்கிய கதை. இனி வருவது அனைத்தும் உண்மை. சந்தேகமிருந்தால் கீழே உள்ள u-tube லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

ரசியாவில் உள்ள ஒரு கம்பெனி artificial/fake inflatable weaponary அதாவது நிஜ ஆயுதங்கள் போலவே தோற்றமளிக்கும் டம்மி ஆயுதங்களை அதுவும் ஒரு பையில் வைத்து அடக்கி கொள்ளும் அளவிற்கு ஆன பிளாஸ்டிக் பேக்கை காற்றடித்தால் ஒரு மிக பெரிய பீரங்கி வண்டியாக மாறும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இது என்ன பெரிய விஷயமான்னு நீங்க நினைக்கலாம். அனால் நீங்கள் நான் மட்டுமல்ல எதிரி நாட்டு உளவு விமானங்கள் மற்றும் ரேடார்கள் ஸ்கேன் பண்ணும்போது கூட இது ஒரிஜினல் பீரங்கி டாங்கர்கள் போல தோற்றமளிக்கும் வகையில் அதனுடைய நிறம் மற்றும் குணத்தை அமைத்திருக்கிறார்கள். எதிரி நாட்டு ரேடார்கள் லேசர் ஸ்கேன் செய்து உளவு பார்க்கும் போது கூட ஒரிஜினல் பீஸ் போலவே ரிப்போர்ட் வரவழைக்கும் வகையில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

இதனால் என்ன பலன் என்று நீங்கள் கேக்கலாம். ஒரு பீரங்கி வாங்கும் காசிற்கு ஓராயிரம் inflatable fake பேரங்கிகளை வாங்கி பாகிஸ்தான் பார்டரில் நிறுத்தினால் எட்டி பார்க்க கூட அவர்கள் பயப்பிடுவார்கள மாட்டார்களா? சரி இது மாதிரி தொழில் நுட்பம் சீக்கிரத்தில் எல்லா நாட்டிற்கும் வந்துவிடுமே என்றால் யாராலும் எது நிஜம் எது பொம்மை பீரங்கி என கண்டு பிடிக்க முடியாத போது அது பொய்னு தைரியமா சண்டைக்கு போய் அது உண்மையான பீரங்கியா போயடுச்சுனா அப்புறம் நஷ்டம் யாருக்கு?

பொய்யான பீரங்கிகள் மட்டுமல்ல, பொய்யான கண்காணிப்பு டவர்கள், ரேடார்கள் பீரங்கி மற்றும் பீரங்கி வண்டிகள் என எல்லாத்தையும் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையில் அது எப்படி இருக்கும் என பார்க்கவேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்.

நன்றி YouTube.
share on:facebook